வழிமறியவள் – Part 53 35

EPISODE – ஹசன் வெளிநாடு பயணம்

ஒரு வாரம் கழிந்துருக்க,

ஹசனின் உடல்நிலை சிறிது குறைய,

மருத்துவ குழு வந்து அவரை சோதித்தது.

இருதயம் பலவீனமாக இருப்பதாகவும்

மேற் சிகிச்சைக்காக லண்டன் சென்று ஒரு

முழு பரிசோதனை செஞ்சிகிட்டா

நல்லாருக்கும் என்று பரிந்துரைக்க

ஹசன் வேண்டாம் என்று மறுத்தார்.

ஆனா வீட்டில் உள்ள நபர்கள் யாரும் அவரை விடவில்லை.

அதன் படி அந்த மாச இறுதியில்

அவர் லண்டன் சென்று பத்து நாட்கள் தங்கி முழு பரிசோதனையும்

செய்ய, ஆக வேண்டிய காரியங்கள் துரிதமாக நடைத்தேறின.

ஹசனும் பவித்ராவும் தனிமையில் இருக்கும்போது,

பவி, ஏங்க, நீங்க கண்டிப்பா லண்டன் போகத்தான் வேண்டுமா.

நான் இங்க எப்படி தனியா இருப்பேன்.

ஹசன், ஏண்டி செல்லம், எனக்கும் இஷ்டம் இல்லாதான்.

சதீசும், அமீரும் என்னை விட்டாத்தானே.

எனக்கு ஏதாவது ஆகிருமோனு பயப்படுறாங்க.

பவி, நானும் உங்க கூட வரட்டுமா,

ஹசன், வேண்டாம்டா, இந்த சமயத்துல நீ வந்தா ரொம்ப

கஷ்டமா இருக்கும் செல்லம்.

குழந்தை அபியாவை சமாளிக்க முடியாது.

இங்கேன்னா சலீம் இருக்கான்,

அவன் அபியாவை நல்ல பார்த்துக்குவான்.

பவி, (அபியாவை மட்டுமா, என்னையும் தான்,)

பவி…………………மௌனம்.

ஹசன், என்னடா, கோபமா.

பவி…………………மௌனம்.

ஹசன், அவளை அணைத்து அவளுக்கு முத்தம் கொடுத்து,

பத்து நாள்தான் டா.

எப்படியாவது சமாளி.

சரி என்று தலையை ஆட்டினா பவித்ரா,

பவி, நான் ஒன்னு சொன்ன கோபப்பட கூடாது.

ஹசன், கோபமா………………..சிரிக்க

பவி, சலீமுக்கு கல்யாண வயசு வந்திரிச்சி.

அவனுக்கு ஒரு பொண்ணு பார்த்து முடிச்சி வைக்கலாமில்ல.

ஹசன் அவள் முகத்தை ஆச்சர்யமாக பார்த்தார்.

பவி, என்னங்க, அப்படி பார்க்கறீங்க

ஹசன், உன்னை நினைச்சி நான் பெருமை படுறேண்டி செல்லம்.

சலீம் அம்மா ஸ்தானத்துல இருந்து இவ்வளவு பொறுப்பா

நினைக்க உன்னாலதான் முடியும்.

பவித்ரா சிரிக்க

ஹசன், அவளை தன் மார்போடு அணைத்து கொண்டார்.