ஐ லவ் யூ ஸோ மச்.. மாம்.. ! 82

” ம்ம்.. நடந்தது நடந்தாச்சு. இனி அதைவே ஏன் நினைச்சிட்டு.. உன் மனசை மாத்திக்க முயற்சி பண்ணு நீ.. ”
கொஞ்சம் அமைதி காத்து.. பின் மெல்ல முனகினாள்.
” கஷ்டம்.. !!”
” ம்ம்.. கஷ்டம்தான். ஆனா.. அதுக்காக…”
” அவனை மறக்கறது அவ்வளவு சுலபம் இல்ல.. !!” குரல் கமறச் சொன்னாள். என்னைப் பார்க்காமலே கண்களை துப்பட்டாவால் துடைத்துக் கொண்டாள்.
”அவனை மலை மாதிரி நம்பினேன். அவனுக்காகத்தான் நான் இவ்வளவுவும் பண்ணினேன். உங்களுக்கே தெரியும். நான் எந்த சூழ்நிலைல இங்க வந்தேன். இங்க வந்தும் எத்தனை கஷ்டப் பட்டேன்னு..!!”
” ம்ம்.. தெரியும். !! என்ன பண்றது.. உன் அருமை அவனுக்கு புரியலையே.. ??”
” என் தப்புத்தான் அது..?? அவன் கேட்டப்ப எல்லாம்.. அவனை நம்பி யோசிக்காம… ச்சை.. நம்ப வச்சு கழுத்த அறுத்துட்டான்.. !!” குரல் கம்மச் சொன்னவளின் கண்களில் இருந்து கடகடவென கண்ணீர் வழிந்து.. அவளது பட்டுக் கன்னத்தில் உருண்டு ஓடியது. !! உடனே அதை துப்பட்டாவில் துடைத்தாள். மூக்கை உறிஞ்சினாள்.. !!

நான் அமைதியாக அவளையே வெறித்தேன்.. !! அழும்போது கூட எவ்வளவு அழகாக இருக்கிறாள் இவள்.. ?? இவளைப் போய் அவன்..?? ஹ்ம்.. !! அவனுக்கு யோகம்.. திருப்தியாக இவளை அனுபவித்து விட்டான்.. !! இப்போது வேறு எவளோ செட்டாக.. அவள் பின்னால் போய் விட்டான்.. !! இந்த பைத்தியக்காரி.. அவனை நினைத்து இங்கே உட்கார்ந்து மறுகிக் கொண்டிருக்கிறாள்.. !!
இப்போது நாங்கள் இரண்டு பேரும்.. அந்த பார்ககின் ஒரு ஓரத்தில் இருந்த மர பெஞ்ச்சில் உட்கார்ந்து கொண்டிருந்தோம். !!

6 Comments

  1. Welcome Niru….

  2. கதையை ஒரு சுவாரசியமாக எழுத உங்களால் மட்டுமே முடிகிறது.
    நீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்களை வரவேற்கிறேன்.

  3. அருமை அருமை

  4. செம்ம யா இருக்கு பா
    அருமையான கதை
    படிக்க படிக்க ஸ்வாரசியம்

Comments are closed.