காலையிலிருந்து, பட்டு வேட்டி சட்டையும், தோளில் அங்கவஸ்திரத்துடன், ஓரிடத்தில் நிற்காமல், அங்கும் இங்கும் ஓடி, வந்த விருந்தினர்களை அன்புடன் உபசரித்து கொண்டிருந்த தன் கணவனை அவ்வப்போது பெருமிதத்துடன் பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள், சுந்தரி.
‘நிச்சயதார்த்த ஏற்பாடுகள் எல்லாமே என் மச்சினனோடது; ஃபங்கஷன் சிறப்பா நடந்ததுன்னு நீங்க சொல்றதுக்கு காரணமே அவர்தான் – நான் அவருக்கு ரொம்பக் கடன் பட்டிருக்கேன்னு பெருந்தன்மையா சொல்லி’ – என் தம்பி ரகுவை, வந்தவங்க முன்னாடி – என் புருஷன் பெருமைப்படுத்தினான்; கவுரவப்படுத்தினான், என் குமரு.
யாருக்கு வரும் இப்படிப்பட்ட தாராள மனசு; அந்த நேரம் என் தலையில ஐஸ் தண்ணியை ஊத்தின மாதிரி நான் குளுந்துப் போயிட்டேன். என் கண்ணுல மகிழ்ச்சியில தண்ணியே வந்துடுச்சு. என் மனசை குளிர வெச்ச இவனுக்கு, என் வயித்துல பாதாம்கீரா தித்திப்பை ஊத்தினவனுக்கு, பதிலுக்கு நான் எதாவது குடுத்துத்தானே ஆகணும்?
‘அடியே சுந்தரி… என்னடி குடுக்கப் போறே?’ மனம் எழுந்து குதித்தது.
‘என் கிட்ட இருக்கறதெல்லாம் அவனுக்குத்தான். ஆசையா அவனை கட்டி புடிச்சி என் மார்ல சாய்ச்சு அவனுக்கு திகட்டிப் போற அளவுக்கு முத்தம் குடுப்பேன்.. அவன் கிட்டேருந்து முத்தம் வாங்கிப்பேன்..’ தன் கணவன் குமார் தன்னைப் பார்த்துக்கொண்டிருக்கிறானா என அவள் ஒரு நொடி திரும்பிப்பார்த்தாள். தான் கட்டியிருந்த பட்டுப்புடவையை அவிழ்க்க ஆரம்பித்தாள்.
‘என்னடி இருக்கு அப்படி உன் கிட்ட?’
‘அவனை பைத்தியமா அடிக்கற அளவுக்கு, என்கிட்ட அழகு இன்னும் பாக்கியிருக்கு… வலுவான ஒடம்பு இருக்கு… மனசு இன்னும் இளமையா இருக்கு, அவன் போதும் போதும்ன்னு சொல்ற அளவுக்கு அவனை மகிழ்விக்க என் ஒடம்புல தெம்பு இருக்கு; இதுக்கு மேல தன் புருஷனை குஷியா வெச்சக்க ஒரு பொம்பளைக்கு என்ன வேணும்..?
‘அந்த தருணமே தன் கணவனை கட்டிக்கொள்ள சுந்தரியின் மனம் தவித்தது – என் மனசுல இருக்கற ஆசையைப் புரிஞ்சுக்காம, இப்பத்தான் யாருக்கிட்டவோ நிளமாப் பேசிக்கிட்டு இருக்கான் இவன்.. சற்றே எரிச்சலுற்றது சுந்தரியின் மனம்.
‘அப்புறம்…’