நண்பனின் காதலி – 8 57

எப்படா சொல்லவே இல்ல என்றான் விக்கி .நீங்க எங்க இந்த 3 மாசமா ஒழுங்காவே பேச மாட்டிங்கிரிங்க அப்புறம் எப்படி சொல்ல என்றான் .ஓகே சாரிடா சொல்லு என்றான் விக்கி .என்னத்த சொல்ல அவ வீட்ல கல்யாணம் பிக்ஸ் பண்ணி அவளுக்கு கல்யாணம் முடிச்சு வச்சுட்டாங்க அப்புறம் என்ன பண்ண என்றான் .அவ என்னடா சொன்னா என கேட்டான் விக்கி .அவ என்னத்த சொல்லுவா எங்க அப்பா தான் முக்கியம் என்னைய மறந்துடுன்னு சொல்லிட்டு போயிட்டா என்றான் .
அது என்னடா உலகம் முழுக்க இப்படி ஒரு டைப் பொண்ணுக இருக்காளுக போல என கேட்டான் .அவள சொல்லி தப்பு இல்ல நான் தான் அவளுக்கு உண்மையா நடந்துக்கிரள எப்பயுமே அவ அங்கிட்டு போனா இந்த பக்கம் பார்டி பப்ன்னு போயி ஏவ கூடயாச்சும் படுத்ததுக்கு தான் எனக்கு அந்த கடவுள் இப்படி ஒரு தண்டனையே கொடுத்துட்டார் போல என்று சொல்லி அழுதான் .விளங்கும் இவன் நமக்கு சமாதானம் சொல்வான்னு பாத்தா இப்ப இவன் அழுது இவனுக்கு நாம சமாதனம் சொல்லணும் போல என்று நினைத்து கொண்டு சரி அழுகதா இன்னும் கொஞ்சம் சரக்கு அடி என்றான் .
அப்புறம் இந்த பொண்ணுகள ஏண்டா உலகத்துல கடவுள் படைச்சாரு என்றான் .தெரியலையே பாஸ் என்றான் .எனக்கும் தெரியல ஆனா நம்மள கஸ்டபடுத்த மட்டும் படைச்சு இருக்காருன்னு தெரியும் என்றான் விக்கி .அது உண்மை பாஸ் என்றான் வருண் .அப்புறம் பாஸ் உங்க பிரண்ட்ஸ் எல்லாரும் கல்யாணம் முடிச்சுட்டாங்க நீங்க எப்ப கல்யாணம் முடிச்சு மணி அண்ணே மாதிரி குழந்தை பெத்துக்க போறீங்க என கேட்டான் வருண் .
நான் கல்யாணம் எல்லாம் பண்ண மாட்டேன் ஆனா எனக்கு மூனு மாசத்துல குழந்தை பிறக்க போகுது என்றான் .போங்க பாஸ் சரக்கு அடிச்சதால என்ன என்னமோ போதைலே உலருரிங்க என்றான் வருண் .அது என்னமோ நான் சொல்றத சொல்லிட்டேன் நீ நம்புனா நம்பு இல்லாட்டி போ என்றான் விக்க .சரி பாஸ் அத விடுங்க நீங்க கல்யாணம் சீக்கிரம் பண்ணுங்க என்றான் வருண் .எதுக்குடா என்றான் விக்கி .
ஏன்னா உங்களுக்கு வயசு ஆகிடுச்சு என்றான் வருண் .ஏன் நீ கல்யாணம் பண்ண வேண்டியது தானே உன் வயசு என்ன என்றான் .எனக்கு 26 தான் காலேஜ் முடிச்சதும் கேம்பஸ்ல செலக்ட் ஆகிட்டேன் உங்க வயசு என்ன என்றான் வருண் .ம்ம் 31 இல்ல இந்த ஜனவரி இல்ல டிசம்பர் இல்ல என் பிறந்த நாள் மறந்து போச்சு என்று உளறினான் ,சரி எது எப்படியோ உங்களுக்கு வயசு ஆகிடுச்சு சீக்கிரம் கல்யாணம் முடிங்க என்றான் .
எனக்கு ஒரு மயிரும் வேணாம் பட்டது எல்லாம் போதும் நீ இன்னும் ரெண்டு பேக் ஆர்டர் பண்ணு என்றான் விக்கி .பாஸ் ஏற்கனவே நிறைய குடிச்சுட்டிங்க போதும் என்றான் ,அதுவும் ரைட் தான் இந்த மாதிரி ஒரு தடவ அதிகமா சரக்கு அடிச்சதால தான் என் வாழ்க்கையே திசை மாறுச்சு சோ வா போகலாம் என்று தள்ளாடி கொண்டே வெளியேறினான் .விக்கி போதையில் கார் கதவை கூட திறக்க முடியாமல் சாவியை வைத்து போதையில் நொண்டி கொண்டே இருந்தான் .
அத கொடுங்க பாஸ் நானே உங்கள வீட்ல கொண்டு போயி விடுறேன் என்றான் வருண் .நோ நோ தம்பி நானே போயிக்கிறேன் என்றான் .அட நீங்க இருக்க நிலைமைல வேற எங்காச்சும் தான் போவிங்க என் கிட்ட கொடுங்க நான் கொண்டு போயி விடுறேன் என்றான் வருண் .அப்படியாச்சும் போயி சேருறேன்டா என்னைய யாருக்கும் பிடிக்கல நான் ஒரு கெட்டவன் என்று அவன் ஒளரி கொண்டு இருக்க வருண் அவனிடிம் சாவியை வாங்கி காரை திறந்து அவனையும் உள்ளே தள்ளி காரை ஒட்டி கொண்டு போனான் .
அவன் வீட்டிற்கு போயி நிறுத்தினான் .சாவியை விக்கியிடம் இருந்து கதவை திறந்தான் .உள்ளே சுவாதி உக்காந்து டிவி பார்த்து கொண்டு இருந்தாள் .அதை பார்த்ததும் சாரிங்க நான் வீடு மாறி வந்துட்டேன் என்றான் வருண் .சுவாதி விக்கியை பார்த்ததும் இல்ல கரெக்ட் தான் அவன உள்ள கொண்டு வா என்று சொல்லி கொண்டு எழுந்தாள் .அப்போது தான் அவள் வயிற்ரை பார்த்தான் வருண் .

1 Comment

  1. Enna dude last 3,4 page repeat aaguthu.

Comments are closed.