அசுரன் Part 27 30

மன்னர் காலம்

காத்தவராயனின் அழிவு

மதிவதனி கால்கள் சரியாக நடக்க முடியாமல் கஷ்டப்பட்டாலும் குழந்தையை காப்பாற்ற வேண்டும் என ஒரே எண்ணத்தில் அவனை பின் தொடர்ந்து குதிரையில் ஏறி சென்றாள்..

பிரசவம் பார்த்த பெண் மயக்கத்தில் இருந்து எழுந்து நடந்த விசயங்களை தன் தோழிகளிடம் சொல்ல,அவர்கள் உடனே ,”கவலை வேண்டாம் ,அந்த வில் அந்த பாதாள பைரவி கோவிலில் தான் நாங்கள் ஒளித்து வைத்து உள்ளோம்,உடனே அதை தேவியிடம் எடுத்து கொடுப்போம் விரைந்து வாருங்கள்”என்று அவ்விடம் சென்றார்கள்.

காத்தவராயன் முதலில் பாதாள பைரவி கோவிலை சென்றடைந்தான்.

அகோரி யாகத்திற்கு தேவையான ஏற்பாடுகளை செய்து கொண்டு மனதில்,எப்படியும் இன்னும் கொஞ்ச நேரத்தில் காத்தவராயன் குழந்தையை கொண்டு வந்து விடுவான்..பலிபீடத்தில் குழந்தையை பலி கொடுத்து விட்டு,காத்தவராயனை மயக்கபடுத்தி என்னோட காரியத்தை சாதித்து கொள்ள வேண்டியது தான்..”என கற்பனையில் மிதந்து கொண்டு இருந்தான்..

குதிரையின் காலடி சத்தம் கேட்டு ஆர்வமுடன் வெளியே ஒடி வந்து பார்த்தான்.

காத்தவராயன் கோபமுடன் வருவதை பார்த்தாலும்,அவன் கையில் குழந்தை இருப்பதை பார்த்து அகோரி கண்ணில் ஆசை மின்னியது..

“மன்னர் மன்னா..!குழந்தையை கொண்டு வந்து விட்டீர்களா..”என ஆவலாக கேட்டான்.

காத்தவராயன் சிவந்த கண்களுடன்,”மடையனே,நீ சொன்னது என்ன..?இப்போ நடந்தது என்ன..?என்று பார்” என குழந்தையை தலைகீழாக பிடித்து கொண்டு அந்த குகையே அதிரும்படி கத்தினான்..

அகோரி,குழந்தையை வாங்கி பார்க்க,அது பெண் குழந்தையாக இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தான்.அவன் தடுமாறி தடவி பார்க்க,

“அங்கே என்னடா தேடுகிறாய் மூடனே..!நான் கண்ட கனவு எல்லாம் வீணாய் போனதே..ஆசை காட்டி மோசம் பண்ணி விட்டாயே..!படுபாவி..”என திட்டினான்.

“மன்னா நிச்சயம் இப்படி நடக்க வாய்ப்பே இல்ல.நிச்சயம் மதிவதனிக்கு பிறந்து இருப்பது ஆண் குழந்தை தான் என்னால் உறுதியாக சொல்ல முடியும்..”

“மீண்டுமா என்னை ஏமாற்றுகிறாய் .. உன்னை …”வாளை உருவி கொண்டு காத்தவராயன் வேகமாக முன்னே வந்தான்..

“மன்னா கிட்ட வரவேண்டாம்”குழந்தையை அகோரி அங்கேயே போட்டுவிட்டு அந்த கோவிலில் ஓட ஆரம்பித்தான்.

காத்தவராயன் யாகத்திற்கு அடுக்கி வைக்கப்பட்டு இருந்த பொருட்களை எல்லாம் காலால் எட்டி உதைத்து கொண்டே அவனை துரத்தினான்.

அகோரி சிலையின் பின்புறம் ஓட,அவன் காலில் ஏதோ தட்டுபட்டு தடுமாறி கீழே விழுந்தான்.வில்லை மூடி வைக்கப்பட்டு இருந்த துணி அவன் கால் பட்டு விலகியது.

வில்லை பார்த்த காத்தவராயன் கோபம் பன்மடங்கு அதிகமாகியது.
அகோரியும் இந்த வில் எப்படி வந்தது என புரியாமல் விழித்தான்.

வில்லை காட்டி காத்தவராயன்”உன்னோட களவாணித்தனத்திற்கு இன்னும் ஒரு சாட்சி இதோ…இந்த வில்லை தீமூட்டி அழித்து விட்டாய் என்று தானே நீ கூறினாய்..இப்போ எப்படிடா இங்கே வந்தது..!”காத்தவராயன் கோபம் பொங்க கேட்டான்.

1 Comment

  1. அருணா டீச்சர்

    நான் எழுதும் கதைகளை உங்களுக்கு எப்படி அனுப்புவது?

Comments are closed.