செக்ஸ்லே ஒளிவு, மறைவே இருக்கக் கூடாதுடி 2 220

கொஞ்ச நேரம் அவளிடம் பேசிக்கொண்டிருந்து விட்டு வெளியே வர, அர்ச்சனாவும் கூடவே வந்தாள்.

தூரத்தில் நீங்க வந்துகொண்டிருப்பது தெரிந்தது.

“அர்ச்சனா”

“ம்”

அவளை நேருக்கு நேராக பார்க்க கூச்சப்பட்டு,”என்னடி, டெஸ்ட் ஏதோ வச்சியே… பாஸாயிட்டேனா?”

“என்னடி டெஸ்ட்?”

“ நீயே யோசிச்சுப் பாத்துட்டு, நீ வச்ச டெஸ்ட்லே நான் பாஸா, பெயிலான்னு நான் வீட்டுக்கு போனதுக்கப்புறம் போன்லே சொல்லு” என்று வெக்கத்தில் சொல்லிக்கொண்டிருந்த போதே, நீங்க அருகில் வந்து நிற்க, “வாங்கண்ணா சௌக்கியமா?” என்று உங்களை நலம் விசாரித்தாள் அர்ச்சனா.

அர்ச்சனாவை பார்வையாலேயே சாப்பிட்டுக்கொண்டே, “ம்… நல்லா இருக்கேம்மா. உன்னைப் பாக்கணும்னு ஒரே அடம். அதான் அணுப்பி வச்சேன்.அவர் எப்ப வருவார்?”

“ நாளைக்கு வந்துடுவார்ண்ணா. இன்னும் கொஞ்ச நேரம் இருடின்னா…கேக்கமாட்டேங்கிறா. வீட்டுக்கு போகணும்….வீட்டுக்கு போகணும்னு அவசரப்படுறா. வீட்டுலே அப்படி என்னதான் வச்சிருக்காளோ? அவர் வர்ற வரைக்கும் எனக்கு துணையா இருகலாமில்லே?”

“அதானே, இருந்துட்டு வாயேன்” (இவருகென்ன சொல்லிட்டு போய்டுவார். அவஸ்தை படுறது நான் தானே!)

“இல்லைங்க…வீட்டுலே நிறைய வேலை இருக்கு” என்று சொல்லி உங்க வாயை அடைத்தேன்.

“சரிம்மா… நாங்க கிளம்பறோம்” என்று சொல்லி ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்ய, நான் பின்னால் உட்கார்ந்தேன். நாங்கள் தெரு முனையை கடக்கும் வரை டாட்டா சொல்லிக்கொண்டிருந்தாள் அர்ச்சனா.

வீட்டுக்கு வந்து, இரவு டிபனுக்கு மசால் தோசை தயார் செய்தேன். நீங்க வீட்டுலே குறுக்கும் நெடுக்குமா குட்டி போட்ட பூனை மாதிரி நடந்துகிட்டு இருந்தீங்க.நீங்க எதையோ எங்கிட்டே கேக்க விரும்பறீங்கங்கன்றது எனக்கு புரிஞ்சது. இருந்தாலும் நீங்களா கேக்கட்டும்னு விட்டுட்டேன்.

அந்த நேரம் பாத்து ஹாலில் இருந்த என் செல் அலற ,”ஏங்க…அது யாருன்னு பாருங்க.”

செல் போனை எடுத்து என்னிடம் வந்துகொண்டே,”அர்ச்சனாதாண்டி.”

“கொண்டாங்க…நீங்க ரெண்டு தோசை சுடுங்க. இதோ, நான் வந்திட்றேன்” என்று சொல்லிக்கொண்டே வெளியில் வந்தேன்.

“ஹலோ அர்ச்சனா, சொல்லுடி?”

1 Comment

Comments are closed.