என் காதலி Part 10 109

அவன் சிரித்து கொண்டே வண்டியை ஓட்டினான் .டேய் அட்லிஸ்ட் வண்டிய கொஞ்சம் ஸ்லொவ் ஆச்சும் போடா என்றாள் .ஓகே என்று வண்டியை மெல்ல கொண்டு போனான் .பின் ஒரு வழியாக வண்டியை கொண்டு வந்து மார்கெட்டில் வந்து நிப்பாட்டினான் .யே என்னடா இங்க கொண்டு வந்து நிப்பாட்டிருக்க என்றாள் .நீதான மாங்கா சாப்பிடனும்னு சொன்ன அதான் இங்க கிடைக்குமான்னு பாப்போம் என்றான் .

என்ன ஆச்சு இன்னைக்கு இவன் ரொம்ப நல்லவனா இருக்கான் என்ன ஆச்சு இவனுக்கு என்று நினைத்து கொண்டு மும்பை மார்கெட்ல மாங்கா கிடைக்குமாடா என்றாள் .தெரியல போயி பாத்துட்டு வரேன் நீ வண்டில இரு என்றான் .யே என்னால தனியா இருக்க முடியாது நானும் உன் கூட வரேன் என்றாள் .யே உள்ள கூட்டதுல யாரும் இடிச்சுருவாங்க நீ வண்டில இரு நான் கண்டிப்பா வாங்கிட்டு வரேன் என்றான் .

அதுக்கு இல்ல எனக்கு பயமா இருக்கு கூட்டமும் கம்மியா தானே இருக்கு அதுனால நானும் வரேன் என்றாள் .சரி நீ என்னைக்கு நான் சொன்னத கேட்டு இருக்க வா பாத்து என்றான் .அவள் மெல்ல சிரித்து கொண்டே வந்தாள் .விக்கி முன்னே நடக்க சுவாதி மெல்ல வயிற்ரை பிடித்து கொண்டே நடந்தாள் ,கொஞ்ச தூரம் நடந்த பின் சுவாதி ஒரு கல் தடுக்கி விழ போனவளை விக்கி பிடிக்க இருவரும் ஒருவரை ஒருவர் நேருக்கு நேர் பார்த்து கொண்டனர் .

விக்கி அவள் கைகளை நன்கு பிடித்து இருந்தான் .பின் சுவாதி சுதாரித்து அவன் கை விரல்களில் இருந்து தன் கை விரல்களை விடுவித்து கொண்டு அவனை மெல்ல நேருக்கு நேர் பார்த்து தேங்க்ஸ் என்றாள் .விக்கி என்ன சொல்வது என்று புரியாமல் ஓகே என்று மட்டும் சொன்னான் .

பின் மார்கெட் தரை எல்லாம் ஈரமாகி இருப்பதை பார்த்து இதுக்கு தான் நீ வர வேணாம் நானே வாங்கிட்டு வரேன்னு சொன்னே நீ கேக்கல பாரு எப்படி சேரும் செகதியுமா இருக்குன்னு என்றான் பரவல நான் பாத்து நடந்துகிறேன் என்று சொல்லி கொண்டு மீண்டும் வழுக்கி விழ போனவளை பிடித்து யே லூசு என் கைய பிடிச்சுக்கோ பாத்து நான் கூப்பிட்டு போறேன் என்றான் .

பரவல இருக்கட்டும் என்று மீண்டும் விலகி நடந்தாள் .இருவரும் ஒரு கடைக்கு சென்றனர் .விக்கி அவரிடிம் பேசி விட்டு வந்தான் .என்ன சொன்னாரு என்றாள் ,அவரு இப்ப மாங்கா சீசனே இல்ல இப்ப போயி கேக்குரிங்கன்னு சொல்லி சிரிக்கறாரு என்றான் . என்னால முடியல விக்கி நான் போயி ஐஸ் கீரிம சாப்பிட்டுகிறேன் என்று கிளம்ப போனாள் .அப்போது அவளை அங்கிட்டு இருந்து ஒருவர் கொண்டு வந்த கூடை இடிக்க போனது .

உடனே அவள் தோள்பட்டையை பிடித்து இழுத்தான் .இருடி அவசர குடுக்கை இது மட்டும் தான் கடையா இன்னும் ரெண்டு மூனு கடைல கேட்டு பாப்போம் என்றான் அவள் தோளில் கை போட்டு கொண்டு ,சரி என்று சொல்லிவிட்டு சுவாதி அவள் தோளில் இருந்து அவன் கைகளை எடுத்து விட்டாள் ,அட்ச்சீ வா இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல ஒழுங்கா நடக்க தெரியல ரெண்டு இடத்துல விழ தெரிஞ்ச ஒரு இடத்துல மொத தெரிஞ்ச இதுல நான் தொட்ட உடனே மேடம் விலகுறாங்க

ஒழுங்கா என் கைய பிடி என்று அரட்டினான் .என்னடா அரட்டுர என்றாள் ,ஏ வா பேசாம என்று அவள் கை விரல்களை பிடித்து கொண்டு அவளை மெல்ல அடுத்த கடைக்கு கூப்பிட்டு சென்றான் .அங்கும் மாங்கா கிடைக்கவில்லை இப்படியே ஒரு ரெண்டு மூனு கடைக்கு சென்றனர் எங்கும் மாங்கா கிடைக்கவில்லை .பின் சுவாதியின் கையை ஒரு இடத்தில் விட்டான் .என்ன விக்கி எங்கயுமே கிடைக்காதா என்று கண்களை சுருக்கி கொண்டு வருத்ததோடு கேட்டாள் .

அவள் அப்படி கண்களை சுருக்கி கொண்டு கேப்பதும் விக்கிக்கு அழகாக தெரிந்தது .ம்ம் வருத்தலையும் அழகாதான் இருக்கா என்று மனதில் நினைத்து கொண்டு .இப்ப என்ன பண்ணலாம் நீயே சொல்லு என்றான் ,என்ன பண்ண அதான் எங்கயும் கிடைக்கலையே வா வீட்டுக்கே போவோம் என்றாள் .விக்கிக்கு அவள் முகத்தை பார்க்க பாவமாக இருந்தது .

அப்போது விக்கிக்கு ஒரு யோசனை தோன்றியது .சுவாதி நீ இங்கயே இரு நான் ஒரு போன் பேசிட்டு வரேன் என்று சொல்லி விட்டு அவளை விட்டு கொஞ்ச தூரம் தள்ளி போயி அவளுக்கு கேக்கதாவரு மணிக்கு போன் அடித்தான் .என்ன விக்கி என்ன விஷயம் என்றான் .யே மணி வள்ளி மாங்கா சாப்பிடுவாளா என்றான் .இது என்னடா கேள்வி மாசமா இருக்கவ மாங்கா சாப்பிட தான் செய்வ என்றான் .சரி மாங்கா ஏங்க கிடைக்கும் என்று கேட்டான் விக்கி ,உனக்கு எதுக்குடா உன் பொண்டாட்டி என்ன மாசமாவா இருக்கா என்று சொல்லி மணி சிரித்தான் .

விக்கி அப்போது திரும்பி சுவாதியை பார்த்தான் .அவள் வயிற்ரை தடவி கொண்டு நின்று கொண்டு இருந்தாள் .விக்கிக்கு ஆமாடா வெண்ண என் பொண்டாட்டி மாசமாத்தான் இருக்கா அஞ்சு மாசம் என்று சொல்ல வேண்டும் போல இருந்தது .ஆனால் அப்படி சொல்லமால் இல்லடா நாளைக்கு வள்ளிக்கு வளைகாப்புல அதான் அதுக்கு கிப்ட் மாங்கா வாங்கி கொடுக்கலாம்னு கேக்குறேன் என்றான் .

என்னது கிப்ட் மாங்காவா என்றான் .ஆமா வளைகாப்புக்கு வேற என்ன கிப்ட் கொடுக்குறுதாம் என்றான் விக்கி .டேய் வளைகாப்புக்கு எல்லாம் கிப்ட் தர மாட்டாங்க அப்படியே நீ மாங்கா கொடுக்கணும்னு ஆசபட்டாலும் வேணாம் ஏற்கனவே இங்க நிறைய மாங்கா இருக்கு என்றான் .சரிடா மாங்கா எங்க வாங்குன என்றான் விக்கி . நான்தான் வேணாம்னு சொல்லிட்டேன்ல அப்புறம் ஏண்டா என்றான் .டேய் வள்ளிக்கு இல்லடா எனக்கு சாப்பிடனும் போல இருக்கு என்றான் விக்கி .உனக்கு எதுக்குடா மாங்கா சாப்பிடனும் போல இருக்கு என்று கேட்டான் .

அது வந்து என்று விக்கி என்ன சொல்வது புரியமால் இருக்கும் போது அங்கே மணியிடம் இருந்து வள்ளி போனை வாங்கி என்னது உனக்கு மாங்கா சாப்பிடனும் போல இருக்கா என்றாள் .ஏன் புருசனும் பொண்டாட்டியும் ஒரே கேளிவிய மாத்தி மாத்தி கேக்குதுக என்று நினைத்து கொண்டு சும்மாதான் சாப்பிடனும் போல இருக்கு என்றான் .ம்ம்ம் இந்நேரம் டேவிட் மாதிரி நீ கல்யாணம் பண்ணி இருந்தேன்னா எண்ணி 8 மாசத்துல உன் பொண்டாட்டி மாங்கா தின்னு கிட்டு இருப்பா இப்ப என்னனா நீ மாங்கா திங்கனும்கிற என்று சொல்லி சிரித்தாள் .பின்னாடி மணியும் சிரித்தான் .