28 வயது அழகுப் புயல் – பாகம் 2 203

இன்டெர்வியூல எல்லாம் இதுதான் சொதப்புதுன்னு சொல்லிட்டிருந்தான். நான்தான் உன்கிட்ட கேட்கலாம்னு வந்தேன். அவன்கிட்ட சொல்லல. நீ சொன்னா அத கவனமா பன்றான். அதான் கேட்டேன் தப்பா எடுத்துக்காத கண்ணு…

சேச்சே… அப்படிலாம் இல்லக்கா… நான் ஒரு வார்த்தை அவர்கிட்ட கேட்டுக்குறேனே…

சரிம்மா கேட்டுட்டு சொல்லு.

இருங்க… இப்பவே கேட்குறேன். நிஷா போனை எடுத்து கண்ணனுக்கு போன் பண்ணினாள். விஷயத்தை சொன்னாள். உதவி செய்வது நிஷாவுக்கு பிடித்த விஷயம்.

சாயந்திரம் இவள் எங்கேஜ்டாக இருந்தால் நமக்கு போன் பண்ணி தொந்தரவு செய்யமாட்டாள் என்று அவர் உடனே ஓகே சொல்ல…

சரிக்கா… நாளைலேர்ந்து சொல்லித் தர்றேன். பட் இது டூ லேட். அவன் இங்கிலிஷ்ல வீக்குன்னு ஏன் முன்னாடியே சொல்லல?

அந்தத் தறுதலை சொன்னாத்தானே தெரியும் என்று பார்வதி கோபத்தோடு அவனைத் திட்ட… நிஷா சிரித்தாள்.

பார்வதி வீட்டில் – இதைக் கேள்விப்பட்டதும் சீனு அம்மாவை முறைத்தான். ஏன்மா என் மானத்தை வாங்குற? எனக்கு ரெகமண்ட் பண்றவங்கட்ட போயி இப்படித்தான் சொல்லுவியா?

அடடா தப்பு பண்ணிட்டேனா… ஸாரிப்பா… ஆனா இப்போ நீ போகலைன்னா நல்லாயிருக்காதே…

சரி போய் தொலைக்கிறேன்.

சீனுவுக்கு அவளை பக்கத்திலிருந்து பார்த்து ரசிக்க இது நல்ல சான்ஸ் என்று ஒருபுறம் சந்தோசம். மறுபுறம் தன் வண்டவாளம் தண்டவாளம் ஏறிவிடுமே… மதிப்பாளா? என்று வருத்தம்.

1 Comment

Comments are closed.