28 வயது அழகுப் புயல் – பாகம் 33 132

அவனது அம்மாவும் அப்பாவும் சாப்பிடக் கூப்பிட.. இல்லம்மா அப்புறமா சாப்பிட்டுக்கறேன் என்று இருந்துகொண்டான். நிஷாவோடு சிரித்து சிரித்துப் பேசிக்கொண்டே சாப்பிடுவதுபோல் கனவு கண்டான். நேரம் போய்க்கொண்டே இருந்தது. மோகனில் ஆரம்பித்து வருபவர் போகிறவர் என்று எல்லாரும் தம்பி சாப்பிட்டாச்சா… போங்க சாப்பிடுங்க என்று சொல்லிக்கொண்டேயிருக்க… அவனோ இல்லங்க.. அப்புறமா சாப்பிடுறேன் பசியில்லை என்று ஏதேதோ சொல்லி சமாளித்துக்கொண்டிருந்தான். அவனது கண்களோ நிஷாவை தேடி தேடி ஏமாந்தன. தாழ்வு மனப்பான்மை மீண்டும் வந்து ஒட்டிக்கொண்டது.

நிஷாவோடு சேர்ந்து சாப்பிடணும்… அவ கலகலன்னு பேசி சிரிச்சிக்கிட்டு சாப்பிடுறதை பக்கத்திலிருந்து ரசிச்சிக்கிட்டே சாப்பிடணும்… என்றெல்லாம் வரம்பு மீறி ஆசைப்படுறேனோ?? – அவன் தன்னைத்தானே கேட்டுக்கொண்டான். கல்யாணமாகிப் போனாலும் அவ என் மாமா பொண்ணுதான். அவளை ரசிக்குறதுல ஒன்னும் தப்பில்லையே? என்று சமாதானம் சொன்னான்.

அவன் காத்திருந்தான். அப்போது அவனை ஓரக்கண்ணால் பார்த்து ரசித்துக்கொண்டு கடந்துபோன தீபாவிடம் கேட்டான்.

நிஷாவை பார்த்தியா தீபா?

அக்கா சாப்பிட்டுட்டு இருந்தாளே மச்சான்

இதைக் கேட்டதும் கதிருக்கு இதயம் சுக்கு நூறாய் உடைந்தது போலிருந்தது. துக்கம் தொண்டையை அடைத்தது. முறுக்கிய மீசையோடு தில்லாக திரிபவன் கண்களில் சம்பந்தமில்லாமல் கலங்குவதுபோல் இருக்க… அதை மறைக்க மேலே பார்த்தான். நிஷா உன்னோடு சிரித்துப் பேசியதே பெரிய விஷயம்…. அவள் உன்ன கூட்டிட்டுப் போயி உன் பக்கத்துல உட்கார்ந்து சாப்பிடணும்… உன்கூடவே இருக்கணும்னு நினைக்குறதெல்லாம் பேராசைதானே கதிர்…. அதுவும் அவள் கண்ணனோட மனைவி… இப்போ நீ அவள் வந்து கூப்பிடுவான்னு காத்திட்டு இருக்கலாமா இப்படியெல்லாம் ஆசைப்படலாமா? என்று அவன் மனசாட்சி அவனைப்பார்த்து பாவமாய் கேட்க…. யாரையும் பார்க்கப் பிடிக்காமல் எழுந்து விடுவிடுவென்று மண்டபத்தைவிட்டு வெளியே நடந்தான். ச்சே… என்னாச்சு எனக்கு? என்ன இது அவஸ்தை??…

அவன் மண்டபத்தை திரும்பிப் பார்க்கக்கூட மனதில்லாமல்.. மனதில் பாரத்தோடு நடந்துகொண்டே இருந்தான்.

அவன் போய் கொஞ்ச நேரத்தில்…\
ராஜ்ஜோடும் மலரோடும் பந்தியில் உட்கார்ந்த நிஷா, அண்ணா கொஞ்சம் வெயிட் பண்ணு கதிரை கூப்பிட்டுட்டு வந்திடுறேன் என்று புடவையை லேசாக தூக்கிப் பிடித்துக்கொண்டு ஓட்டமும் நடையுமாக அவன் உட்கார்ந்திருந்த இடத்திற்கு வந்தாள். அவன் இருந்த இடம் வெறுமையாக இருக்கவே, ச்சே.. காத்திருன்னு படிச்சி படிச்சி சொன்னேன்… என்று.. கூந்தலை ஒதுக்கிவிட்டுக்கொண்டே இங்கும் அங்குமாகப் பார்த்தாள்.

அப்போது கொஞ்ச தூரத்தில் நின்றுகொண்டிருந்த தீபா, ஐயோ இவ கதிரைத்தான் தேடுறா போல… என்னாலதான் அவன் போயிட்டான்னு தெரிஞ்சா அவ்ளோதான் கொன்னே போட்டுடுவா! என்று… பட்டுப் பாவாடையை இருபுறமும் பிடித்துக்கொண்டு அங்கிருந்து ஓடிக்கொண்டிருந்தாள்.

6 Comments

  1. Last 2 pages super

  2. மஹா மடிஞ்சுட்டாள்… போனா போகுது.. நிஷா கதிரோடு போய் தொலையட்டும்… கதிருக்காக.. கிராமத்தானின் உடல் உழைப்பு, நிஷாவை போதும், போதும் என்கிற அளவுக்கு வச்சி செய்வான்…

    இனிமையான ஒரு திருமண வைபோகம்… மகிழ்ச்சி…

    சீனுவுக்கு கிடைக்க போகும் ஆப்பு….. ஆவலுடன்…

  3. Superb bro. Semaya poguthu. But as a reader a humble request, Seenuvoda aappukkappuram, Nisha strict warning kuduthu, marupadiyum Nishaku Seenuvoda marriage aagura mari Nisha Seenuvoda ending vainga bro…neenga apdi oru ending vaippenganu oru readera namburen…

  4. Deepa & Kathir, rendu perum gentlea irukkanaga, apdithan story beginningla irunthu therithu, so avanga rendu perayum serthu vachirunga bro, Deepakkum Kathir mela crush irukkura mari katringa, athu mattum illama Kathiroda ammavum already Deepava ponnu kekkara ideala irukkanga, so avanga rendu perayum serthu vachirunga bro.

Comments are closed.