செக்ஸ்லே ஒளிவு, மறைவே இருக்கக் கூடாதுடி 3 178

“ஏன்,…. நான் வரக் கூடாதா?”

“இல்ல,…. நாம ரெண்டு பேரும், நீ காலைல ஸ்கூல் போறப்பதான் சந்திச்சுக்குவோம். ஆனா இன்னைக்கு சாயந்திரம் மணி 4 ஆகப் போகுது, இப்ப போய் என்னைப் பாக்க,….. அதுவும் என் வீடு இருக்கிற தெருவுக்கே வந்திருக்கியே என்ன விஷயம்?”

“நான் சொல்ற விசயம் இருக்கட்டும். நீ ஏன் டல்லா இருக்கே? உன் வீட்டுல ஏதாவது பிரச்சினையா?”

அழுகை பொங்கி வெடிக்க,“ஆமாம் மீனா. நான் அடங்காப் பிடாறியாம், பொருக்கியாம், ஊர் சுத்தியாம், உதவாக் கரையாம், பொருக்கியாம், பொரம்போக்காம், தர்த்திரம் புடிச்சவனாம், விளங்காதவனாம்.”

கண்ணீர் தழும்பி நின்ற அவன் கண்களை என் கைகுட்டையால் துடைத்துவிட்ட நான், “அழாம சொல்லுடா. என்ன நடந்தது?”

“பணம் கட்ட பேங்குக்கு போய் இருந்த நான்,….. பைக்கை பேங்க் முன்னாடி பூட்டு போட்டு நிறுத்தி இருந்தேன்.பேங்க் முன்னாடி பூட்டி நிருத்தி இருந்த பைக் திருடு போய்டுச்சு. அதுக்காக ‘இப்படி பொருப்பில்லாத தெரு நாயா இருக்கியே. தண்டச் சோறு,….படிப்புதான் வரலை.வீட்டுக்கு அடங்குன புள்ளையா பொருப்பாவாவது இருப்பன்னு பாத்தா,….. தறுதலை இப்படி பண்ணிட்டு வந்து நிக்குதேன்னு திட்டி ஆத்திரத்துல, அப்பா பெல்டால அடிச்சு விளாசி…. இனி ஒரு நிமிஷம் இந்த சனியன் புடிச்ச நாய் இந்த வீட்டுல இருக்க்க் கூடாது அவனை வீட்டை விட்டு வெளிய போகச் சொல்லு’ன்னு அம்மா கிட்டே என் காதில் கேக்கும்படியா சொல்ல,……. நானும் ஆத்திரம் வந்து, ‘இனி இந்த வீட்ல இருக்க நானும் தயார் இல்ல’ன்னு ஆத்திரமா சொல்லி,….என்ன பண்றதுன்னு தெரியாம அழுதுகிட்டு நின்னுகிட்டு இருந்தப்பதான் நீ வந்த.

“சரி…சரி…. பின்ன,….. கொஞ்சமா நஞ்சமா,…. முப்பதாயிரம் ரூபா பைக்க, ஒரு நொடியில தோலைச்சிட்டு வந்து நின்னா, வீட்டுல சும்மா இருப்பாங்களா. எங்க வீட்ல அடிச்சு தோலையெ உரிச்சிருப்பாங்க. ஆனா, உங்க வீட்ல திட்றது கொஞ்சம் ஓவர்தான். எனக்கே நாக்க புடுங்கிட்டு சாகலாமுன்னு அவமானமா இருக்கு. ஆம்புளப் புள்ள நீ உனக்கு ரோஷம் இருக்காதா? சரி…என் ஸ்கூட்டியை எடு. கல்லணை பூங்காவுக்கு போய் மத்ததை பேசிக்கலாம்.”

“பைக் மட்டும் தொலைல மீனா!”

“அப்புறம்,….”

“பைக்கோட சேர்ந்து, பைக் பின்னாடி பெட்டியில வச்சிருந்த, ஒரு லட்ச ரூபாயும் போச்சு.”

“அடப் பாவி….இப்படி தொலைச்சுப் புட்டு ஏமாந்து நிக்கிறியே. போலீஸ் ஸ்டேசன்ல கம்ளைன்ட் பண்ணலாம் வா.”

“விடு மீனா, போலீஸ் தேடி தொலைஞ்சு போன பைக்கையும், பணத்தையும் கண்டு பிடிச்சுட்டா, என்னை என் அப்பன் அடிச்ச அடியும், திட்டின திட்டும் இல்லைன்னா ஆயிடப் போகுதா? என் அப்பனுக்கு இப்படிதான் வேணும். சரியான கஞ்சன். இத்தனை வருஷத்துல எனக்கு நல்லதா ஒரு ஃபேன்ட், சர்ட் எடுத்துக் கொடுத்த்தில்லே தெரியுமா? அவரோட பத்தும் பத்தாதம இத்துப் போன பழைய ட்ரெஸ்சத்தான் நான் இப்பவும் போட்டுட்டு இருக்கேன்.”

“சரி…. திட்டின திட்டுக்கும், அடிச்ச அடிக்கும், பையன் கோவிச்சுகிட்டு எங்காவது போய்டப் போறான்னு உங்க வீட்ல தேட மாட்டாங்களா?”

அம்மாதான் பாசக்காரி,…. அழுதுகிட்டு இருப்பா. அப்பன் எங்கே தேடப் போறான்? தொலைஞ்சது சனியன்’னு இருப்பார். என் தங்கச்சி வந்து தேடுனாதான் உண்டு.அவ என்னை தேடி வர்றதுக்குள்ளே, நாம கிளம்பிடணும். அவள பாத்துட்டா பாசத்துல என் வைராக்கியம் சுக்கு நூறா உடைஞ்சிடும்”

பேசிக் கொண்டே ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்து சரவணன் ஓட்ட,….. நான் பின்னால் தலைக்கு முக்காடிட்டு உட்கார,…. கால் மணி நேர பயணத்தில் இருவரும் கல்லணையை அடந்தோம்.

கல்லணைப் பூங்காவில் ஒதுக்குப் புறமாக இருந்த ஒரு மா மர நிழலில் போடப்பட்டு இருந்த பெஞ்சில் உட்கார்ந்து, ஸ்வீட் பெட்டியைத் திறந்து, ஒரு ஸ்வீட் எடுத்து அவன் வாயிலே ஊட்டிவிடப் போக, என் கையைத் தடுத்தவன்,….

”என்ன விஷயம் சொல்லு மீனா?”

2 Comments

Comments are closed.