எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 3 74

“ஓகேடா..!! பொண்ணை ச்சூஸ் பண்ணுங்க.. நீங்க யாரை ச்சூஸ் பண்றிங்களோ.. அந்தப்பொண்ணை நானும் லவ் பண்றேன்.. அவளையும் என்னை லவ் பண்ண வைக்கிறேன்..!!”

அசோக் அவ்வாறு கெத்தாக சவாலை ஏற்றுக் கொண்டதும், இப்போது நண்பர்கள் மூவருக்கும் சப்பென்று போனது..!! ‘அவன் இந்த சவாலுக்கு ஒத்துக்கொள்ள மாட்டான்.. அதை வைத்தே காலம் முழுவதும் அவனை கலாய்க்கலாம்..’ என்றுதான் அவர்கள் எண்ணியிருந்தார்கள்..!! இப்படி அவன் ஏற்றுக்கொண்டது மற்றவர்களுக்கு ஒருவித ஏமாற்றத்தையே தந்தது. இருந்தாலும் இப்போது வேறுவிதமான எண்ணமும் எதிர்பார்ப்பும் அவர்களுடைய மனதில் கிளம்பி, அவர்களை நிமிர்ந்து அமரவைத்தன.

“நெஜமாத்தான் சொல்றியா..??” கிஷோர் தன்னுடைய முகத்தை அசோக்கின் முகத்துக்கு அருகே எடுத்துச் சென்று கேட்டான்.

“எஸ்..!!”

“அப்புறம் பேக் அடிக்க மாட்டியே..??”

“ஹஹா… சப்பை.. சப்பை மேட்டர்டா இது..!!”

“ஓகே..!! கூல்..!!”

சொல்லிக்கொண்டே கிஷோர் அவனுடைய சேரில் வசதியாக சாய்ந்து கொண்டான். மற்றவர்களிடம் திரும்பி சொன்னான்.

“ஓகேடா..!! ரெடியா நீங்க.. செலக்ட் பண்ணலாமா..??”

“நீயே யாரையாவது செலக்ட் பண்ணு கிஷோர்.. நீதான் இவன்கிட்ட ரொம்ப அனுபவிச்சிருக்குற..!!” அசோக்கின் தோளை பிடித்து அமுக்கியவாறே சொன்னான் வேணு.

“ஆமாம் மச்சி.. நீயே செலக்ட் பண்ணு..!!” வேணுவை ஆமோதித்தான் சாலமனும்.

“என்னடா…?? உனக்கு ஓகே வா..??” அசோக்கிடம் கேட்டான் கிஷோர்.

“ம்ம்.. நோ ப்ராப்ளம்..!!”

அசோக் சம்மதித்ததும், கிஷோர் இப்போது தன் தலையை நைன்ட்டி டிக்ரீ இடது பக்கமாக திருப்பினான்..!! மிக மிக பொறுமையாக தனது தலையை சுழற்றி.. அந்த ஃபுட்கோர்ட்டில் அலைந்து திரிந்த, அமர்ந்து உண்கிற பெண்களை.. ஒவ்வொருவராக கவனமாக பார்த்துக் கொண்டே வந்தான்..!!

“ஏய்.. பாத்துடா.. கல்யாணம் ஆன ஆன்ட்டி.. பல்லு போன பாட்டிலாம் செலக்ட் பண்ணிட போற.. அதுலாம் நம்மால முடியாது..!!” அசோக் கிண்டலாக சொன்னான்.

“ஹேய் தெரியுண்டா.. நீ மூடு…!!” பெண்கள் மீதிருந்த பார்வையை விலக்காமலே கிஷோர் சொன்னான்.

“அப்புறம் இன்னொரு மேட்டரு..”

“என்ன…??”

“என் மேல இருக்குற கடுப்புல ஏதாவது சப்பை ஃபிகரை செலக்ட் பண்ணிடாத.. என் ரேஞ்சுக்கு ஏத்த மாதிரி.. பொண்ணு அப்படியே பட்டாசா.. சூப்ப்ப்பர் ஃபிகரா இருக்கணும்..!!”

“கவலையே படாத மச்சி…!! சூப்ப்ப்பர் ஃபிகர்தான் உனக்கு சூப்ப்ப்பரா சூப்பு குடுப்பா.. சூப்பர் ஃபிகரே செலக்ட் பண்ணித் தர்றேன் உனக்கு..!!”

மேலும் கால் நிமிடம் ஆனது..!! கொஞ்சம் கொஞ்சமாய் சுழன்று கொண்டே வந்த கிஷோரின் பார்வை.. அவனுக்கு எதிரே அமர்ந்திருந்த அசோக்கின் பின்புறமாக வந்ததும்.. அப்படியே நின்றது..!! அவனுடைய முகத்தில் இப்போது ஒருவித திருப்தி பரவியது..!! ‘சட்’ என்று விரலை ஒருமுறை சொடுக்கினான்..!! ஆட்காட்டி விரலால் அசோக்கின் பின்பக்கமாக சுட்டிக்காட்டி..

1 Comment

  1. Story Nalla Irukku , Konjam Naarayaa Elluthunga Admin !

Comments are closed.