ஆனால் யாரிவள்..Part 1 105

நீங்க டென்த்வரை எந்த ஸ்கூல்ல படிச்சிங்க.. ?”

” கவர்மெண்ட் ஹையர் செகண்டர்ர்ரிரீ… ஸ்கூல்ல்ல்…” யோசித்துக் கொண்டே அவளுக்கு பதில் சொன்னேன்.

” அப்போ.. உங்களுக்கு ஒரு கேர்ள் பிரெண்டு இருந்தா.. ! நாபகமிருக்கா.. ? கொஞ்சம் லீனா.. வாயாடியா.. ??”

” ஓஓ.. ஷிட்.. !! மை காட்… மை காட்ட்.. ” எனக்கு நினைவு வந்து விட்டது. ” ஸாரி.. ஸாரி.. எக்ஸ்ட்ரீம்லி ஸாரி.. ! சித்ரா.. யெஸ் ஐ காட் இட்.. சித்ரலேகா..ரைட்.. ??”

” எஸ்.. ப்பா.. ”

” ஓகே. ரியலி ஸாரி நிலா.. ! நிலா.. நிலா.. மை காட். எப்படி மறந்தேன் உங்க பேரு எல்லாம். ? பேர கேட்டாலே எனக்கு டக்குனு நாபகம் வந்திருக்கணும்.. ! ஸோ ஸாரி. !! அப்ப.. நீங்க.. பாவாடை சட்டை போட்டுகிட்டு.. க்யூட்டா.. பட் வேற ஸ்கூல் இல்ல.. ? ஸாரி.. ! உங்கப்பா அம்மா எல்லாம் நல்லாருக்காங்களா.. ? உங்கக்கா.. சித்ரா எப்படி இருக்காங்க. ? அவங்க ஹஸ்பண்ட்.. குழந்தைங்க எல்லாம் பாக்க நல்லாருக்காங்க.. !!”

” யப்பா.. ஒரு நூல் கெடைச்சதும் என்னைக் கூட நாபகப் படுத்திட்டிங்களே.. ? ரொம்ப சந்தோசம். இப்ப டவுட் க்ளியரா.. ??”

” வெரி க்ளியர்.. !! ஸோ ஹேப்பி.. !! என்னோட சுகமான நினைவுகள கிளறி விட்டதுக்கு.. கண்டிப்பா தேங்க்ஸ் சொல்லணும். !!” நான் பரவசத்தில் தினறியபடி சொன்னேன்.

அவள் சிரித்தாள்.
” உங்களை பாத்ததுல எனக்கும் ரொம்ப சந்தோசம்.. !!”

” அது சரி.. ஆனா இவ்ளோ நாள் கழிச்சு.. என்னை மட்டும் எப்படி கரெக்ட்டா அடையாளம் கண்டு புடிச்சிங்க. ? நாம பாத்தே பல வருசம் ஆச்சு. அதும் சின்ன வயசுல பாத்துகிட்டது. அப்ப நீங்க பாவாடை சட்டை… நான் மீசை இல்லாத முகம்.. ??”

” ஹ்ஹா.. ஹா.. ! யெஸ்.. ஐ அக்ரி வித் யூ.. !! பட்.. நான் ஈஸியா கண்டு புடிச்சுட்டேன். உங்க மீசைக்கு கீழ.. உதட்ல.. ஒரு மச்சம் இருக்கே.. அது எனக்கு மறக்கவே இல்ல. அதுதான் இப்ப எனக்கு உங்களை அடையாளம் காட்டுச்சு.. !! ஆனா பேரு மட்டும் சடனா நாபகம் வரல. கொஞ்சம் யோசிச்சப்ப.. லிங்கம்னு தோணுச்சு. அப்பறம் அந்த பேரு இலலையேனு யோசிக்க.. நிருதி லிங்கம்னு உங்க புல் நேம் க்ளிக்காச்சு.. !!” என்று சொல்லி விட்டு அவளது வலது கையை என்னை நோக்கி நீட்டினாள்.
” அயாம் நிலாவினி..! உங்க எக்ஸ் கேர்ள் பிரெண்டோட தங்கச்சி.. !! கிளாட் டூ மீட் யூ.. !!”

நான் அவள் கையைப் பற்றி அழுத்திச் சொன்னேன்.
” எனக்கே.. என்னை அடையாளம் காட்னதுக்கு ரொம்ப நன்றி..”

அதன் பின்.. சுருக்கமாக.. அவளது குடும்ப விவரம்.. எனது குடும்ப விவரம் எல்லாம் பேசிக் கொண்டோம். இதற்கிடையில் என் மனைவியிடமிருந்து கால் வந்தது. பிக்கப் செய்து பேசினேன்.. !!

” அப்பறம். ??” என் மனைவியுடன் பேசி முடித்து.. என்னையே பார்த்தபடி உட்கார்ந்து கொண்டிருந்தவளைப் பார்த்துப் புன்னகைத்தேன்.

” ம்ம்.. ? அப்றம்.. ?” கேள்விக் குறியுடன் என்னைப் பார்த்தாள்.

2 Comments

  1. Inta site story epadi post panrathu please yaravathu solunga

  2. Nalla stores

Comments are closed.