மறுநாள் காலையில் தூங்கி எழுந்த சலீம்
குளிச்சிட்டு தன்னுடைய லேப்டாப்பை எடுத்து
சீரிஸாக வேலை பார்க்க ஆரம்பித்தான்.
ஒரு டெண்டர் அனுப்ப வேண்டி இருக்க
அவனின் முழு கவனம் அதின் மேல இருந்தது.
அவ்வப்போது பவித்ராவின் நினைவு அவன் கவனத்தை
திசை திருப்ப,
தன் கவனத்தை சிதறாமல் வேலையில் கவனமா இருந்தான்.
ரெண்டு மணி நேரம் முடிஞ்சிருக்க,
டெண்டர் மெயிலை அனுப்பிய சலீம்,
தலையை உதறி, உடம்பை சோம்பல் முறிச்சான்.
அங்கு இருந்த ஜக்கில் தண்ணி இருக்க
அதை ஒரு கண்ணாடி டம்ளரில் ஊத்தி குடிச்சான்.
வயிறு பசிக்க ஆரம்பிக்க
எதிர் சுவரில் இருந்த கடிகாரத்தை பார்க்க
மணி 8 .25
டிபன் கொண்டுட்டு வர சொல்ல போனை எடுக்க
கதவு தட்டப்படுகிற சத்தம் கேட்டது.
சலீம் நிமிர்ந்து பார்க்க,
பவித்ரா உள்ள வந்தா.
டிபன் தட்டை அவன் கையில் கொடுத்த பவித்ரா
மறுபடியும் அந்த தட்டை அவன் கையில் இருந்து வாங்கிட்டா
என்ன பவி, கொடுத்துட்டு தட்டை திரும்ப வாங்கிட்டே
நீயே ஊட்டி விட போறியா,
சலீம் கேட்க
ஓ, ஐயாவுக்கு இந்த நினைப்பு வேற இருக்கோ.
ஒழுங்கா கையை கழுவிட்டு வா,
அப்போதான் உனக்கு இட்டிலி, பவித்ரா சொல்ல
நச் என்று அவள் மண்டையில் ஒரு கொட்டு வைத்து
கையை கழுவ போனான்.
பவி, ஆ ஆ, தன் தலையை தடவை கொண்டே
அவனை முறைக்க
அவனும் அவளை பொய்யாய் முறைத்துக்கொண்டு
அவள் கையில் இருந்த தட்டை வாங்க தன் கையை நீட்ட
அவள் கொட்டு வாங்கிய வலியில், தட்டை தர மறுக்க
அவன் பிடுங்க
டன்………. டணார்……………..
சட்னி எடுத்துட்டு வந்த பீங்கான் கிண்ணம் கீழ விழுந்து
உருள
அதை பிடிக்க சடார் என்று கீழ விழுந்ததை பிடிக்க பவித்ரா குனிய
அதில் இருந்த சட்னி பவித்ரா கன்னம், கழுத்து மேல தெளிக்க
கோபத்தில் பவித்ரா அப்படியே, தலை மேல கை வைத்து தரையிலே
உட்கார்ந்துட்டா.
ஆரம்பிச்சிட்டாண்டா , மனசுக்குள் நினைச்ச பவித்ரா….
இதை பார்த்த சலீம் சிரித்து கொண்டு
அவனும் கீழ அமர்ந்தான்.
அமர்ந்தவன் என்ன நினைச்சான் என்று தெரியல,
உடனே கீழ இருந்த இட்டிலியை எடுத்து
அதை பவித்ரா கழுத்துல இருந்த சட்டினியில் தொட்டு சாப்பிட ஆரம்பிக்க,
இதை பார்த்த பவித்ரா
லூசு, என்ன பண்ற,
அவனை அந்த இட்டிலியை தின்ன விடாம தடுக்க
அவன் பிடிவாதமா அதை வாயில் போட்டு ஒரு
கடி கடிச்சி,
அடுத்த கடிக்கு சட்னி இல்லாம
மறுபடியும் அவ கிட்ட வர
இதை பார்த்த பவித்ரா
வராத………………………..