சத்தம் போடாதே – 3 61

“அய்யா அந்த பய்யன் ராகுல் கொடுத்த கார்த்திக் போன் நம்பர் ட்ரெஸ் பண்ணி திருப்பதில பாப்பா பசங்க ரெண்டு பேரையும் பிடிச்சிட்டோம். பாப்பா கூப்பிட்டாலும் பசங்க ரெண்டு பேரையும் பிடிச்சிட்டு விட மாட்டேங்குறாங்க. என்ன பண்ண”

“…”

“லவுட் ஸ்பீக்கர்ல போட்டுட்டேன்” போனை மேகாவின் அருகே நீட்டினான்.

“மேகா அவங்க உயிர் வாழணும்னா நீ ப்ரோப்லேம் பண்ணாம ஒழுங்கா வா. டாடிக்கு கோவம் வந்தா என்ன நடக்கும்னு உனக்கு தெரியும். ஐ வில் கில் தேம் போத். யு ஹவ் 5 செகண்ட்ஸ்”

5
4
3
2

மேகா எங்களை பிடித்து கொண்டு இருப்பதை விட்டாள்.

“மேகா நோ நோ” நான் கத்தினேன்.

“லிவ் டு பைட் அனதர் டே” அழுகையினூடே சொல்லிக்கொண்டு காரை விட்டு இறங்கி எங்களை திரும்பி பார்த்து கொண்டே போக எங்கள் இருவரையும் இறங்கவிடாமல் துப்பாக்கியுடன் குண்டர்கள் சுற்றிவளைத்தனர்.

1 Comment

  1. Mannichudnga raam story next part

Comments are closed.