சத்தம் போடாதே – 3 61

“இந்த பொண்ணு பெங்களூர்ல காலேஜ் படிச்சிட்டு இருந்த பொண்ணு. கொஞ்ச நாளைக்கு முன்னாடி டேட்டிங் போறேன்னு போனவ அஞ்சு நாள் கழிச்சு டெட் பாடியா ஓசூர் பக்கம் தான் கிடைச்சா. அவளோட பிரண்ட்ஸ் சொன்னதை வச்சி அவ எலக்ட்ரானிக் சிட்டி பக்கம் தான் வந்தான்னு கன்பார்ம் பண்ணிட்டு யாராச்சும் பார்த்து இருக்காங்களான்னு விசாரிச்சிட்டு இருக்கோம்”

“இல்லை சார். நான் பார்க்கல” பயத்தை முகத்தில் காட்டி கொள்ளாமல் சொன்னேன்.

“சரி அக்கம் பக்கத்துல வீடே இல்லை. தனியா எப்படி இருக்கீங்க”

“ரெண்ட் இங்கே தான் சார் கம்மி. தனியா இல்லை இவளோ நாள் கூட அம்மா இருந்தாங்க. அவங்க போனதுக்கு அப்பப்போ அப்புறம் பிராண்ட் ஒருத்தன் இருக்கான்”

“உள்ளே வந்து பார்க்கலாமா”

“ஓஹ் எஸ் உள்ளே வந்து பார்த்தார்”

“என்ன பிராண்ட் இருக்கார்னு சொன்னீங்க ஆள் யாரையும் காணோம்”

“கார்த்திக் கார்த்திக்” கூப்பிட்டேன், பதில் ஏதும் இல்லை.

“நான் இப்போ தான் சார் எழுந்தேன் ஒரு வேலை அவன் எங்கயாச்சும் வெளியே போய் இருக்கலாம்”

“சரி. உங்க அம்மா என்ன இந்த இடம் பிடிக்காம போர் அடிச்சி திருப்பி ஊருக்கே போய்ட்டாங்களா”

“இல்லை சார். அவங்க இறந்துட்டாங்க”

அவரின் முகத்தில் இருந்த மலர்ச்சி மறைந்து “ஐ அம் சாரி” என்றார்.

“பரவாயில்லை சார்”

“சரி டேக் கேர். ஏதாச்சும் சந்தேக படுற மாதிரி ஆக்டிவிட்டி நடந்தா ஸ்டேஷனுக்கு கால் பண்ணுங்க. உங்க பிராண்ட் கிட்டேயும் சொல்லிடுங்க”

“சொல்லுறேன் சார்”

அந்த போலீஸ் தன்னுடைய பைக்கை ஸ்டார்ட் செய்து கிளம்பினார். நான் வீட்டினுள் சென்றவுடன் உள்ளே கார்த்திக் நின்று கொண்டு இருந்தான்.

“டேய் எங்கேடா போனே. கூப்பிட்டு கத்தினப்போ கூட வரவே இல்லை”

“நான் பார்த்துட்டு தாண்டா இருந்தேன்”

“என்னடா போலீஸ் எல்லாம் வந்துட்டாங்க, எனக்கு பயமா இருக்குடா”

“அதெல்லாம் ஒன்னும் ஒற்றி பண்ணிக்காதே அருண். அவனுங்களுக்கு ஒரு க்ளுவும் இல்லாம தான் இப்படி தெரு தெருவா சுத்திகிட்டு இருக்கானுங்க”

“எனக்கு பயமா இருக்குடா”

“இதுக்கு எல்லாம் என்னடா பயம், எல்லாம் நான் பாத்துக்குறேன்.”

“டேய்..” அப்படியே நின்றேன்.

“நான் தான் பார்த்துக்குறேன்னு சொன்னேன்ல” கடுப்பாகி கத்தினான்.

“மொபைல் சிக்னல் வச்சி கண்டுபிடிச்சிட போறாங்க”

1 Comment

  1. Mannichudnga raam story next part

Comments are closed.