உங்க மாப்பிள்ளை எப்பவோ ரெடி அக்கா 173

“என்ன தான் சொல்லவரே”

“மீனாவுக்கு நீங்க சொல்றாமாதிரி ஒருத்தனை பார்த்து கல்யாணம் செஞ்சி வெச்சா… நிச்சயம் அவனும் மிடில் கிளாஸா தான் இருப்பான். அவனுக்கு ஏற்கனவே பிள்ளைகள் இருந்தா நம்ம மீனா அதுகளுக்கு ஆயா வேலை செய்யத்தான் நேரம் சரியா இருக்கும். எப்படியும் வித்யாவையும் அனுவையும் நாம தான் பார்த்துக்கணும். கரை சேர்க்கணும். நம்ம பையன் நிச்சயம் உதவ மாட்டான். ரிட்டயர்டு ஆன காலத்துல இந்த சுமை நம்மால சுமக்க முடியுமா?”

“….”

“நீங்க இந்த விஷயத்தை சொன்ன நாளா எனக்கு தூக்கம் இல்லீங்க. யோசிச்சி பார்த்தா… ஊர் உலகத்துல நடக்காததான்னு தோணுது”

“ஏன்டி…. நாம கௌரவமா வாழ்ந்த குடும்பம் டி”

“ஆமாங்க… கௌரவம் தான். மீனா ஒரு பையனை லவ் பண்ணப்போ அவசர அவசரமா அவளுக்கு கல்யாணம் பண்ணி வெச்சோம். ஒரு டிகிரி முடிச்சி இருந்தாலாவது அவளுக்கு இப்போ வேலை கிடைச்சி இருக்கும். ஞாபகம் இருக்கா…. அவ 10வது படிக்கிறப்போ ஒரு சினிமா டைரக்டர் நடிக்க கூப்பிட்டாரே…. நீங்க கூட இதே கௌரவத்தை சொல்லி தட்டிக் கழிச்சீங்க. கவுரவத்துக்கு தான் இப்போ துணி வித்துக்குக்கிட்டு இருக்கோமே.”

“கவி… அப்போ குணா சொல்றா மாதிரி…”

“அந்த ஆள் கிட்ட நான் பேசட்டுங்களா”

அடுத்தநாள் குணாவை அதே ஹோட்டலில் ராஜுவும் கவிதாவும் சந்தித்தார்கள்.

முதலில் கவிதா பயந்தபடியே பேசினாள். குமுதா தங்களுக்கு எவ்வளவோ ஆதரவாக இருந்திருக்கிறாள். அவள் வயித்தெரிச்சல் தங்களை என்ன பண்ணுமோ என்று தன் பயத்தை வெளிக்காட்டினாள். குணா சமாதானம் சொன்னார்.

கடைசியாக…

“ஐயா… என் பொண்ணுக்கு நீங்க என்ன செய்வீங்க…” மரியாதை & பயத்தை விடாதபடி காட்டிக்கொண்டே கேட்டாள்.

“அக்கா… நாம ஒண்ணுக்குள்ள ஒண்ணா ஆகப்போறோம். இன்னும் என்ன ஐயா, சார்னு…. தம்பின்னு சொல்லுங்க. இல்ல மாப்பிள்ளைன்னு கூப்பிடுங்க… சரி. நீங்க கேட்காட்டியும் நான் மீனா பேர்ல ஒரு வீட்டை எழுதி வெச்சிடுவேன். நீலாங்கரையில இருக்கு. என்ன வேல்யூ இருக்கும்னு புரிஞ்சிருக்குமே… அது போக உங்க பேரன் பேத்தி படிப்புச்செலவையும் கல்யாண செலவையும் ஏத்துக்குறேன். நம்பிக்கை இல்லைனா… அவங்க பேர்ல பேங்குல FD போட்டுடுறேன்.”

“தம்பி… என் பொண்ணு கழுத்துல தாலி காட்டுவீங்க தானே…”

“நிச்சயமா அக்கா.”

“தம்பி… இன்னும் மீனா கிட்ட பேசலை. பேசி ஒரு நல்ல நாளா பார்த்து…”

“சந்தோசம் அக்கா. நீங்க ரெண்டு பேரும் ஒத்துக்கிட்டதே பாதி முடிஞ்சா மாதிரி தான்.”

குணா ஒரு கிப்டை கொடுத்தார். கவிதா பிரித்துப்பார்த்தாள். நெக்லெஸ். வாயை பிளந்த கவிதாவை அழைத்துச்சென்றார் ராஜு.

வீட்டிற்கு வந்தபோது மீனா இல்லை.

“என்னமோ ரொம்ப கலங்குனீங்களே…. பார்த்தீங்களா. நம்ம பொண்ணுக்கு அதிஷ்டம் வந்தாச்சுங்க”

“நீயா கவி இப்படி எல்லாம் பேசுறது. நான் கூட அழுது ஆர்ப்பாட்டம் பண்ணுவியோன்னு நினைச்சேன்”

“அப்போ… உங்களுக்கு குணா சொன்னப்பவே சம்மதம் தானா… 4 நாளா நடிச்சீங்களா”