ராஜா : ஆமா ணா
ரகு கட்டிலை பார்க்க அது அலங்கோலமாக கிடந்தது. அதை பார்த்துவிட்டு ரகு” நீ மேல என்ன பண்ற” என்று கேட்டான்.
ராஜா : நாளை மறுநாள் காலேஜ்ல, அதான் புக்ஸ், பிரண்டு கொடுத்த பென்டிரைவ் எல்லாத்தையும் எடுத்து வச்சுட்டு இருக்கேன்.
ரகு : சரி சரி என்று சொல்லிவிட்டு கீழே சென்றான். கீழே சென்று ரூமில் பார்க்க ஹேமாவை காணவில்லை மீண்டும் பத்மாவிடம் வந்து “ஹேமா எங்கம்மா? வே
மேலையும் காணோம்”
பத்மாவதி : இப்பதாண்டா குளிக்க போனா
ரகு : குளிக்கப் போய்டாலா
பத்மாவதி : ஆமா டா
ரகு : சரி சரி
பத்மாவதி : ஏன்டா தேடுற
ரகு : கோயிலுக்கு போகணும்னு சொல்லி இருந்தா அதான் சீக்கிரம் கிளம்புனு சொல்றதுக்கு தேடுனேன்.
பத்மாவதி : சாப்பிட்டு கூட்டிட்டு போடா
ரகு : சரி மா.
அதே நேரம் பார்த்து மோகன் கிச்சனுக்குள் வந்து “பத்மா நான் போய் கறி வாங்கிட்டு வந்துடுறேன் சிக்கனா மட்டனா” என்றார்.
பத்மாவதி : சிக்கன் ஒரு கிலோ மட்டன் அரை கிலோ வாங்கிக்கோங்க
மோகன் : சரி மா நான் கிளம்புறேன் என்று சொல்லிவிட்டு கிளம்பினார்.
ரகு ஹாலில் சென்று அமர சிறுது நேரம் கழித்து ஹேமா குளித்து முடித்து ரூமுக்கு சென்றாள் . ரகுவும் பின்னாலேயே சென்று ரூம் கதவை மூடினான். உள்ளே வெறும் ஈழப் பாவாடை மட்டும் கட்டிக்கொண்டு நின்றாள். அவள் அவளுடைய பேக்கில் புடவை தேடிக் கொண்டிருக்க ரகு அவனது பேக்கை திறந்து அதில் “ஒரு சிவப்பு சீ த்ரு சேலையை எடுத்து கொண்டு” அவள் கண்ணை மூடினான் .
ஹேமா : விடுங்க கோயிலுக்கு போகணும்னு சொன்னீங்கல்ல. இப்ப நீங்களே இப்படி பண்ணினா எப்படி? என்று சொல்ல அவள் கண்ணில் இருந்து மெதுவாக கையை எடுத்து அந்த சிவப்பு நிற சேலையை அவள் கையில் கொடுத்தான். ஹேமா அதை பார்த்துவிட்டு “சூப்பருங்க” எனக்கா .
ரகு : உனக்கு தான்
ஹேமா : எப்ப வாங்கினீங்க.
ரகு : சென்னையில் இருக்கும்போதே வாங்கிட்டேன் .உன்னோட பர்த்டே காக எடுத்தேன். புடிச்சிருக்கா.
ஹேமா : ரொம்ப பிடிச்சிருக்கு
ரகு : சரி கட்டிக்கோ