நான் காரை ஓரமாய் நிறுத்தி விட்டு பார்க்க அந்த இடம் முழுவதும் இருட்டாய் இருந்தது…. தூரத்தில் ஒரே ஒரு தெருவிளக்கு மட்டுமே அந்த பகுதிக்கு ஒளியை கொடுத்து கொண்டிருக்க, வண்டி இஞ்சினை Off செய்து அக்காவை அமைதியாய் இருக்க சொல்லி சைகை காமிக்க அவளும் அமைதியாய் கூர்ந்து கவனிக்கலானாள்….
மீண்டும் அதே குரல் “என்னை காப்பாத்துங்க……” என அருகே இருக்கும் சந்திலிருந்து வர, நான் மட்டும் இரங்கினேன்…. அந்த சந்தின் நேரே நின்று பார்க்க முதலில் எதுவும் தென்படவில்லை…. 2 நிமிடம் அமைதி, இருட்டில் பார்வை பழக மீண்டும் அதே குரல், தெருவின் கடைசியில் அசைவும் தென்பட “யாரது??…” என கத்தி கொண்டே உள்ளே ஓடினேன்….
என் குரல் கேட்டு அசைவு இன்னும் அதிகமாக அந்த பெண்ணும் சத்தமாய் விசும்பினாள்…. நான் அந்த பெண்னை அடையும் போது அவள் மட்டுமே இருந்தாள்…. ஆனால் அவளின் நிலை யாரொ அவளை பலவந்தப்படுத்தியதை உறுதி செய்தது….. அவள் என்னை கண்டும் சற்று மிரள…
‘ஹே…..’
‘………..’
‘பயப்படாதீங்க….. U R Safe…. Ok???’
‘……….’
‘U R safe….. உங்க கையை கொடுங்க….’ என கை நீட்டினேன்
அவலும் என் கையை பற்றி கொண்டு எழுந்தாள்…. அவளை தூக்கி நிறுத்தியவாறு அந்த இடத்தை நோட்டமிட அது ஒரு முட்டு சந்து, அதுமில்லாமல் ஒரு பைக்கும் அங்கு நிற்க, நான் வந்ததும் அதில் ஏறி தான் கயவன் அந்த பக்கத்திற்கு தாவியிருப்பான் என்ற எண்னம் வந்தது…. நான் அவளை கை தாங்களாக நடத்தி வெளியில் ரோட்டிற்கு வர சரண்யா எங்களை பார்த்து ஓடி வந்து அந்த பெண்னை தன் தோளோடு அணைத்தவாறு கூட்டி கொண்டு வண்டியில் ஏற்றினாள்….
யாரும் பேசவில்லை…. நான் மட்டும் முன்னாலிருந்து வண்டி ஓட்ட, அக்கா பின் பக்கம் அந்த பெண்ணோடு அவளை ஆசுவாசப்படுத்தியபடி வந்தாள்… கொஞ்ச தூரம் சென்று ஒரு ஓட்டலில் நிறுத்த அக்கா அவளை Rest Room அழைத்து சென்று அவள் உடைகளை சீராக்கி கூட்டி வந்தாள்…. நான் அனைவருக்கும் சாப்பாடு order கொடுக்க, அதை சாப்பிட்டோம்… ஆனால் அந்த பெண் மட்டும் விசும்பியாறே இருந்தாள்…. முடித்து கிளம்பும் போது அக்கா அவளிடம் பேச்சி கொடுத்தாள்..
‘என்னாச்சிமா…..’
