சத்தம் போடாதே – 3 61

“அது அடுத்த வாரம் மாத்திக்கோ மச்சி. என்னோட பைக்கை எடுத்துட்டு அவளை ஜாலியா வச்சி சுத்து”

அவளை பைக்கில் குறிப்பாக அவனது அப்பாச்சியில் வைத்து சுற்றுவது நல்ல யோசனையாகவே தோன்றியது அதனால் ஒத்துக்கொண்டேன்.

மேகாவிடம் அவசரமாக ஊருக்கு போக வேண்டி இருப்பதாக சொல்லிவிட்டு வெள்ளிக்கிழமை மதியம் பரீட்சை முடிந்த கையோடு நானும் கார்த்திக்கும் கோயம்புத்தூருக்கு பைக்கில் கிளம்பினோம்.

அனிதா ராத்திரி 9 மணிக்கு கோயம்புத்தூருக்கு பஸ்ஸில் ஏறிட்டேன் என்று மெஸ்ஸஜ் அனுப்பிய போது நாங்கள் அவன் வீட்டின் உள்ளே இருந்தோம். அரண்மனை போல மிக பெரிதாக இருந்த வீட்டில் அவன் வாங்க ஐயா என்று வாட்ச்மேனை தவிர யாரும் கூப்பிட கூட இல்லை. பக்கத்துக்கு டவுனுக்கு போய்ட்டு வந்தால் கூட “ஒழுங்கா சாப்டியா, பஸ்ஸில கூட்டம் இருந்திச்சா, கால் வலிக்குதா நான் வேணும்னா அழுத்தி விடவா” என்று கேட்கும் எனது அம்மாவின் நினைப்பு தான் வந்தது.

இருவரும் உக்கார்ந்து சாப்பிட்டு முடித்த போது அவனின் அப்பா வந்தார். அரசியலில் இருப்பவர் என்பது அவரின் மிடுக்கிலே தெரிந்தது.

“எப்போடா வந்தே”

“இப்போ தான்”

“பணம் எல்லாம் இருக்கா”

“இருக்கு”

“ஹாஸ்டல் பிடிக்கலைன்னா சொல்லு. வீடு பார்க்கலாம் சண்முகத்தை சமைக்க கூட்டி போய் வச்சிக்கோ”

“அதெல்லாம் வேணாம்.”

“சரி தம்பி யாரு”

“பிராண்ட்”

“என்ன பேரு” என்னை பார்த்து கேட்டார்.

“அருண்” எழ முயன்ற என்னை தோளை பிடித்து உட்கார வைத்து “அட சாப்பிடுறப்போ என்ன எழுந்திக்கிட்டு. உன்னோட வீடு மாதிரி வேணும்ங்கிறத கேட்டு சாப்பிடு”

“சரிங்க அப்பா”

சாப்பிட்டு முடித்தவுடன் மொட்டை மாடிக்கு சென்று தம்மடித்து விட்டு பார்ம் ஹவுஸ் சாவியை வாங்கி கொண்டு கோயம்புத்தூருக்கு சற்று வெளியே தென்னந்தோப்பிற்கு நடுவே இருந்த கார்த்திக்கின் பார்ம் ஹவுஸுக்கு வந்தோம்.

“மச்சி இந்த ரூமை நாம் ஷேர் பண்ணிக்கலாம், அந்த ரூமை விக்ரம் கிட்ட கொடுத்துடலாம். அப்புறம் இது தான் பெரிய ரூம் இதை நான் யூஸ் பண்ணிக்கிறேன்”

“என்கூட ஷேர் பண்ணிக்கிறேன்னு சொன்ன அப்புறம் எதுக்குடா உனக்கு தனி ரூம் அதுவும் இவளோ பெருசு”

“அனிதா கூட கபடி விளையாட ஹாஹாஹா”

அடுத்த நாள் காலையில் 7 மணிக்கெல்லாம் அனிதா மேடம் கால் பண்ணினாள்.

“ஹலோ கார்த்தி இங்கே ஸ்டெ பண்ண வந்த இடத்தில ஒரே ரூம் டபுள் புக்கிங் ஆயிடுச்சுன்னு கான்சல் பண்ணிட்டாங்க. உங்க அப்பாகிட்ட சொல்லி வேற ஏதாச்சும் ஸ்டெ அரேஞ் பண்ண முடியுமா” சொன்ன மாதிரியே பேசினாள்.

“கார்த்தி அதெல்லாம் ஒன்னும் வேணாம் நான் பாத்துக்குறேன்” விக்ரம் போனை வாங்கி பேசினான்.

“அட எங்க ஊருக்கு வந்துட்டு என்ன பேசுறீங்க விக்ரம் சார் எனக்கு ஒன்னும் சிரமமே இல்லை. நீங்க அங்கேயே இருங்க நானே வர்றேன்” போனை வைத்தான்.

“மச்சி நீ இங்கேயே இரு. நான் போய் ரெண்டு பேரையும் கூட்டி வரேன். உன்னையும் பார்த்தா அனிதா மிரண்டு போய்டுவா”

“அடப்பாவி நான் ஒருத்தன் இருக்கிறதே அவளுக்கு தெரியாதா”

“ஆமா சொல்லவே இல்லை”

1 Comment

  1. Mannichudnga raam story next part

Comments are closed.