அதிர்ஷ்டக்காரன் பாகம் 15 56

“என்னடி இவ்வளவு பெரிய விஷயத்தை சாதாரணமா சொல்றே?…” நான் மேற்கொண்டு பேசுவதற்குள் வீடு வந்து விட்டது… வாயை மூடிக்கொண்டேன்..

வர்ஷினி எங்கிருந்து வந்தாளோ தெரியவில்லை!… என்னைப் பார்த்ததும் கண்களில் ஒரு ஒளி மின்னியது மாதிரி தெரிந்தது… அது என் மனப்பிரமையாய் இருக்கும் என்று நினைத்துக்கொண்டேன்..

ஆன்ட்டியையும், பத்மினியையும் கட்டிக்கொண்டு அழுதாள்…. அப்படியே அழுதுகொண்டே உள்ளே சென்றுவிட்டார்கள்…. நான் தனித்து நின்றேன்…

வீட்டை பார்த்தேன்… அக்ரஹாரத்து வீடு…. முன்னாடி பெரிய பந்தல் போடப்பட்டிருந்தது… பந்தலில் இன்னும் சில ஆண்கள் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருந்தார்கள்… நானும் அவர்களோடு சற்று தள்ளி அமர்ந்து கொண்டேன்…

“அம்பி யாருன்னு தெரியலையே?…” ஒரு பெரியவர் விசாரித்தார்…

எங்கிருந்தோ விச்சு வந்தார்…”நம்ம பத்மினியோட வீட்டிலே இருக்கிறவா!…. காலேஜ் படிச்சுட்டு இருக்கா!.. வர்ஷினியோட வீட்டு ஓனரையும் அவர் பொண்ணையும் இவர்தான் கூட்டிட்டு வந்திருக்கிறார்….”

வீட்டு ஒனரையும் அவர் பொண்ணையும் இவர்தான் கூட்டிட்டு வந்துருக்கிறவர்ங்கிறது எனக்கு ஓட்டிட்டு இருக்கிறார்ங்கிற மாதிரி என் காதில் கேட்டது… அது உண்மைதானே… இந்த ஒருவாரமா நான்தானே அவர்களை இரண்டு பேரையும் சக்கையா ஓட்டிட்டு இருக்கேன்…. நான் மனதுக்குள் சிரித்துக்கொண்டேன்…

“அப்போ நாழியாறது…. காலம்பற பாக்கலாமோலியோ….” பெரிசுகள் கிளம்ப ஆயத்தமாயின….

“ஓ…பேஷா!…” சற்றே சிறிசுகள் ஆமோதித்தன….

“ஏண்டா விச்சு!… அம்பிக்கு ஏதாவது ஏற்பாடு ஆயிருக்கா?…..” ஒரு பெரிசு கேட்டது…

“பார்க்கனும் மாமா!…. இல்லேன்னா நம்ம ஆத்துலேதான் படுத்துக்கட்டும்….”

“சரி!… என்னமோ பண்ணுங்கோ!… நான் ஆத்துக்கு போயிட்டு காலம்பற வர்றேன்…. ஆத்துலே மாமி காத்துண்டிருப்பா!..”

எல்லோரும் சரின்னு சொன்னார்கள்…. அவர் யார் என்பதுபோல் நான் விஸ்வநாதனை பார்க்க… என்னை நெருங்கியவர்..

“மாமாதான் இங்கே அக்ரஹாரத்திலே பெரிய மனுஷர்… அவர் பேச்சுக்கு எதிர்ப்பேச்சு கிடையாது…. பேரு கோபாலய்யர்” என்று விளக்கம் தந்தார்….

“செத்தே இருங்கோ!… நான் உள்ளேபோய் பாத்துட்டு வந்துடறேன்….” விஸ்வநாதனும் உள்ளே போக நான் பேசாமல் அமர்ந்து கொண்டேன்….

பத்மினியையும் மஞ்சுளாவையும் பார்த்தும் வர்ஷினி ஒடி வந்து கட்டிக்கொண்டாள்…

மெல்ல அழுதவாறே உள்ளே போனார்கள்…… மஞ்சுளாவை வர்ஷினியின் அம்மா அழைத்துப்போக… பத்மினியை வர்ஷினி கையை பிடித்து ஒரமாக இழுத்துட்டுப்போனாள்…

“ஏய் எதுக்கடி இப்படி இழுத்துட்டு போறே?…. நாம ரெண்டுபேரும் ஊரைவிட்டா ஓடிப்போறோம்?…மெதுவாடி…” பத்மினி அடிக்குரலில் பேசினாள்…

“விட்டால் ஓடிப்போயிடலாம்க்கா!… ஆனா சமூகம் நம்மை ஒழுங்கா வாழ விடாதே!.. உட்காருங்க!…
“ பத்மினியை ஒட்டியவாறே வர்ஷினியும் அமர்ந்தாள்….

“எப்படிடீ பாட்டி இறந்தாங்க!…” பத்மினி சம்பிரதமாய் பேச்சை ஆரம்பித்தாள்…

“எங்க பெரியம்மா பையன் விச்சு அண்ணாவை பார்த்தீங்கல்லே?… அவருக்கு ஒரு மாதத்துக்கு முன்னாடி குழந்தை பிறந்திருக்கு…நார்மல் டெலிவரிதான்…. வீட்டிலே யாருமில்லை… பாட்டி ஏதோ வேலையாய் வாசலுக்கு வந்தவள் நிலைப்படி தட்டிவிட்டு விழுந்துட்டா…. எல்லாம் எங்க மன்னியை கொடுமைப்படுத்தின பாவம்……
பகவானா பாத்து கூலி கொடுத்துட்டார்….. அங்கே மன்னிக்கு குழந்தை பிறந்து ஐந்து மணிநேரத்திலே பாட்டிக்கு நிலைப்படி தட்டிடுத்து…
அக்கம் பக்கம் கூட ஒருவரும் இல்லே….. வாசல் வழியா போனவாதான் பாத்துட்டு ஓடி வந்து எழுப்பி ஜலம் தந்திருக்கா… அதற்கு அப்புறம்தான் பாட்டிக்கு விழிப்பு வந்திருக்கு!…
விழிப்பு வந்த பின்னாடிதான் பாட்டிக்கே சுயநினைவே வந்திருக்கு… பாவம் விச்சு அண்ணா!…. மன்னியையும் பாத்துட்டு பாட்டியையும் பாத்துக்க சிரமப்பட்டுட்டா!… மன்னிக்கு நார்மல் டெலிவரிங்கிறதாலே மன்னியே அட்ஜஸ்ட் பண்ணிட்டா!…
வயசுதான் நம்மைவிட குறைச்சலே தவிர… அசாத்திய நெஞ்சழுத்தம்ங்கக்கா…. பாட்டி விழுந்துட்டதால, அண்ணா எங்க ஊர் கோமுப்பாட்டியை மன்னிக்கு துணைக்கு அனுப்ச்சு வச்சுருக்கா!.. கடைசியில் கேட்டா… மன்னிதான் கோமு பாட்டிக்கும் சேர்த்து வைத்தியம் பார்த்தாளாம்….” வர்ஷினி சிரித்தாள்…

“ம்ம்…. அப்புறம்?…” பத்மினி சுவாரஸ்யமாய் கேட்டாள்…

“மூன்று நாட்களில் மன்னி திரும்பிட்டா!… இங்கே வர விடாம பாட்டி ஓரே அழிச்சாட்டியம் பண்ணியிருக்கா!.. கோபாலய்யர் மாமாதான்… புத்தி சொல்லி மன்னியை வீட்டுக்குள்ளே இருக்கச்சொல்லியிருக்கா!….
பாட்டிக்கு மனசே இல்லையாம்… அதற்கு பழிவாங்குகிற மாதிரி மன்னியை விரட்டி விரட்டி வேலை வாங்கியிருக்கா!.. பாவம் மன்னி… எதிர்த்து ஒரு வார்ததை கூட பேசலையாம்… எல்லாத்தையும் பூமாதேவி மாதிரி தாங்கிட்டாளாம்… குழந்தை பெத்தவள்னு கொஞ்சம் கூட இரக்கம் இல்லாம பாட்டி நடந்துண்டதுக்கு…. பகவான் மறுபடியும் தண்டனை தந்துட்டார்…

“மறுபடியும்னா?..”

“மன்னி வந்து கொஞ்சநாள் கழிச்சு பாட்டி மறுபடியும் பாத்ரூமிலே வழுக்கி விழுந்துட்டா!..கால் முறிஞ்சுடுத்து…. அப்பவும் மன்னிதான் காப்பாத்தியிருக்கா… அண்ணாதான் பாட்டியை ஹாஸ்பிட்டலில் சேர்த்திருக்கா… அன்றைக்கு நைட்தான் எங்காத்துக்கு போன் வந்துச்சு….” வர்ஷினிக்கு வெட்கம் வந்து கன்னம் சிவப்பானது…

“ஏய் என்னடி சொல்ல சொல்ல வெட்கம்….” பத்மினி சீண்டினாள்…

“போங்கக்கா!… நேக்கு வெட்கமா இருக்கு… போன் வந்தப்போதான் நார ரெண்டு பேரும் மாடியிலே விளையாடிட்டு இருந்தோமே?….” வர்ஷினிக்கு வெட்கத்தில் மூச்சு திணறியது…

“அக்கா!…” வர்ஷினியின் முகம் ஆசையில் பளபளக்க…நாசி விடைத்து…. கண்களில் காமம் மின்ன…மேற்கொண்டு பேசுவதற்குள்..”டீ வரூ…..” விஸ்வநாதனின் குரல்…

“என்ன அண்ணா?…” வர்ஷினி வாரிச்சுருட்டிக்கொண்டு எழுந்து ஓடினாள்..”இருங்க்கா!… வந்துடறேன்!..”

“வந்தவாளுக்கு என்ன ஏதுன்னு பார்த்து செய்யாம நீ ஆத்துக்குள்ளோ போய் ஒளிஞ்சுட்டியா?..”

“இல்லேண்ணா!… பத்மினி அக்காவை பார்த்து ஒரு வாரம் ஆயிடுத்துல்லே… அதனால சித்த நேரம் பேசிண்டு இருந்தேன்… என்ன அண்ணா?…யாருக்கு என்ன பண்ணனும்?…”

“அவாளோடு வந்த ரவியை இங்கேயே நிறுத்திக்கறேளா?… இல்லை எங்காத்துக்கு கூட்டிட்டு போகட்டா?..”

“இல்லேண்ணா!… இங்கேயே கூடத்திலேயே இருக்கட்டும்… நான் பாத்துக்கறேண்ணா! … நீங்க கவலைப்படாம ஆத்துக்கு போயிட்டு காலம்பற நேரத்திலே வந்துடுங்கோ….

“மன்னி எப்ப போனா?….”

“நீங்க பஸ்ஸ்டாப்புக்கு போன சித்த நாழியிலேயே புறப்பட்டுட்டா!… கொழந்தை அழுதான்…. சரின்னு கிளம்பிட்டா!… ஏண்ணா?…”

“இல்லடி!… ஆத்துலே தனியா எப்படி இருப்பாளோன்னு….” விஸ்வநாதன் வழிந்தார்….

“அண்ணா!… ரொம்ப வழியாதீங்க!… சீக்கிரம் ஆத்துக்கு போங்கோ!…” வர்ஷினி சிரிப்புடன் அவரை அனுப்பி வைத்துவிட்டு ரவியை உள்ளே கூப்பிட்டு படுக்கை ஏற்பாடு செய்து தந்தாள்…

மின்னலாய் திரும்பி பத்மினியிடம் வந்தாள்….

“ஏண்டி?… நாம எங்கேடி படுக்கறது?…” பத்மினி கேட்க…

“ஆன்ட்டி, நீங்க, நான் மூன்றுபேரும் என் ரூமிலே படுத்துக்கலாம்!… ஆன்ட்டி கட்டிலிலே படுத்துக்கட்டும்…. நாம ரெண்டு பேரும் கீழே படுத்துக்கலாம்….”

மூவரும் வர்ஷினியின் ரூமில் அடைக்கலமாயினர்….சிறிது நேரம் பொதுவாய் பேசிக்கொண்டு இருந்து விட்டு அப்படியே கண்ணயர்ந்தனர்…

1 Comment

  1. 16 to17 please

Comments are closed.