சசி போடா வேலைய பாத்துட்டு 1 545

‘என்ன திவ்யா என்ன அச்சி என் இப்படி வாந்தி எடுக்குற’ என்றாள் செண்பகம்.

‘தெரிலமா என்னவோ வாந்தி வருது, நேத்து சாப்பாடு உடம்புக்கு ஒத்துகலையோ என்னவோ’ என்றதும் மறுபடியும் வாந்தி வந்தது. தலையை பிடித்துக்கொண்டு அப்படியே உக்காந்தாள் திவ்யா. ‘பட படன்னு வருதும்மா, தல சுத்துது திடீர்னு, புள்ளத்தாச்சியா இருக்கும்போது இருக்குற மாதிரியே வருதும்மா’ என்று திவ்யா கூறியதும். ஒரு நொடி ஸ்தம்பித்தால் செண்பகம்.

‘எங்க கண்ண காமி, நாக்க நீட்டு’ என்று சில விஷயங்களை செய்ய சொன்னாள். ‘ஏண்டி நீ புள்ள தாண்டி உண்டாயிருக்க’ என்று செண்பகம் கூறியதும், திவ்யாவிற்கு என்ன செய்வதென்றே தோணவில்லை. உள்ளுக்குள் பயங்கர மகிழ்ச்சி, ‘எவ்ளோ காலத்துக்கு அப்புறம் கடவுள் கொடுத்திருக்கிறான்’ என்று மனதில் உடனே கடவுளை கும்பிட்டாள். செண்பகத்திருக்கும் ரொம்ப சந்தோஷம்.

‘டேய் ஹரிஷ் இங்க வாடா உங்க அம்மா புள்ளை உண்டாயிருக்கா, உனக்கு இன்னும் எட்டு மாசத்துல தம்பி பாப்பாவோ இல்ல தங்கச்சி பாப்பாவோ புறக்க போகுது’ என்றாள். அதை கேட்டதும் ஹரிஷ் ஓடி வந்தான். அவன் முகம் பூராவும் சிரிப்பு.

‘அப்படியா மா’ என்று ஹரிஷ் கேட்டதும் தான், திவ்யா தன் சூழ்நிலையை உணர்ந்தாள். ‘ச்ச இப்படி விவரம் தெரிஞ்ச பையன வச்சிட்டு நாம கர்ப்பம் ஆயிருக்கோமே’ என்று யோசித்தாள். அவளுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை அவனிடம் என்ன சொல்வது எப்படி அவன் முகத்தை பார்ப்பது என்று பல எண்ணங்கள் அவள் மனதில் ஓடினாலும் எல்லாம் சேர்ந்து அவளுக்கு வெக்கத்தையே முடிவில் தந்தன. பாதி வெக்கத்தை மறைத்துக்கொண்டு ‘சசி போடா வேலைய பாத்துட்டு, கேக்க வந்துட்டான்’ என்றாள்.

அவன் சிரித்துக்கொண்டே சென்றதும் ‘என்னம்மா அவன்கிட்ட போய் இதெல்லாம் சொல்லிட்டு இருக்க அவன் என்ன சின்ன பையனா, என்னை பத்தி என்ன நினைப்பான்’ என்று பொய்யாக வெக்கத்தோடு தன் அம்மாவை கடிந்து கொண்டாள்.

‘ஆமாண்டி இவ்ளோ பெரிய பையன வச்சிட்டு படுத்தது தப்பு இல்ல அதனால புள்ளதாச்சி ஆனது தப்பு இல்ல, நான் சொன்னது தான் தப்பா. எப்படியும் இன்னும் மூணு மாசதுள்ள வயித்த தள்ளிட்டு நடக்க போற, அப்போ அவனுக்கு தெரியாதா’ என்றாள் செண்பகம்.

2 Comments

    1. Story semmya irukula

Comments are closed.