செக்ஸ்லே ஒளிவு, மறைவே இருக்கக் கூடாதுடி 3 177

அம்மா சமையலறை வேலைகளை முடிக்கப் போக, அப்பா ஹாலில் கவலை தோய்ந்த முகத்தோடு கன்னத்தில் கை முஷ்டியை முட்டுக் கொடுத்து உட்கார்ந்திருக்க, என் தங்கை தூங்கி இருந்தாள்.

அம்மா, நான், என் தங்கை மூவரும் சேர்ந்து வழக்கமாக படுக்கும் அறையில் நான் சென்று படுக்கையில் குறுகிப் படுத்திருக்க, அங்கே வந்த என் அண்ணன் பக்கத்தில் யாராவது இருக்கிறார்களா என்று பார்த்து, மெதுவான குரலில்,….

” இங்க பாரு மீனா. உனக்கு உதவத்தான் நான் வந்திருக்கேன். காதல் கொண்ட மனசு ரெண்டும் பிரியறப்போ எப்படி கஷ்டப் படும்னு எனக்கும் தெரியும். அதனால உண்மையைச் சொல்லு. யாருக்காகவும் நீ பயப் படத் தேவையில்லை. அவனை நீ உண்மையாலுமே காதலிக்கிறியா?”

ஆமாம் என்பது போல தலையாட்டினேன்.

அவன் உன்னையும் அதே மாதிரி உண்மையா காதலிக்கிறானா? இல்லை உன் உடம்பைக் காதலிக்கிறானா?

“இல்லேண்ணா,, உண்மையாத்தான் ரெண்டு பேரும் காதலிக்கிறோம்.உடம்பு சுகத்துக்காக இல்ல”

“எத்தனை நாளா?”

“ரெண்டு வருஷமா.”

“இந்த சின்ன வயசுக் காதல் வாழ்க்கையிலே உங்களுக்கு கஷ்டத்தைதான் கொடுக்கும்னு உங்களுக்கு தெரியுமா?”

“தெரியும்.”

“இருந்தாலும் காதலை,….. காதலனை விட மாட்டே?”

“ம்..”

“நீங்க ரெண்டு பேரும் உங்க காதல்ல உறுதியா இருந்தீங்கன்னா, உங்க காதலைப் பிரிக்க யாராலும் முடியாது.”

“இருந்தாலும், ராத்திரி முழுக்க யோசி. அதி காலை 4 மணிக்கு வருவேன். உன் முடிவைச் சொல்லு.”

“இதுல யோசிக்கிறதுக்கு ஒன்னும் இல்லண்ணா. நீதான் எங்க காதலை வாழ வைக்கணும்.” என்று சொல்லி கண்ணீரோடு அன்ணன் காலில் விழுந்தேன்.

பேசிவிட்டு அண்ணன் போன பின்பு, அப்பாவிடம் அண்ணன் ஏதோ சொல்ல,” அதானே பாத்தேன். தொலைச்சிப் புடுவேன். தொலைச்சு” என்ரு சொல்லியபடியே அவரும் படுக்கப் போக, அண்ணனும் அவன் அறையில் படுக்க….புயலடித்து ஓய்ந்த்து போல, அமைதியானது எங்கள் வீடு.

குடி முழுகின சொகத்தில் எல்லோரும் இருக்க, சாப்பிட பிடிக்காமல் பசியோடவே படுத்துக் கொண்டோம்.

ஆனால், என் நினைவு மட்டும் அலை கடல் போல ஆர்ப்பரித்துக் கொண்டே இருந்தது. தூக்கம் வரவில்லை புரண்டு புரண்டு படுத்தேன். பஞ்சு மெத்தை முள்ளாய் குத்தியது.

விடி காலை 4 மணி.

எங்கள் அறையின் கதவு திறந்தே இருக்க, யாரோ பூனை போல நடந்து வந்து,”ஸ்…ஸ்…ஸ் “என்று சத்தம் கொடுக்க, அது என் அண்ணன் தான் என்று எனக்குப் புரிந்தது. மெதுவாக எழுந்தேன். அம்மாவும் தங்கையும் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தனர். ஏற்கனவே என் உடைகள் சிலவற்றையும், என் நகைகளையும் பையில் எடுத்து, மற்றவர் பார்வைக்கு தெரியாதபடிக்கு வைத்திருந்ததை எடுத்துக் கொண்டு பின் வழியாக தெருவுக்கு வர,…. அங்கே சரவணன் கையில் ஒரு பையோடு நின்றிருந்தான்.

சரவணன் கையில் ஒரு பையோடு அங்கே நின்றிருந்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தாலும், இருவரும் சேர்ந்து அவரவர் வீட்டை விட்டு, ஊருக்குத் தெரியாமல் ஓடிப் போக தயாராகிக் கொண்டிருப்பதை நினைத்து அச்சமாக இருந்தது.

சரவணன் கையில் என் கை பிடித்துக் கொடுத்து, அவன் கையில் சில ஆயிரம் ரூபாய் நோட்டுகளைத் தினித்து, அமைதியாக ஆசீர்வாதம் செய்து, கண்களில் கண்ணீரோடு நிற்க,….. அவன் அன்பில் கலங்கி என் அண்ணன் காலில் நான் மீண்டும் விழ, ….என்னோடு சரவணனும் சேர்ந்து விழுந்தான்.

இருவரும் கை பிடித்து இரயில்வே ஸ்டேஷன் நோக்கி ஓட்டமும் நடையுமாகச் சென்று. சென்னை ரயிலைப் பிடித்தோம்.

2 Comments

Comments are closed.