என் காதலி Part 10 112

டேய் இத எத்தனையோ தடவ நான் சொல்லிட்டேன் ஆனா நீ கேக்க மாட்டிங்குற அவன மறந்துட்டு ஒழுங்கா நீ இன்னைக்கு வா நீ வராட்டி வள்ளி உன் கூட எப்பவுமே பேச மாட்டா நானும் பேச மாட்டேன் என்ன புரிஞ்சுச்சா என்று சொல்லி விட்டு போனான் .

விக்கிக்கு ஒரே குழப்பமாக இருந்தது எப்படி போவது என்று .டேவிட்டை கடைசியாக அவன் கல்யாண ரிசப்சென்க்கு முதல நாள் பார்த்தது . கிட்டத்தட்ட 7 மாசம் ம்ம் அவன் முகத்தில நான் எப்படி முழிக்கிறது அன்னைக்கு மாதிரியே இன்னைக்கும் என்னையே பாத்த உடனே எந்திருச்சு கோபத்தில போயிட்டா ம்ம் கண்டிப்பா போவான் .

நம்ம என்ன சாதரான காரியமா பண்ணி இருக்கோம் .நட்பிலே பெரிய தொரகம் பண்ணி இருக்கோம் .அவனுக்கு கிடைக்காத ஒன்ன கிட்டத்தட்ட தட்டி பறிச்சு இருக்கோம் .பின் சுவாதியை நினைத்து பார்த்தான் .டேவிட்யும் நினைத்து பார்த்தான் ,ரெண்டு பேரையும் மாறி மாறி நினைத்து பார்த்து விட்டு அழுதான் வேணாம்டா விக்கி சுவாதி உனக்கு பாவம் செக்ஸ் வச்சதுக்கே அன்னைக்கு ரொம்ப மனசு உடைஞ்சு போயிட்டான் .

அவ வேற எவன் கூட வேணாம் போயிருக்கலாம் ஆனா என் கூட அதாவது அவன் பெஸ்ட் பிரண்டடோட வேணாம் அப்புறம் அவன் என்னைக்குமே என் கிட்ட பேச மாட்டான் .அதான் சுவாதி குழந்தை பிறந்ததும் கனடா போயிருவாள அதுக்கு அப்புறம் அவன் சமாதனபடுத்தி நம்மளும்ம் எப்பயும் போல இருப்போம் என்று நினைத்து கொண்டான் .

பின் சாயங்காலம் சரி மணிக்காகவும் வள்ளிக்ககாகவும் வளைகாப்புக்கு போயிட்டு வருவோம் என்று நினைத்து கொண்டு மணியை கூப்பிட்டான் .யே மணி நான் வீட்டுக்கு போன வந்தாலும் தான் வருவேன் அதுனால நீ சாய்ங்காலம் போகும் போது என் கூட கார்ல வந்துரு நம்ம ஒன்னாவே போயிடுவோம் என்றான் .

ஓகே டா சந்தோசம் என்றான் மணி .பின் விக்கி சரி எப்படி டேவிட் பாக்க போறோமோ என்று நினைத்து கொண்டு கிளம்பினான்…

பின் மணியையும் கூப்பிட்டு கொண்டு தன் காரில் மணி வீட்டிற்கு வளைகாப்பிற்கு சென்றான் . அங்கு போனால் வெறும் பெண்கள் கூட்டமாக இருந்தது , இருந்த ஒரு சில ஆண்களும் கல்யாணம் முடித்தவர்களாக பொண்டாட்டிக்கு பயந்து அமைதியாக எல்லாரும் ஒரு ஒரமாக பாவமாக நின்று கொண்டு இருந்தனர் .வள்ளி ஒரு ஓரமாக ஒரு சேரில் நடுவில் உக்காந்து இருக்க அவளை சுற்றிலும் பெண்கள் மொயித்து கொண்டு பேசி கொண்டு இருந்தார்கள் .

மணி வந்ததும் அவனுக்கு ஸ்நாக்ஸ் கொடுத்து விட்டு இருடா கொஞ்சம் வேல இருக்கு அது மட்டும் இல்லாமா வந்த கெஸ்ட் எல்லாத்துக்கும் ஹாய் சொல்லிட்டு வந்தறேன் என்றான் .இருக்கட்டும்டா நீ போ எதுவும் ஹெல்ப் னா என்னையே கூப்பிடு நானும் வரேன் என்றான் .ஓகேடா என்று சொல்லிவிட்டு மணி உள்ளே போனான் .பின் விக்கி ஒரு ஒரமாக நின்றான் .விக்கியை பார்த்ததும் வள்ளி கையை காண்பித்து அவனை பார்த்து சிரித்தாள் ,

விக்கியும் பதிலுக்கு சிரித்தான் .பின் விக்கி சுற்றிலும் பார்த்தான் .எல்லாம் நாப்பது வயசு ஆண்டிகள இருக்குதுக இல்ல கல்யாணம் முடிச்சவளுகளா இருக்காளுக ஒரு சின்ன பொண்ண கூட காணோம் எதுக்குடா விக்கி இங்க வந்தோம் என்று நினைத்தான் .பின் எங்க இந்த டேவிட் பயல இன்னும் ஆள காணோம் என்று நினைத்து கொண்டு பார்த்தான் .அவனை இன்னும் காண வில்லை .எப்படியும் வருவான் அவன் வரர்துக்குள்ள எங்கயாச்சும் போயி ஒளிஞ்சுக்குவோம் இல்ல பேசாம இடத்த காலி பண்ணிடுவோமா அதான் மணி பிஸியா இருக்கானே அதான் நல்ல யோசனை கிளம்புவோம் என்று நினைத்து கொண்டு ஸ்நாக்ஸ் தட்டை ஒரமாக வைத்து விட்டு மெல்ல கதவு பக்கம் போகும் போது

ஒரு சிறுவன் வந்து அவன் சட்டையை பிடித்து இழுத்து கூப்பிட்டான் ,விக்கி குனிந்து என்னடா தம்பி என்றான் ,அந்த அக்கா உங்கள கூப்பிட்டாங்க என்று வள்ளியை காண்பித்தான் .போச்சு இவ காலேஜ் டிராப் ஆவட்னாலும் ஓவர் புத்திசாலியா இருக்காளே அங்க உக்காந்து கிட்டு நம்ம எஸ்கேப் ஆகுறத கரெக்ட்டா கண்டுபிடிச்சுட்டாலே சரி போயி ஹாய் மட்டும் சொல்லிட்டு கிளம்பிடுவோம் என்று நினைத்து கொண்டு சிரித்து கொண்டே அவள் கிட்ட போனான் .