நண்பனின் காதலி – 8 58

பின் மணிக்கு பெண் குழந்தை பிறந்தததாக எல்லாருக்கும் ஸ்வீட் ஆபிஸ்ல் இருப்பவர்கள் எல்லாருக்கும் கொடுத்து விட்டு
விக்கி அவன் கேபினுக்கு போனான் ஆனால் அவனால் வேலை பார்க்க முடியவில்லை அவனுக்கு வள்ளி பிரசவ வலியில் கத்தியது கூட பெரிதாக தெரியவில்லை .ஆனால் வள்ளியும் மணியும் குழந்தை பிறந்த பின் ஒரு நேசத்தோடும் பாசத்தோடும் காதலோடும் கொஞ்சி கொண்டும் ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக பேசியதையும் நினைத்து அவனுக்கு ஒரு ஏக்கம் ஏற்பட்டது அப்புறம் குழந்தையை வேற கிட்ட இருந்து பார்த்தது இதலாம் அவனால் போருக்க முடியவில்லை .
அவன் ஆபிஸ் முடிந்ததும் வேகமாக வீட்டிற்கு போக இருந்த வருணை கூப்பிட்டான் .அவன் வந்தான் பாஸ் நீங்க எதுக்கு கூப்பிடிரிங்கன்னு தெரியும் நீங்க எதுவும் பேச வேணாம் உங்கள ஏங்க கூப்பிட்டு போனும்னு எனக்கு தெரியும் வாங்க என் கூட என்றான்

எங்கடா போறோம் என கேட்டான் விக்கி .பாருக்கு பாஸ் என்றான் .என்னது பாருக்கா என்று சிறிது நேரம் யோசித்தான் .

ஏன் என்றால் சுவாதி இருக்கும் வரை குடிக்கவே கூடாது என்று முடிவு செய்து இருந்தான் ,அதனால் கடந்த 3 மாதங்களாக அவன் சுத்தமாக சாராயம் ஒரு துளி கூட எடுக்க வில்லை .எப்போதாவது டேவிட் குடிக்க சொன்னாலும் எதாச்சும் சொல்லி சமாளிச்சு குடிக்காம விட்டுடுவான் .
சிகெரட் மட்டும் வேற வழி இல்லாம அடிப்பான் .இருந்தாலும் இன்னைக்கு குடிக்கனும்னு அவனே நினைச்சான் காரணம் வள்ளிக்கும் மணிக்கும் இருக்க ஒரு வாழ்க்கை நமக்கு இல்லன்னு ஒரு ஏக்கம் .பாஸ் என்ன யோசிக்கிறிங்க என்ன சரக்கு அடிப்பமோ வேணாமானு எனக்கு கூட ஓகே இன்னைக்கு சரக்கு அடிகாட்டி பரவல ஆனா உங்களுக்கு கண்டிப்பா இன்னைக்கு அடிக்கணும் போல இருக்குமே என்றான் .
எப்படிடா உனக்கு தெரியும் என கேட்டான் .என்ன பாஸ் இன்னைக்கு நீங்க போன இடம் அப்படி என்றான் ..அப்படி எங்கடா போனேன் என்றான் .என்ன பாஸ் வள்ளி மணி குழந்தை அழகா இருந்துச்சா என்றான் .ம்ம் இருந்துச்சு என்றான் விக்கி .அத பாத்த உடனே உங்களுக்கு ஒரு மாதிரி இருந்து இருக்குமே என்றான் .விக்கி ஒன்னும் சொல்லமால் இருந்தான் .சொல்லுங்க பாஸ் என்றான் .ஆமா இருந்துச்சு என்றான் விக்கி .நம்மளும் கல்யாணம் முடிச்சு இதே மாதிரி குழந்தை பேரனும் போல இருந்து இருக்குமே என்றான் .
அட ஆமாடா சரி விடு எனக்கு அத நினைச்சாலே மண்ட வலிக்குது வா முதல சரக்கு அடிப்போம் என்றான் விக்கி .பின் இருவரும் பாருக்கு போயி சரக்கு அடித்தனர் .விக்கி நிறைய குடித்தான் பின் சொன்னான் டேய் வருண் எல்லாம் இருந்தும் இல்லாத மாதிரி உனக்கு தொனி இருக்கா என கேட்டான் விக்கி .என்ன பாஸ் சொல்றிங்க ஒன்னும் புரியல என்றான் வருண் .உனக்கு புரியாது ஏன்னா இன்னும் நீ அந்த நிலைமைக்கு வரல என்றான் .
பாஸ் உங்க பீலிங் புரியுது எனக்கும் கூட இதே மாதிரி என் பிரண்ட்ஸ் குழந்தை பெத்துகிட்டப்ப இப்படி தோணிருக்கு என்றான் .ஒ அது இல்லடா இது வேற என்றான் .என்ன பாஸ் அது சொல்லுங்க என்றான் வருண் .அது அது அது என்னமோடா தெரியல என்று போதையில் உளறினான் விக்கி ,சரி விடுங்க பாஸ் உங்க கதைய நீங்க சொல்ல வேணாம் என் கதைய நான் சொல்றேன் .என் ஆளுக்கு கல்யாணம் ஆகிடுச்சு என்றான் வருண் .

1 Comment

  1. Enna dude last 3,4 page repeat aaguthu.

Comments are closed.