ஸ்ருதி Part 6 49

ஷெட்டி – அவளுக்கு பால் கொழுக்கட்டை என்றால் மிகவும் விருப்பம்.Non veg இல் முட்டை மட்டும் எடுத்து கொள்வாள்.Dish இல் சப்பாத்தி,பன்னீர் பட்டர் மசாலா என்றால் விரும்பி சாப்பிடுவாள்.ஆனால் நாங்கள் இருவரும் ஒன்றாக சாப்பிடும் போது தான் பிரச்சினை ஆரம்பமாகும்.

தொகுப்பாளர் – ஏன் சார் ?

ஷெட்டி – பின்ன என்ன சார்,சாப்பிடும் போது ஒரு கறிவேப்பிலை துணுக்கு கூட வீணாக்க கூடாது என்பாள்.முக்கியமாக பொங்கல் சாப்பிடும் போது மிளகை ஓரம் ஒதுக்கும் போது நான் வாங்குவேன் பாருங்க ஒரு திட்டு ,அதை தான் எதிர்க்கட்சி ஆள்கிட்ட கூட வாங்கினது இல்லை.அவகிட்ட ஒரு நல்ல பழக்கம் என்ன சாப்பிட முடியுமோ அதை மட்டும் எடுத்து கொண்டு ஒரு பருக்கை கூட வீணாக்காமல் சுத்தமாக சாப்பிடுவாள்.

தொகுப்பாளர் – அப்போ அவங்க சாப்பிட்ட தட்டில் முகமே பார்க்கலாம் என்று சொல்லி சிரிக்க

ஷெட்டி அவனும் ஆமாம் என்று கூறி சிரித்தான்.ஸ்ருதி கண்களால் அவனை பார்த்து நீ ரூமுக்கு வா அங்கே வச்சி உன்னை பார்த்துக்கிறேன் என்று ஜாடை காட்ட

தொகுப்பாளர் – மேடம் முறைக்கிறத பார்த்தா ,இன்று அறையில் ஒரு WWE WRESTLING யே நடக்க போகிறது.சார் எதுக்கும் ஹெல்மெட் எல்லாம் போட்டுக்கிட்டு பாதுகாப்பாக போங்க .

ஷெட்டி – என்ன சார் பண்றது எல்லா ஆம்பளைங்க நிலைமை அப்படி தானே இருக்கு . வெளியில தான் புலி ஆனால் வீட்டில் எலி என்று சொல்ல

அங்கு பயங்கர சிரிப்பலை எழுந்தது.

தொகுப்பாளர் – மேடம் இப்போ உங்களுக்கான கேள்வி ? அவருக்கு பிடித்த நடிகர் ?

ஸ்ருதி – உடனே ,அவருக்கு பிடித்த நடிகர் சில்வெஸ்டர் ஸ்டாலின்.எப்போ பார்த்தாலும் அவருடைய ACTIONS மூவீ தான் பார்த்து கொண்டு இருப்பார்.

தொகுப்பாளர் – உங்களுக்கும் அவருக்கும் கல்யாணம் ஆகி எவ்வளவு நாள் ஆச்சு ?

ஸ்ருதி – ஒரு மாதம் கூட ஆகவில்லை.

தொகுப்பாளர் : யப்பா , இவ்வளவு குறுகிய நாட்களில் எப்படி அவரை பற்றி இவ்வளவு சரியாக சொல்றீங்க .SIMPLY BOTH ARE BRILLIANT.

ஸ்ருதி அதற்கு ” ஒருத்தர் மேல் ஆர்வம் வந்து விட்டால் அவரை பற்றிய விவரங்கள் எல்லாம் தானாகவே தெரிய வரும் ”

தொகுப்பாளர் – மற்ற ஜோடிகளை பார்த்து ” DEAR CONTESTANTS இவங்க சொல்ற POINTS எல்லாம் நோட் பண்ணுங்கப்பா பண்ணுங்கப்பா அப்போ தான் அடுத்த போட்டியில் ஆவது வெற்றி பெற முடியும். சார் அடுத்த கேள்விக்கு போகலாமா ?

ஷெட்டி – ம் போகலாம் ?
தொகுப்பாளர் : சூப்பர் ,இதுவரை இரண்டும் பேர் சேர்ந்து கேட்கபட்ட நான்கு கேள்விகளுக்குமே சரியான விடை கூறி உள்ளீர்கள் .இந்த கேள்வி சரியாக விடை கூறி விட்டால் BEST COUPLES பட்டம் உங்களுக்கு ?

ஷெட்டி – சரி

தொகுப்பாளர் – உங்க மனைவி படித்த COLLEGE என்ன?

ஷெட்டி – அவ படிச்சது சென்னை ,ஆனால் எந்த COLLEGE என்று தெரியவில்லை.

தொகுப்பாளர் – சாரி சார் ,இந்த கேள்விக்கு நீங்கள் மதிப்பெண்ணை இழந்து விட்டீர்கள் .அவர்கள் படித்தது jayagovind Arts and science college

ஷெட்டி மனதிற்குள் ” ச்சே அன்று இரவு அவளது CERTIFICATES பார்த்தோம் ,ஆனால் COLLEGE NAME மிஸ்ஸாகி விட்டது ” என்று நொந்து கொண்டான்.

தொகுப்பாளர் : MADAM இப்போ உங்கள் முறை .வெற்றியை தீர்மானிக்க போவது உங்கள் கையில் தான் இருக்கிறது.உங்களுக்கான கேள்வி ,இதுவரை அவர் வாழ்வில் ஒரே முறை கண்ணீர் விட்டு அழுதேன் என்று கூறினார் .அது எந்த தருணம் ?ஏன் என்று தெரியுமா ?

ஸ்ருதி – தெரியும் .

தொகுப்பாளர் : அப்போ சொல்லுங்க

ஸ்ருதி – எனக்கும் அவருக்கும் இடையே சிறு ஊடல் வந்து அதில் நான் என் நாடி நரம்பை அறுத்து கொண்டேன்.அப்பொழுது மருத்துவமனையில் என்னை அட்மிட் செய்யும் தருணம் எப்படியாவது என்னை காப்பாற்றுமாறு டாக்டரிடம் கெஞ்சி அழுது கொண்டு இருந்தார்.

தொகுப்பாளர் : அது என்ன ஊடல் தெரிஞ்சுக்கலாமா MADAM?

ஸ்ருதி – சாரி,அது எங்கள் இருவர் சம்பந்தப்பட்ட PERSONAL விசயம் ,அதை வெளியில் சொல்ல முடியாது.ஆனால் அந்த சம்பவம் நிகழ்ந்த பிறகு தான் என் மேல் அவர் கொண்ட அன்பு எனக்கு புரிய வந்தது.

தொகுப்பாளர் : SORRY MADAM ,நீங்கள் கூறியது தவறான …….

எல்லோரும் அமைதியாக ஒரு கணம் பார்க்க

தொகுப்பாளர் : இல்லை சரியான விடை.இந்த போட்டியின் BEST COUPLES TITLE WINNER நீங்கள் தான். RS 50000 prize money Goes to ஸ்ருதி,ஷெட்டி ஜோடி .

பிரியா பவானி சங்கர் கையால் பட்டம் மற்றும் prize money வாங்கிக் கொண்டனர்.

பிரியா பவானி சங்கர் வந்து ,”உண்மையில் திருமணமாகி ஒரு மாதத்திற்குள் இவ்வளவு தூரம் ஒருவரை ஒருவர் புரிந்து வைத்து இருப்பது வியப்பாக இருக்கிறது” என்று பாராட்ட