ஆனால் யாரிவள்..Part 1 105

எனது எண்ணச் சிந்தனைகளில் உழன்றபடி நான் எனது வீட்டை அடைந்தேன். வழக்கம் போல என் மனைவியின் புலம்பல்கள் நச்சரிப்புகள்.. அலட்சிய பேச்சுக்களில்.. எல்லாம் பாதிக்கப் பட்ட என் மனசு.. சித்ராவை நினைத்து.. தனது சுகத்தை தேடிக் கொண்டது.. !!

இரவு வாட்ஸ் அப் ஓபன் பண்ணியபோது நிலாவினி நெம்பரில் இருந்து அழகான ஒரு குழந்தை படத்துடன் குட்நைட் மெசேஜ் வந்திருந்தது. அதைப் பார்த்த உடனே நான் அவளுக்கு ஒரு குட்நைட் அனுப்பி வைத்தேன்.. !! அடுத்த நாள் காலையில் ஐந்து மணிக்கே குட்மார்னிங் அனுப்பியிருந்தாள். நான் ஆறரை மணிக்கு எழுந்து அவளுக்கு குட்மார்னிங் அனுப்பினேன். இது எல்லாம் நான் என் மனைவிக்கு தெரிந்து அனுப்ப முடியாது. தெரியாமல்தான் அனுப்பி வைத்தேன்.. !!

அவளது வாட்ஸ் அப் டிஸ்பிளேவில்.. ஒரு குழந்தை படத்தை வைத்திருந்தாள். சின்ன குழந்தை அழகாய் இருந்தது. அதை யாரெனக் கேட்டேன். அவள் எட்டரை மணிக்கு அதற்கு பதில் சொல்லியிருந்தாள்.!

‘சித்ரா பொண்ணு..! ரெண்டு வயசு அப்போ.. !’

நான் டீ டைமில் அதைப் பார்த்து விட்டு அவளுக்கு ரிப்ளே செய்தேன்.
‘ரொம்ப அழகா இருக்கு ‘

மதியம் லஞ்ச் பிரேக்கில் அவள் எனக்கு பதில் அனுப்பியிருந்தாள்.
‘தேங்க்ஸ்..!’டிபி மாத்தியிருந்தாள். இப்போது பையன். ‘அவ பையன் ‘ என்று அவளே சொல்லியிருந்தாள்.

‘ ரெண்டு குழந்தைகளும் லட்டு மாதிரி இருக்கு.’ நான் அனுப்ப.. உடனே ரிப்ளே வந்தது.

‘ தேங்க்ஸ்.. ! உங்க குழந்தைங்கள நான் பாக்கலாமா..? வித்.. அவங்ம்மாவோட.. ?’ ஸ்மைலி. !

நான் எனது குடும்ப போட்டோவை அனுப்பினேன்.

‘ரொம்ப அழகா இருக்கு. ஐ லவ் யூ ஆல்..!’ என்று அனுப்பினாள்.

‘ தேங்க்ஸ்.. !’

‘ வாட் யூ டூ ?’ சுருக்கமாக கேட்டாள்.

‘ லஞ்ச்.! நீ ?’

‘ ம்ம். சாப்பிட்டாச்சு. ! நைட் மெசேஜ் பண்றேன். பை !’ என்று அவசரமாக முடித்திருந்தாள்.

‘ ஓகே பை ‘ சொல்லி விட்டு நானும் எனது அலுவலை கவனிக்க ஆரம்பித்தேன். ஆனால் என் மனசெல்லாம் சுகமான நினைவுகளில் மிதந்து கொண்டிருந்தது …… !!!!!

இரவு பத்து மணிக்கு நான் படுக்கைக்குப் போய் என் மொபைலை எடுத்து வாட்ஸப்பை ஓபன் செய்தேன். நிலாவினி எனக்கு..
‘குட்நைட் ‘ சொல்லியிருந்தாள். இரண்டு அழகான குருவி படங்களுடன்.! அவள் எனக்கு அனுப்பி ஒரு மணி நேரம் ஆகியிருந்தது.

நானும் ஒரு படத்தை தேர்வு செய்து அனுப்பினேன்.
‘குட்நைட்..’

ஒரு நிமிடத்தில் பதில் வந்தது.
‘வணக்கம் சார் ‘

‘ வணக்கம் மேடம். என்ன இன்னும் தூங்கலையா ?’

‘நோ. நீங்க. ?’

‘நான் கொஞ்சம் பிசியா இருந்துட்டேன். இப்போதான் படுக்கைக்கு வந்தேன் ‘

‘சாப்பிட்டிங்களா ?’

‘யெஸ்.. நீ ?’

2 Comments

  1. Inta site story epadi post panrathu please yaravathu solunga

  2. Nalla stores

Comments are closed.