எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 3 74

சொல்லிவிட்டு வேணு ரிஸீவரை அசோக்கிடம் நீட்டினான். மோகன்ராஜ் இப்போது ஏன் ஃபோன் செய்திருக்கிறார் என்று அசோக்கிற்கு நன்றாகவே புரிந்தது. ஒருமாதிரி திருட்டுப் பார்வை பார்த்தவன், சற்றே தடுமாற்றமாய் சொன்னான்.

“ஹேய்.. அ..அவர் கிஷோர்ட்டதான் ஏதோ பேசணும்னு சொன்னாரு.. அ..அவனுக்காத்தான் இருக்கும்.. அவன்ட்ட குடு..!!”

என்று அழகாக எஸ்கேப் ஆனான். நண்பன் சொன்னதை உண்மை என்று நம்பிய கிஷோரும், வேணுவிடம் இருந்து ரிஸீவரை வாங்கினான். தன் காதில் வைத்துக்கொண்டான். குரலில் ஒரு மிடுக்கை வரவழைத்துக்கொண்டு கெத்தாக சொன்னான்.

“ஹாய் மிஸ்டர் மோகன் ராஜ்..!!”

அவ்வளவுதான்..!! அதன்பிறகு ஒரு நிமிடம்..!! மோகன்ராஜ் படபடவென பட்டாசாக வெடித்து தள்ளினார். படுகேவலமாக திட்டினார். கிஷோர் பேசுவதற்கே அவர் வாய்ப்பளிக்கவில்லை. ‘ஸார்.. அது வந்து.. இல்ல ஸார் அவன்.. நோ ஸார்..’ என்று பிட்டு பிட்டாக வார்த்தைகளை துப்பத்தான் கிஷோருக்கு இடைவெளி கிடைத்தது. மிச்ச நேரம் மொத்தமும் அவர் பொரிந்து தள்ளிவிட்டு ஃபோனையும் கட் செய்தார்.

கால் முடிந்தபிறகும் கிஷோர் சிறிது நேரம் ரிஸீவரையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தான். அப்புறம் ரிஸீவரை அதனிடத்தில் வைத்தவன், முகமே செத்துப்போய் அசோக்கை பரிதாபமாக ஏறிட்டான். ‘ஏண்டா.. இப்பிடி..??’ என்று வடிவேலு மாதிரியான பாவனையுடன் பார்த்தான்.

“என்னடா மச்சி.. என்ன சொல்றார் மோகன்ராஜ்..??”

என்று அசோக் அவனிடம் இளிப்பாக கேட்க, கிஷோரால் அதற்கு மேலும் பொறுக்க முடியவில்லை. தன் சேரில் இருந்து குபீரென்று எழுந்தான். அப்படியே அசோக் மீது சரக்கென பாய்ந்தான். டேபிளில் இருந்த டெலிபோன், ஃபைல்ஸ், பென் ஸ்டாண்ட், ஸ்டேப்ளர் எல்லாம் கீழே விழுந்து மூலைக்கொன்றாய் சிதறி ஓடின. ஏதேதோ காகிதங்கள் அந்தரத்தில் பறந்தன. நழுவிய லேப்டாப் கீழே விழாமல், லாவகமாக பிடித்துக் கொண்டான் வேணு. நாற்காலிகள் ‘டமார்ர்ர்ர்..’ என்ற சத்துடன் அங்குமிங்குமாய் தெறித்து ஓடி கவிழ்ந்தன. கிஷோரும் அசோக்கும் தரையில் கட்டிப்புரண்டு உருண்டு கொண்டிருந்தார்கள்.

“மவனே.. இன்னைக்கு செத்தடா நீ..!!” கிஷோர் உச்சபட்ச கடுப்போடு கத்தினான்.

“டேய்.. லூசு.. சொல்றதை கேளுடா.. விடுடா..!!” அசோக் அவனுடன் சேர்ந்து உருண்டுகொண்டே கத்தினான்.

வேணுவுக்கும் சாலமனுக்கும் கொஞ்ச நேரம் என்ன செய்வதென்றே புரியவில்லை. அதிர்ச்சியில் சற்று தடுமாறியவர்கள், பிறகு சுதாரித்துக்கொண்டு சண்டையை விலக்கி விட்டார்கள். கிஷோரையும் அசோக்கையும் ஆளுக்கொரு பக்கமாய் பிடித்து இழுத்தார்கள்.

“டேய்.. இது ஆபீஸ்டா.. அஸம்ப்ளினு நெனச்சிங்களா.. அசிங்கமா சண்டைலாம் போட்டுக்கிட்டு..?? விடுங்கடா..!!”

அவர்களை பிரித்து விடுவதற்கு அரும்பாடு பட வேண்டியிருந்தது வேணுவுக்கும், சாலமனுக்கும்..!!

அதன் பிறகு ஒரு அரைமணி நேரம் கழித்து.. அவர்கள் எப்போதும் மதிய உணவு உண்ணுகிற ஃபுட்கோர்ட்டில் நான்கு பேரும் அமர்ந்திருந்தனர்..!! அசோக்கும் வேணுவும் டேபிளுக்கு ஒருபுறம் இருக்க, கிஷோரும் சாலமனும் அவர்களுக்கு எதிரே அமர்ந்திருந்தனர். சூழ்நிலை இன்னும் சற்று இறுக்கமாகவே இருந்தது. யாரும் யாருடனும் பேசிக்கொள்ளவில்லை. ஆளுக்கொரு உணவை வாங்கி வந்திருந்தவர்கள், அந்த உணவை அமைதியாக பொறுமையாக வாய்க்குள் தள்ளிக் கொண்டிருந்தனர்.

நான்கு அடுக்குகளுடன் வட்ட வடிவில் அமைந்த பிரம்மாண்டமான கட்டிடம் அது..!! கட்டிடத்தின் உட்புற மையப்பகுதி திறந்தவெளியாக இருக்கும்..!! நான்காவது மாடியில் பாலிகார்பனேட் தகடுகளால் வேயப்பட்ட மேற்கூரை..!! அதன் வழியே உட்புகும் சூரிய வெளிச்சம் தாராளமாய் அந்த கட்டிடத்தை நிறைத்திருக்கும்..!! கீழ் தளத்தில்தான் அந்த ஃபுட்கோர்ட்..!! பிஸ்ஸா முதல் பிரியாணி வரை.. பலதரப்பட்ட உணவுகளை விற்கும் பத்துக்கும் அதிகமான ரெஸ்டாரன்ட் கவுன்ட்டர்கள்..!! வாங்கிய உணவுகளை அமர்ந்து சாப்பிடுவதற்கு வசதியாக.. கீழ்த்தளத்தின் மையப்பகுதியில்.. முன்னூறு பேர் அமரக்கூடிய அளவுக்கு டேபிள்கள்.. சேர்கள்..!! மற்ற மூன்று தளங்களிலும்.. ஆடைகள், ஆபரணங்கள்,
செல்போன்கள், செருப்புகள் என.. விதவிதமான விற்பனை நிலையங்கள்..!!

நீண்ட நேர அமைதியை முதலில் வேணுதான் குலைத்தான். அசோக்கிடம் மெல்ல கேட்டான்.

“மோகன்ராஜோட என்னடா பிரச்னை..??”

“மோகன்ராசா அவன்..?? சரியான மொக்கைராசு..!! பேசாத அவனைப் பத்தி..!!”

“ப்ச்.. என்ன நடந்துச்சுன்னுதான கேக்குறேன்..??”

“அவன் என்னடா.. லூசு மாதிரி என்னன்னவோ சொல்றான்..!!”

“என்ன சொன்னான்..??”

“ரொமா…ண்டிக்கா ஒரு இஞ்சின் ஆயில் வெளம்பரம் வேணுமாம் அந்த வெண்ணைக்கு..!!”

“ஓ..!!”

“இஞ்சின் ஆயிலுக்கும் ரொமான்சுக்கும் என்னடா சம்பந்தம்..?? அதை சொன்னா.. கொஞ்சம் கூட புரிஞ்சுக்கவே மாட்டேன்றான்.. லூசுப்பய..!!”

“யாரு.. அவன் புரிஞ்சுக்க மாட்டேன்றானா..?? நீதாண்டா எதையும் புரிஞ்சுக்க மாட்டேன்னு அடம் புடிக்கிற..!!” கிஷோர் இடையில் புகுந்து எரிச்சலாக சொன்னான்.

“என்ன.. நான் என்ன புரிஞ்சுக்கல..?? இஞ்சின் ஆயிலையும் லவ்வையும் எப்படி லிங்க் பண்றது..??”

“உனக்கு லிங்க் பண்ண தெரியலைன்னு சொல்லு.. லிங்க் பண்ணவே முடியாதுன்னு மட்டும் சொல்லாத..!! எனக்கு ரெண்டு நாள் டைம் தர்றியா.. நான் ஒரு கான்சப்டடோட வரவா..??”

“ம்க்கும்.. கிழிச்ச..!!” அசோக் ஏளனமாக சொல்ல, இப்போது வேணு அவனிடம் கேட்டான்.

“அசோக்கு.. நீ பேசுறது தப்புன்னு தோணுதுடா எனக்கு..!! ஏன் ரொமாண்டிக்கா ஒரு இஞ்சின் ஆயில் வெளம்பரம் எடுக்க முடியாதுன்னு சொல்ற நீ..??” வேணு கேட்க, அவனை தொடர்ந்து சாலமன் இப்போது உற்சாகமாக ஆரம்பித்தான்.

“ஆமாம் மச்சி.. ஏன் முடியாதுன்னு சொல்ற..?? இங்க பாரேன்.. நான் ஒரு லைன் சொல்லவா..?? இஞ்சினையும் இதயத்தையும் லிங்க் பண்ணினா எப்படி.. ம்ம்..?? இதயத்துக்கு காதல் எவ்வளவு முக்கியமோ… இஞ்சினுக்கு ஆயில் அவ்வளவு முக்கியம்..!! எப்பூடி…???” சாலமன் கேட்டுவிட்டு பெருமையாக பார்த்தான்.

1 Comment

  1. Story Nalla Irukku , Konjam Naarayaa Elluthunga Admin !

Comments are closed.