அவ்வளவுதான்… சீதாவின் பேச்சும், அதன் நியாயமும், அவள் மடக்கி விட்ட உண்மையும், மோகனின் வெறியை கண்டபடி தூண்ட, அவன் ஓங்கி சீதாவை அறை விட்டான்.
பளார்!
சரியாக அந்தச் சமயத்தில், வினோத் உள்ளே நுழைந்தான்.
சார் என்ன சார் இது? மேடமை இப்படி அடிக்கறீங்க? மேடம், நீங்க வாங்க என்று இடையில் வந்தான்…
டேய், எனக்கும் என் பொண்டாட்டிக்கும் நடுவுல நீ யாருடா? வெளிய போடா!
சார் கோபப்படாதீங்க! எதுன்னாலும் பேசி தீத்துக்கலாம்! வாங்க!
நீ யாருடா, எங்களுக்குள்ள பஞ்சாயத்து பண்ண என்று வினோத்தை ஒரு அடி அடித்தான்.
உடனே சீதா பதறி, ஏங்க, வீட்டுக்கு வந்தவருகிட்ட, இப்டி நடந்துக்கறீங்க? என்று வினோத்தை அடிப்பதை தடுத்தாள்.
என்னடி, உன்னைச் சொன்னா அவன் வர்றான். அவனைச் சொன்னா நீ வர்ற! என்ன நடக்குது? என்று மீண்டும் சீதாவை ஒரு அடி அடித்தான்.
அவன் அடிக்கவும், வினோத், சீதாவை அணைத்தவாறு வைத்துக் கொண்டு, மீண்டும் தடுத்தான்.
சார் வயசுல பெரியவிங்க, நீங்களே இப்படி பண்ணலாமா? இவிங்களை அடிக்க எப்டி சார் மனசு வருது?
சீதாவோ, சாரி வினோத், என்னால, உங்களுக்கும் அடி. வெரி சாரி! என்னை மன்னிச்சிருங்க, என்று அவனை நெருங்கி நின்றாள். மோகனை கண்டு கொள்ளாமல், வினோத்தின் கன்னத்தை தொட்டு பேசினாள்.
கோவத்தில் இருந்த மோகனுக்கு, இதில் இன்னும் ஆத்திரமாகி, வினோத்தை இன்னொரு அடி அடித்தான்.
அவ்வளவுதான், வினோத்திற்கு கோபம் வந்தது.
மிஸ்டர் மோகன், அவ்ளவுதான் மரியாதை. வயசுல பெரிய ஆளாச்சேன்னு பாக்குறேன். எங்க அப்பா கூட, என்னை அடிச்சதில்ல. நீங்க ஏற்கனவே ரெண்டு அடி அடிச்சிட்டீங்க. இனி கையை ஓங்குனீங்க…. அப்புறம்
மோகன் சீதாவிடம், உன்னாலதாண்டி, நீ இப்படி வழிஞ்சதுனாலதான், கண்ட நாய்லாம், என் வீட்டுக்கே வந்து என்னை மிரட்டுறான்.
வேனாங்க, ரொம்ப தப்பு பண்றீங்க… இது நல்லதுக்கில்லை. ப்ளீஸ், அவருகிட்ட சாரி சொல்லுங்க!
இந்த நாய்கிட்ட, நான் சாரி சொல்லனுமா? என்று மீண்டும் வினோத்தை பார்த்துக் கத்தினான்.
சாரி வினோத்! ரொம்பவே சாரி. அவருக்கு ஏதோ கிறுக்கு புடிச்சிடுச்சின்னு நினைக்கிறேன். எனக்காக உங்களுக்குதான் சங்கடம். ரியல்லி சாரி. நீங்க கிளம்புங்க. நாம, இன்னொரு நாள் மீட் பண்ணலாம். உங்களை சந்திச்சது எனக்கு ரொம்ப சந்தோஷம் என்றாள்.
யாரோ லூசுத்தனமா நடந்துக்குறதுக்கு, நீங்க எதுக்கு மேடம் சாரி சொல்லிகிட்டு. ஆக்சுவலி, உங்களை மீட் பண்ணது எனக்குதான் சந்தோஷம். கண்டிப்பா நாம மீட் பண்ணலாம். பை தி வே, இந்தாங்க என் கார்டு. நம்பரை நோட் பண்ணிக்கோங்க. நெக்ஸ்ட் மீட்டிங் பத்தினாலும் சரி, இல்ல இந்தாளு, திரும்ப ஏதாவது லூசுத்தனமா நடந்துகிட்டாலும் சரி, உடனே எனக்கு கால் பண்ணுங்க என்றவன்…
மிஸ்டர் மோகன், இவிங்களுக்காக உங்களை சும்மா விடுறேன். இல்லாட்டி என்னை அடிச்சவனை நான் சும்மா விட்டதில்லை. இனி என் மேல மட்டுமில்லை, உங்க ஒய்ஃப் மேல உங்க கை பட்டா கூட, நான் சும்மா இருக்க மாட்டேன். என்னைப் பத்தி உங்களுக்கு தெரியாது. ஜாக்கிரதை!
வினோத் சொல்லிவிட்டு திரும்பினான்.
நேற்று இரவு நடந்ததும், மதனிடம் தோற்றதும், சீதாவின் நடவடிக்கையும், அவள் எதிர்த்து பேசுவதும், தன்னை விட்டு விட்டு இன்னொருத்தரிடம் நெருக்கமாவதும், தன் வீட்டுக்கே வந்து வினோத் மிரட்டுவதும் என எல்லாம் சேர்ந்து மோகனை பைத்தியம் பிடிக்க வைத்திருந்தது.
சூழ்நிலையை மறந்த மோகன், வெறியுடன் வினோத்தை பார்த்து கத்தினான்.
சர்தான்… போடா வெளிய!
வினோத் கடும் கோபமடைந்தாலும், மோகனை முறைத்து விட்டு வெளியே போனான்.
அவன் சென்றதும் சீதாவை பார்த்து கத்தினான். என்னடி திமிரா?
வேணாங்க… ரொம்ப ஓவரா போறீங்க? வேணாம்…
என்னடி? என்னையே மிரட்டுறியா? அவன்கிட்ட வழியிற, என்னை மிரட்டுற, அவ்ளோ திமிரா? கோபத்தில் மோகன் பெல்ட்டை உருவி, சீதாவை அடிக்க கை ஓங்கினான்.
ஓங்கியவனால், சீதாவை அடிக்க முடியவில்லை. ஏனெனில், அங்கு பெல்ட்டை பிடித்துக் கொண்டு நின்றிருந்தது…
அங்கு நின்று கொண்டிருந்தது வினோத்!
டேய், நீ ஏண்டா மறுபடி உள்ள வந்த? வெளிய போடா.
மோகனுக்கு பதில் சொல்லாமல், வினோத் அவன் கையிலிருந்த பெல்ட்டை இழுக்க, அது, மோகனின் கைகளில் இருந்து வினோத்தின் கைக்கு வந்தது.
அருமை
இந்த தளத்தில் நான் கதையை எழுத விரும்புகிறேன் எப்படி என்று தெரியவில்லை , எப்படி எழுதுவது கொஞ்சம்
சொல்லுங்கள்
Hi Raji ma