காமத்தால் அவன் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள் 2 64

அப்போது எனது பால்ய நண்பன் டாக்டர் ஷர்மா ஞாபகம் வர அவனுக்கு உடனே போன் செய்தேன். ஷர்மா எனக்கு கிட்டத்தட்ட முப்பத்தி ஐந்து வருடங்களுக்கு மேலாக தெரியும் LKG முதல் +2 வரை ஒன்றாக படித்தோம். பின்னர் அவன் லண்டன், அமெரிக்கா என்று பல நாட்டில் சென்று படித்துவிட்டு அமெரிக்காவில் கூட படித்த இன்னொரு டாக்டரை கல்யாணம் செய்து கொண்டு இந்தியாவில் செட்டில் ஆகி அவன் இப்பொது இந்திய அளவில் ஒரு சிறந்த மனோதத்துவ டாக்டர்.

“ஹலோ, என்னடா நீ போன் எல்லாம் பண்ணி இருக்க?” ஆச்சர்யமாய் கேட்டான்.

“சும்மாதான் பண்ணினேன், எப்படி இருக்க”

“ஐ அம் குட். 3 வருஷதுக்கு அப்புறம் போன் பண்ணிட்டு சும்மா போன் பண்ணினேன்னு சொன்னா எவனும் நம்ப மாட்டான் அதிலே நான் ஒரு சைக்கார்டிஸ்ட் வேற. நமக்குள்ள என்னடா பார்மல்ட்டி”

“நீ எப்போ பிரீ, கொஞ்சம் பெர்சனல் விஷயம் பேசணும்”

“இப்போ கூட பேசலாமே, என்ன விஷயம் சொல்லு”

“நேர்ல பேசுனா நல்லா இருக்கும்”

“இப்போ ஒரு முக்கியமான வேலையா ஓசூர் வந்தேன், இன்னும் 1 ஹௌர் ஆகும். நீ 3’ஓ கிளாக் வீட்டுக்கு வாயேன்”

“ஹ்ம்ம் அதே வீடு தானே”

“ஹ்ம்ம் நாம சின்ன வயசுல ஓடி திரிஞ்ச அதே மல்லேஸ்வரம் தான்”

“சரிடா, 3 மணிக்கு பார்க்கலாம்”

மணி 1 ஆகி இருந்தது, வேகமாக லன்ச் முடித்து விட்டு காரை ஸ்டார்ட் பண்ண அது மக்கர் செய்தது. காரை சரி பார்த்து வைக்கும் படி மெக்கானிக்கிற்கு கால் செய்து சொல்லிவிட்டு நான் வைத்து இருந்த எனது ஸ்கூட்டரை எடுத்து கொண்டு மல்லேஸ்வரம் நோக்கி சென்றேன். ஷர்மாவின் வீட்டை அடைந்த போது மணி சரியாக 3.15 ஆகி இருந்தது.

“டாய் பாலா, எப்படி இருக்கே” கதவை திறந்த உடனே கட்டி பிடித்து கொண்டான்.

“இருக்கேன் டா, நீ மட்டும் எப்படிடா வயசு ஆனாலும் இளமையா இருக்கே”

“சரி சரி உள்ளே வா, வ்ஹிஸ்கி?”

நான் குடிப்பழக்கத்தை விட்டு வருடங்கள் ஆகியிருந்தன இருந்தாலும் இன்று குடித்தால் நன்றாக இருக்கும் என்று தோன்ற “உம்” என்றேன்.

அவன் இரண்டு க்ளாசில் ஊற்றி கொண்டு வந்தான்.

“சியர்ஸ்” இருவரும் குடிக்க தொடங்கினோம்.

“என்னடா வீட்டுலே மதியம் டைமில் குடிக்கிறே, வாய்ப் இல்லையா” ஒரு சிப் குடித்து கொண்டே கேட்டேன்.