எனக்கு ஒருத்தர பிடிச்சுட்டா போதும் நான் அவங்கள விடவே மாட்டேன் 2 75

இரண்டாம் நாள் திருவிழா ,

காலை 7 மணிக்கு ஹேமா எழுந்தாள் அருகில் ரகு தூங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்து அவன் கண்ணத்தில் ஒரு முத்தம் கொடுத்தாள். நேற்று இரவு நடந்ததை நினைத்து தனக்குள் சிரித்துக் கொண்டிருந்தாள். பின் எழுந்து தன் வேலைகளை எல்லாம் முடித்து விட்டு கிச்சனில் சென்று கிளாஸில் டி எடுத்துக்கொண்டு ஹாலுக்கு வந்தாள். அவள் டீ குடித்துக் கொண்டிருக்கும் பொழுது பத்மாவதி வீட்டுக்கு பின்புறம் இருந்து குளித்துவிட்டு ஹாலுக்கு வந்தாள்.

பத்மாவதி : என்ன ஹேமா எழுந்துட்டியா

ஹேமா : இப்ப தான் அத்தை எழுந்தேன். டீ குடிச்சிட்டு இருக்கேன்.

பத்மாவதி : சரி சரி இன்னைக்கு கொஞ்சம் சீக்கிரம் கோயிலுக்கு கிளம்பணும் சரியாம்மா

ஹேமா : எதுக்கு அத்தை??

பத்மாவதி : இன்னைக்கு இரண்டாவது நாள் திருவிழா மா .நம்மதான் சாமிக்கு மாலை வாங்கி கொடுக்கணும்

ஹேமா : சரி அத்தை மாமா எங்க?

பத்மாவதி : அவர் மாலை வாங்க போயிருக்காரு மா

ஹேமா : சரி அத்தை

பத்மாவதி : ஹேமா இந்த துவைத்த துணியை மேலே போய் காய போட்டுட்டு .அப்படியே காஞ்சி துணி எடுத்துட்டு வந்துடுரியா!!!

ஹேமா : சரி அத்தை

பத்மாவதி : நீ போய் காயப்போட்டு வா நான் ரகுவ எழுப்புறேன்

ஹேமா : சரி அத்தை

ஹேமா மாடிக்கு துணி எடுக்க சென்றால். மேலே மாடிபடி பக்கத்தில் தான் ரூம் இருக்கிறது.அதை தாண்டி தான் சைடு மாடிக்குச் செல்ல முடியும்.ஏனென்றால் அங்கே துணி காயப்போட முடியும். ஹேமா மாடிப்படி ஏறி வந்து மேல் மாடி ரூமை எட்டிப் பார்த்தாள் பார்த்தாள். ராஜா இல்லாத தெரிந்து சைடு மாடிக்கு சென்றாள். அங்கே இரண்டு தம்புல்ஸ் மற்றும் ஸ்கிப்பிங் கயிறு இருந்தது. மாடியின் ஓரத்தில் ராஜா அவன் நண்பன் சேகரிடம் பேசிக் கொண்டிருந்தான். ஹேமா அவன் அருகே துணி காயப்போட செல்ல அவன் பேசியது அவள் காதில் விழுந்தது.