நண்பனின் காதலி – 8 58

ஹலோ ஹெலோ என்று வெளியே ரூம் கதவை சுவாதி தட்ட ரொம்ப சிரமபட்டு எழுந்து கதவை திறந்தான் .அங்கு சுவாதி அவனுக்கு காப்பி கப்போடு நின்று கொண்டு இருந்தாள் .இந்தா காப்பி என்றாள் .விக்கி அதை அங்க வை இந்த வரேன் என்று சொல்லி கொண்டு சட்டையை போட்டு விட்டு வந்தான் .ஹே நைட் என்ன நடந்துச்சு நான் எப்படி வந்தேன் என கேட்டான் .ஒ அதுவா யாரோ ஒரு பையன் உன் ஆபிஸ்ல வேலை பாக்கிறவன் கொண்டு வந்து போட்டான் என்றாள் .
யாரு வருணா என்றான் .அது எனக்கு தெரில என்றாள் .ம்ம் உன்னையே பாத்தானா என்றான் விக்கி .ம்ம் பாத்தான் என்றாள் .என்ன எதுவும் சொன்னானா என கேட்டான் .ஆமா நீங்க யாருன்னு கேட்டான் என்றாள் சுவாதி .ஓகே நீ என்ன சொன்ன என்றான் விக்கி .நான் உன் வப்பாட்டின்னு சொன்னேன் என்று சுவாதி அசால்ட்டாக சொல்லவும் வாட் என்று அதிர்ச்சியோடு கேட்டான் .
ஏன் எதுக்கு அப்படி சொன்ன என்றான் விக்கி .ம்ம் அவன் அந்நேரத்துல சும்மா நீங்க யாரு நீங்க யாருன்னு கேட்டு தொல்லை பண்ணான் அதான் வேற வழி இல்லாம அப்படி சொன்னேன் என்றாள் .ஏன் உனக்கு சொல்றதுக்கு வேற எதுவுமே கிடைக்கலையா என்றான் .அந்நேரம் வேற எதுவும் தோனல என்றாள் .ஏன் அப்படி சொன்ன என்றான் .வேணும்னா உன் பொண்டாட்டிட்டுன்னு சொல்லவா என்றாள் இளக்காரமாக .
ஏன் சொல்ல வேண்டியது தான அப்படித்தான ஆஸ்பத்திரில எல்லாம் சொல்ற ஏதோ அது என்ன மேரேஜ் சார்டிபிகட் அந்த கன்றாவில எல்லாம் அப்படி போட போற என்றான் விக்கி .வேணும்னா வேற ஆளா பாத்துக்கிராவா என்று அவள் கேட்க விக்கிக்கு கோபம் அதிகமானது இருந்தாலும் டாக்டர் சொன்னதை மனதில் வைத்து கோபத்தை கட்டுப்படுத்தி கொண்டு என்னமும் பண்ணு என்று சொல்லி விட்டு கடுப்போடு வேகமாக ரூமுக்குள் போனான் .
அங்கு பாத் ரூமில் இவன் சட்டையும் பேண்டும் வாந்தியாக இருப்பதை பார்த்து வெளியே மீண்டும் வந்தான் நான் நைட் வாந்தி எடுத்தேனா என்றான் .ஆமா என்றாள் .அப்ப என்னைய ரூம்ல கொண்டு போயி போட்டது அப்புறம் என் சட்டை பேன்ட எல்லாம் கழட்டி துடைச்சு விட்டது நீ தானா என கேட்டான் .நான் எதுக்கு உனக்கு துடைச்சு விடுறேன் அந்த பையன் தான் உனக்கு துடைச்சு விட்டது எல்லாம் என்றாள் .
ஒ அப்படியா நிஜமாவா என கேட்டான் .ஆமா நீ வரும் போதே வாந்தி எடுத்து தான் வந்த அதான் அவன துடைச்சு இருக்கணும் என்றாள். ஓகே நான் வெளியே போயிட்டு வரேன் என்று சொல்லி விட்டு போனான் .சரி இந்த வருண் பையல பிடிப்போம் என்று நினைத்து கொண்டு வெளியே போனான் .பின் மணியிடம் இருந்து போன் வந்தது .என்னடா என்றான் ,இன்னைக்கு சனி கிழமை ஆபிஸ் இருக்கா இல்ல லீவா என்றான் .
இல்லடா 4 வது சனி கிழமை அதுனால லீவ் என்றான் விக்கி ..ஓகே அப்ப நம்ம பிரண்ட்ஸ் வட்டாரம் எல்லாம் குழந்தைய பாக்க ஆஸ்பத்திரிக்கு வரணும்னு சொல்றாங்க ஆனா நாங்க இப்ப வீட்டுக்கு போயிடுவோம் என்றான் மணி .ஏண்டா அதுக்குள்ளே போறீங்க என்றான் .இல்லடா சுக பிரசவம்நால வீட்டுக்கு போலாம்னு சொல்லிட்டாங்க இப்ப கிளம்பிகிட்டு இருக்கோம் என்றான் .ம்ம் குட் கார் எதுவும் வேணுமா கொண்டு வரவா என கேட்டான் விக்கி .
இல்லடா எல்லாரும் போற மாதிரி சுமோ வர சொல்லி இருக்கேன் அதுல போயி இருக்கோம் இப்ப அது இல்ல நீ எல்லாத்தையும் வீட்டுக்கு வர சொல்லு அப்புறம் நீயும் வா நம்ம ஸ்டாப்கல தனியா என்னால சமாளிக்க முடியாது அதுனால நீயும் வா என்றான் .நம்ம ஸ்டாப்க யாருக்கும் நான் பொம்பள பொறுக்கினால பிடிக்காதே என்றான் .அத அப்புறம் பாத்துக்குவோம் நீ வா முதல சரி நேத்து சாய்ங்காலம் ஏங்க போன என்றான் மணி .
வேற ஏங்க பாருக்கு சரக்கு அடிக்க என்றான் .டேய் ஏண்டா என்றான் மணி .டேய் எல்லாம் உனக்கு குழந்தை பிறந்தத செளிபெரெட் பண்ணத்தான் சரக்கு அடிச்சோம் என்றான் .சரி நீ ஒரு 4 மணி போல வா என்றான் .பின் விக்கி கடுப்பில் காரை எடுத்து கொண்டு கண்ட இடங்களில் சுற்றி விட்டு 3 மணியை போல் மணி வீட்டிற்கு சென்றனர் .அங்கு எல்லாம் அவன் ஆபிஸ் ஸ்டாப்க வந்து மணி குழந்தையை பார்த்து கொண்டு இருந்தனர் .

1 Comment

  1. Enna dude last 3,4 page repeat aaguthu.

Comments are closed.