ஆசை மட்டும் சிறிதும் குறையவே இல்லை 4 59

இப்படிச் சொன்னால் எந்தக் காதலிக்குத்தான் கோபம் வராது..? வந்தது…!!

தொடர்ந்து நான்கைந்து பூச்செண்டுகள் என்மேல் வேகமாக வந்து விழுந்த வண்ணமிருந்தது..!!

”இங்கிருந்து.. நீ கோபப்படாமல் போய்விடு மோகினிப் பிசாசே..! பொருமையில்தான் அவள் பூமாதேவி.. அவளுக்கு கோபம் என்ற ஒன்று வந்துவிட்டதோ..?? அவ்வளவுதான்..!! தரை தொடும் உன் பத்தடிக் கூந்தலில் ஒற்றை மயிர்கூட மிஞ்சாது..!! பிறகு மொட்டைத் தலையுடன் உலா வரும் உன்னை எவரும் சீந்தக் கூட மாட்டார்கள்..!! ஓடிவிடு இங்கிருந்து..!!” என்றேன்.

அதற்கு மேலும்.. அவளால் பொருமை காக்க முடியவில்லை. செடி மறைவில் இருந்து.. வேகமாக மூச்சு வாங்கிக் கொண்டு என்னிடம் வந்தாள்.! நான் கண்களை மூடிக்கொண்டு மேலும் சொன்னேன்.
”நான் இவ்வளவு சொல்லியும் கேட்காமல்.. என் அருகில் வேறு வந்து விட்டாயா..?? அப்படியானால்.. நீ மொட்டைத் தலை மோகினியாகத்தான் அலையயப் போகிறாய்..!! எதற்கும்.. உன்னை ஒருமுறை.. அழகிய மோகினித் தோற்றத்தில் பார்த்து விடுகிறேன்..! அதற்கு பிறகு.. உன்னைக் காணச் சகிக்காது..!! நீ அவ்வளவு கொடூரமாக இருப்பாய்..!!” என்று என் மூடிய இமைகளைத் திறந்து பார்த்தேன்.

அப்போதுதான்.. அவளைப் பார்ப்பது போல.. சடக்கென எழுந்து உட்கார்ந்து..
”ஓஓ.. என் மகிழ்வதனியா..?? வா தேவி..!! இப்போதுதான்.. சற்று முன்.. இங்கு ஒரு மோகினிப் பிசாசு வந்து என் மீது மலர்ச்செண்டை வீசி விளையாடிக் கொண்டிருந்தது..! உன்னைப் பார்த்ததும் அது பறந்து ஓடி விட்டது போல் இருக்கிறது..!! ஏய்ய்.. மோகினிப் பிசாசே.. எங்கேயாவது இருக்கிறாயா..?? அப்படி எங்காவது ஒளிந்து கொண்டிருந்தால்.. ஓடிவிடு இங்கிருந்து..!! இதோ.. நான் சொன்ன.. என் இதய ராணி வந்து விட்டாள்..! அவள் கண்ணில் பட்டு விடாதே..!!” என்றேன்.

”மோகினிப் பிசாசிடம் என்னைப் பற்றி ஏதோ சொன்னதாகச் சொன்னீர்களே..??” என்னை நெருங்கி நின்றாள்.

”ஆமாம்..!! இப்படி அமர்.. !!” புல் தரையில் தட்டினேன்.

”இருக்கட்டும்..!! அந்த மோகினி பிசாசிடம் என்ன சொன்னீர்கள் என்று சொல்லுங்கள் முதலில்..!!” அவள் குரலில் உஷ்ணம் தெரிந்தது.

நான் அவளை.. அன்னாந்து பார்த்து… வலது கரத்தின் ஒற்றை விரலை உயர்த்திச் சொன்னேன்.
”உண்மையைச் சொன்னேன்..!!”

இடுப்பில் கைகளை வைத்துக் கொண்டு நிலவொளியில் என்னை முறைத்தாள்.
”அது என்ன.. வலது கரத்தின் ஒற்றை விரலை உயர்த்தி… சுழற்றி…??”

”ஓ.. அதுவா..?? அது ஒன்றும் இல்லை.. மகிழ்வதனி..!! ‘சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த’ என்கிற ஒரு நடிகர்.. பல நூற்றாண்டுகளுக்குப் பின்.. ஒரு திரைப் படத்தில் இப்படித்தான்.. வலது கரத்தை உயர்த்தி… ஒற்றை விரலைச் சுழற்றி.. வசனம் பேசி.. ரசிகர்களை மகிழ்விப்பார் என்று.. இப்போதுதான் இங்கு.. மல்லாந்து படுத்துக் கொண்டு… வானத்தைப் பார்த்து.. வான சாஸ்திரம் சொல்வதை யோக நிஷ்டையில் உணர்ந்து கொண்டிருந்தேன்..!!” என்றேன்..!!

அவள் எவ்வளவு கடுப்பாகியிருந்தால்… ‘ணங்ங்..’ கென்று என் மண்டையில் ஒரு கொட்டு வைத்திருப்பாள் என்று.. பார்த்துக் கொள்ளுங்களேன்.. !!புடைத்துக் கொள்ளுமளவுக்கு.. நடு மண்டையில் கொட்டு வாங்கிய நான்.. அதைச் சத்தமின்றி தேய்த்துக் கொள்வது தவிற.. எனக்கு வேறு வழியில்லை.. !!

‘ஆ..!!’ என்று நான் ஒரு சிறு ஒலி எழுப்பினாலும்.. அது ஒரு வீர ஆண்மகனுக்கு அழகாக இருக்காது..!!

என் தேவியின் கோபம் தனிய.. என்னைக் கொட்டி விட்டாள். நான் மென்னகை புரிந்தவாறு அவள்… வலக்கரம் பற்றினேன்.!
”உட்கார் தேவி..!!”

”மன்னிக்கவும்.. ஏதோ ஒரு கோபத்தில்…” உடனே அவள் குழைந்து விட்டாள்.

தன் பட்டாடை என் தோளில் தவழ.. என்னை உரசிக் கொண்டு உட்கார்ந்தாள்.
”வலிக்கவில்லையா.. இளவரசே..?”

”ஒரு பூச்செண்டு மோதி.. வலி எடுக்கிறதென்றால்.. அது ஒரு வீரனின் மண்டையாக இருக்காது..!!” அவளது நறுமணத்தில் நான் என்னை மறந்தேன்.

அவள் வலக் கரம் என் கையில் இருக்க.. இடக்கரம் கொண்டு என் உச்சியைத் தேய்த்து விட்டாள்.
”என்னை மன்னிக்க வேண்டுகிறேன் இளவரசே..!! நான் ஏன்.. அப்படி கோபப்பட்டேன் என்பது எனக்கே புதிராக இருக்கிறது..!!” கச்சினுள் அடங்கிய.. அவளின் இளம் முலை என் தோளில் அழுந்திப் பதிய.. அவள் என் தலை வருடியவாறு சொல்ல… என் இடக்கரத்தை அவள் மெல்லிடையில் போட்டு வளைத்தேன்.

”இவ்வளவு நேரம் தெரியாத வலி.. இப்போதுதான் தெரிகிறது..தேவி..!!” என் முகத்தை.. அவள் மார்பின் பக்கத்தில் கொண்டு போனேன்.