வாசமான ஜாதிமல்லி – பாகம் 10 51

பிரபு அதிர்ச்சியடைந்தான். அவள் முன்பு அவனைப் பார்க்கும் போது எல்லாம் அவன், அவள் கண்களில் ஆசை இருப்பதை மட்டும் பார்த்திருக்கான். முதல் முறையாக அவன் அந்த கண்களில் வெறுப்பைக் காண்கிறான். அவள் ஒரு அருவருப்பான புழுவைப் பார்ப்பது போல் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

பிரபு இன்னும் முயன்றான், ”மீரா, அவன் இப்போது வருத்தமாக இருக்கிறான், ஆனால் அவனுக்கு உன் மேல் பாசம் அதிகம் இருக்கு. அவன் நாளடைவில் உன்னை ஏற்றுக்கொள்வான் .. நம்ம ஏற்பாட்டை ஏற்றுக்கொள்வான் .. நான் சத்தியமாக சொல்லுறேன். இது எல்லோருக்கும் நல்லதாக முடியும் ”

“யாருடைய நல்லது ?? உன்னோடையதா .. நீ விரும்புவது எல்லாம் இந்த அழுகிய சதைதானே, வேறு எதுவும் உனக்கு முக்கியமில்லை. உன்னை மட்டும் குறை சொல்லி என்ன புரயோகனும். என் புத்தி ஒழுக்கம் எங்கே போனது. நான் உன்னை இனிமேல் பார்க்க விரும்பவில்லை .. என் வாழ்க்கை இப்போதே முடிந்து விட்டது.” என்று கதறினாள்.

பிரபு மிரண்டு போனான். “மீரா நீ உன்னை …” என்று தொடங்கிய அவனை நிறுத்தினாள்.

“பயப்புடாதே, என் சாவு உன் தலையில் விழாது. நான் ஒன்னும் தற்கொலை செய்துகொள்ள மாட்டேன். இதை நான் செய்ய கூடாது என்று தானே அந்த நல்ல மனிதன் எல்லாற்றையும் சகித்து கொண்டார். என் செயலால் அவர் பெயருக்கு இனிமேல் எந்த களங்கமும் வர விடமாட்டேன்.”

இன்னைக்கு சண்டே அதனால ரெண்டு அப்டேட்

1 Comment

  1. Thank you for two update…

Comments are closed.