என் காதலி Part 13 156

அப்புறம் ஒரு வகைல எனக்கு இந்த ஆக்சிடன்ட் ஆனதுல நான் சந்தொசபடுறேன் என்றான் டேவிட் .ஏன்டா அப்படி சொல்ற என கேட்டான் விக்கி இப்படி ஆனதால தான நீயும் நானும் மறுபடியும் ஒன்னு சேர முடிஞ்சுச்சு மறுபடியும் பேச முடிஞ்சுச்சு .

இந்த அஞ்சு மாசம் உன் கிட்ட பேசாம எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு நானா வந்து பேச நினைப்பேன் ஆனா என் ஈகோ என்னைய விடல ஆனா இப்ப கடவுளா நம்ம நட்ப மறுபடியும் ஒன்னு சேத்து வச்சு இருக்காரு என்றான் டேவிட் .

சரி எதுக்குடா பழச எல்லாம் பேசிகிட்டு நீ இப்பதைக்கு ரெஸ்ட் எடு நம்ம இன்னொரு நாள் நல்லா ரொம்ப நேரம் பேசிகிருவோம் என்றான் விக்கி ,ஓகே சுயர்டா என்றான் டேவிட் .பின் காப்பியை குடித்து விட்டு இருவரும் கிளம்பினார்கள் . பின் மணியை இறக்கி விட அவன் வீட்டிற்கு போனான் .வீட்டுக்கு வாடா என்றான் மணி .இல்ல மச்சான் இன்னொரு நாள் என்று விக்கி சொல்ல

அட வாடா வீடு வரைக்கும் நீ வந்துட்டு வீட்டுக்குள்ள வராம போன வள்ளி அப்புறம் உன் கிட்ட பேச மாட்டா என்று சொன்னான் .ஓகே வரேன் என்று மணி வீட்டிற்குள் போனான் .ஹ சிஸ் எப்படி இருக்க என்றான் விக்கி .

அவள் ஒரு கடுப்போடு நல்ல இல்ல என்றாள் ,இங்கயும் அப்படிதான் என்று விக்கி நினைத்து கொண்டு ஏன் என்ன ஆச்சு என்றான் விக்கி .ஒன்னும் இல்ல நீ எதுவும் சாப்பிடிரியா என்றாள் வள்ளி .

அது இருக்கட்டும் டேய் மணி வள்ளி ஏன்டா இப்படி இருக்கா என்ன ஆச்சுடா என்றான் விக்கி .அவளுக்கு என் மேல கோபம் அதான் இப்படி உம்முன்னு இருக்கா என்றான் மணி .

ஏண்டா நீ எதுவும் அவள திட்டினியாடா என்றான் விக்கி .திட்ட எல்லாம் செய்யலடா அவளுக்கு இப்ப 8 மாசம் ஆச்சு அதுனால ரொம்பவே பயப்படுறா அவங்க அப்பா அம்மாவ கூப்பிட்டு வர சொல்லி என்னைய ரயில் டிக்கெட் போட சொன்னா அது கேன்சல் ஆனா அதுக்கு நான் என்ன பண்ணுவேன் என்றான் மணி .

ஏண்டா கேன்சல் ஆச்சு என்றான் விக்கி .ஏண்டா நீ நியுஸ் எல்லாம் பாக்க மாட்டியா நம்ம ஸ்டேட்ல மழை கொட்டோ கொட்டுன்னு கொட்டி தமிழ் நாடு முழுக்க வெள்ளத்துல மிதக்குது வீடே மிதக்குது ,இதுல எப்படி நம்ம ஊர்ல இருந்து ரயில் வரும் .

இப்ப என்ன அவங்க அப்பா அம்மா இல்லாட்டி நான் இல்லையா இவளுக்கு என்றான் மணி .உங்களுக்கு என்ன தெரியும் நீங்க ஆம்பிளக பொண்ணு இருந்து எங்கள மாதிரி நீங்களும் குழந்தைய சுமந்தா தெரியும் எங்க வலி கஷ்டம் வேதனை எல்லாம் .

அதுவும் எனக்கு முத பிரசவம் வேற உலகத்துல எல்லா பொன்னும் முத பிரசவத்துக்கு அம்மா பக்கத்துல இருக்கணும்னு தான் நினைப்பாங்க . என் பயம் உங்களுக்கு எப்படி தெரிய போகுது நீங்க எல்லாம் உடல் சந்தோசத்துக்கு விந்த செலுத்திட்டு போயிடுவிங்க நாங்க தான் சுமக்கிறது என்றாள் வள்ளி .

பாருடா இப்படி தான் எதாச்சும் பேசி என் கோபத்த கிளருடா நான் இன்னும் ஒரு வருஷம் போகட்டும்னு கூட தான் சொன்னேன் இவ கேட்டாளா என்றான் மணி .

ஆமா இன்னும் ஒரு வருஷம் போனா உங்க அம்மா என்னைய மலடின்னு சொல்லிட்டு உங்களுக்கு வேற ஒரு பொண்ண கல்யாணம் பண்ணி வச்சுடுவாங்க அதுக்குதான நீங்களும் அடி போடுறிங்க என்றாள் வள்ளி .இங்க பாரு எங்க அம்மாவ பத்தி பேசுனா அவளவுதான் என்றான் மணி .

அப்போது தான் விக்கிக்கு அந்த கர்ப்பம் என்ற வார்த்தையை கேட்டதும் சுவாதி நினைப்பு வர மணியை பார்த்தான் , மணி 9 ஆச்சு ,ஐயோ பாவம் உடனே கிளம்பனும் என்று நினைத்து கொண்டு அவர்கள் இருவரிடமும் ஹலோ நீங்க சண்ட போட்டு கிட்டே இருங்க நான் கிளம்புறேன் என்று சொன்னான் , இருவரும் சண்டையை நிறுத்தி விட்டு சாப்பிட்டு போடா என்றார்கள் . இருக்கட்டும் லேட் ஆகிடுச்சு என்றான் விக்கி .

7 Comments

  1. Going nice, very good well done. Looking for next part

  2. Please upload next post soon

  3. Next part sekiram upload pannunga … Vera level story 🤯.. verithanama waiting for next part…

  4. நண்பா என்ன ஆச்சு கதையை தொடருங்கள்

  5. Continue this story. It is unique

  6. Continue this story. It is unique

Comments are closed.