”தயை கூர்ந்து மன்னியுங்கள் இளவரசே..!!” அவள் கவனம் முழுவதும் என் தலை வருடுதலிலேயே இருந்தது.
என் கரம் அவள் இடை தழுவியதை அவள் உணரவில்லையா.. அல்லது.. அதை பெரிது படுத்தவில்லையா என்று தெரியவில்லை.
”வலி.. என் சிரசில் இல்லை தேவி..”
”பிறகு..??”
”நீ.. குடி கொண்டிருக்கும் என் இதயத்தில்..!!” அவள் இடையை மெல்ல இறுக்கினேன்.
” ஏன்..??”
” ஏனோ…!!” அவளின் முலைக் கச்சுக்கு மேற்புறம் இருந்த.. இடைவெளியில் மிளிர்ந்த.. தளிர் மேனியில் என் உதடுகளைப் பதித்து.. முத்தம் கொடுத்தேன்.
அடுத்த கணம் அவள் பெண்மை விழித்துக் கொள்ள.. சட்டெனப் பின் வாங்கினாள். அவளைப் பின்வாங்க விடாமல்.. அவள் இடையை இறுக்கிப் பிடித்து.. அவளை மீண்டும் என் மேல் இழுத்து.. அணைத்தேன்.
”என் இதய வலியை.. உன்னையன்றி யார் போக்குவார் தேவி..!!” செழுமை படர்ந்த.. அவளின் கன்னங்களுக்கு முத்தம் கொடுத்தேன்.
”இளவரசே…..”
”சொல் என் அன்பே..??”
”நான் முன்பே சொன்னதுதான்..! நான் தங்களுக்குரியவள்தான்.. ஆனால் கொஞ்சம் பொருமை காக்க வேண்டும்..!!” மிகவும் மெலிதான குரலில் சொன்னாள்.
”அப்படியே…ஆகுக..!!” என்றேன்.
அவளது திமிறல்.. அடங்கியது. என் மடியில் மெல்லச் சாய்ந்தாள்.
”ஆமாம்.. இந்த நேரத்தில்.. இங்கு என்ன செய்கிறீர்கள் இளவரசே..?”
”உன் பதில் என்னவோ..??” அவளை நான் வினவினேன்.
”காதல் கொண்ட ஒரு பெண்ணின் உள்ளம் படும் பாட்டை.. அந்த வானத்து நிலவோடும்.. இந்த நந்தவனத்து மலர்களோடும் பகிர்ந்து கொள்ள வந்தேன்..!! வந்தால்…”
”ம்.. ம்ம்..!! வந்தால்..??” அவளின் பூந் தளிர் மேனியின் நறுமணத்தில்.. என் உள்ளம் களிப்புற… ஆண்மை அதில் ஆலிங்கனம் புரியத் தொடங்கியது.
”வந்த இடத்தில்…”
”வந்த இடத்தில்…??”
”தாங்களும்…!!”
”ஆம்.. நானும்..!! ஆனால் என் அன்பே.. நிலவோடும்.. மலர்களோடும் நான்.. என் காதலைப் பகிர்ந்து கொள்ள வரவில்லை..! என் மனதிற்கு உகந்த இடமாக.. சற்று உலாவ வந்தேன்.!!” அவளது கருநிறக் கூந்தலை மெதுவாக தடவினேன்.
”தவறாகப் புரிந்து கொண்டீர்கள் இளவரசே..! நான்.. எனது காதலை பகிர்ந்து கொள்ள வரவில்லை. என் காதலை தங்களுடன் மட்டும்தான்..! ஆனால் நான் வந்தது.. என் உள்ளம் படும் பாட்டைப் பகிர்ந்து கொள்ளத்தானேயன்றி…” என விளக்கமளித்தாள்.
”ஆ.. எவ்வளவு அழகாக.. பேசுகிறாய் அன்பே..! அருகில் வா.. அழகிய சொற்களை வழங்கும்.. அந்த அமுத வாய்க்கு.. நான் ஒரு முத்தம் வழங்க வேண்டும்..!!” அவள் நாடியைப் பற்றி.. என் அருகில் இழுக்க முயற்சித்தேன்.
”ஆரம்பித்தாயிற்றா..??” மெல்லச் சிணுங்கினாள்.
அப்போதுதான் நான்.. நினைவு வந்து.. அந்த நந்தவனத்தைச் சுற்றிலும் நோட்டம் விட்டேன். நான் என்ன பார்க்க விழைகிறேன் என்று பார்க்க… நான் பார்க்கும் திசையில் எல்லாம் அவளும் பார்த்தாள். பின்.. மெல்லக் கேட்டாள்.
”என்ன தேடுகிறீர்கள் இளவரசே..?”
”உனது மெய்க்காவல் படை..!!”
”மெய்க்காவல்……”
”ஆம்.. என்னைக் காண வரும்போதெல்லாம் நீ.. உன்னுடன் மெய்க்காவல் படையை அழைத்து வருவதாகச் சொன்னாயல்லவா..? அதுதான் எங்கே என்று தேடுகிறேன்..!!”
”ஆ.. இளவரசே… ஆனாலும் தாங்கள்… இவ்வளவு…” என்று என் நெஞ்சில் குத்தினாள்.
”இவ்வளவு..??” நான் குனிந்து.. என் மடியில் தவழ்ந்த அவள் நெற்றியில் முத்தம் கொடுத்தேன்.
”இவ்வளவு..??”
”போங்கள்..!!”
”இன்னும் வேண்டுமா..??”
”வேண்டும் மட்டும் வாங்கிக் கொள்ளும் நாள்.. இன்னும் வரவில்லை என்றே கருதுகிறேன்..!!”
”காதலுக்கு உரிமை கோர வேண்டிய அவசியமில்லை.. என்றே நானும் கருதுகிறேன்..!!” அவளின் தளிர் புஜத்தை.. மெதுவாகத் தடவி.. அழுத்தினேன்.
”உரிமையின்றி.. புரியும் காதல்.. ஒழுக்கத்தில் சேராது.. என்றும் கருத வேண்டும்..!!”