மோஹனா டார்லிங் – Part 9 33

மோஹனாவின் பார்வையில்

நான் அவர் கையில் இருந்த கருத்தடை மாத்திரை அட்டையை பார்த்து பயத்தில் நடுங்கி போனேன். கை கால்கள் எல்லாம் ஜில் என்று ஆகிவிட்டது. என்னுள் இருந்த பயத்தை வெளி காட்டிக்கொள்ளாமல் இருக்க பெரும் பாடுபாட்டன். நான் மெல்ல அவர் அருகே நடந்து செல்லம் போது, என்ன சொல்லி சமாளிப்பது என்று என் மூளை மின்னல் வேகத்தில் இயங்கியது.

நான் கேஷுவல்ளாக சொன்னேன்,” அட இது இன்னும் இங்கேயா இருக்கு. இதை பற்றி நான் மறந்தே போய்விட்டேன்.”

அவர் நான் என்ன சொல்கிறேன் என்று ஒன்னும் சொல்லாமல் பார்த்து கொண்டு இருந்தார். அவர் முகத்தில் அவ்வளவு வேதனை தெரிந்தது. இப்போது அதை பார்த்து என் கணவரை இப்படி காயப்படுத்தி விட்டேனே என்று அனுதாப கொள்ளும் நிலையில் நான் இல்லை. இப்போது என்னை காப்பாற்றி கொள்வது தான் முக்கியமாக இருந்தது.

“நான் இதை எப்போதோ ஹாஸ்பிடல் கொண்டு சென்றிருக்கணும். இதை ட்ராவர் உள்ளே போட்டதை முற்றிலும் மறந்துவிட்டேன்.”

இது ஒன்னும் முக்கியமான விஷயம் இல்லை என்று நான் காட்டி கொண்டதில் எந்த அளவ்வு வெற்றி கொண்டேன் என்று அவர் முகத்தை பார்த்து என்னால் யூகிக்க முடியவில்லை. அனால் அவர் முகத்தில் முதலில் இருந்த வேதனையும் கோபமும் கொஞ்சம் குறைந்து இருந்தது.

“என்ன சொல்ல வர மோஹனா, எனும் புரியில்ல,” என்றார்.

“ஓ அதுவா, நான் ஒரு நாள் வேலை முடிந்து அறைக்கு திரும்பி கொண்டு இருக்கும் போது இந்த கம்பெனியின் மெடிக்கல் ரப் அவசரமாக என்னை பார்க்க வந்தான்.” “சாரி டாக்டர் லேட் ஆகிவிட்டது என்று சொல்லி அவர்கள் தயாரிக்கும் புது பெர்த் கண்ட்ரோல் பில்ஸ் சம்பெல் அட்டையை எனக்கு கொடுத்தான்.”

“இதில் சைடு எபக்ட் எதுவும் இருக்காது என்று இதை ஹாஸ்பிடல் வாங்க ரெகமெண்ட் செய்ய சொன்னான். நான் அறைக்கு திரும்பி கொண்டு இருந்ததால் அதை அப்படியே எடுத்து வந்துவிட்டேன். ட்ரவர் உள்ளே போட்டதை மறந்தும் விட்டேன்.”

அவருக்கு என்னை நம்புவதா இல்லையா என்ற குழப்பத்தில் இருப்பது தெரிந்தது. இந்த குழப்பத்தை போக்க நேரடியாக மோதி சந்திக்க வேண்டும் என்று முடிவெடுத்தேன்.

“எங்க உங்கள் முகம் இப்படி மாறி இருக்கு,” அப்புறம் இப்போது தான் எனக்கு புலன்பட்டது போல நான், “என்ன இது நான் உபயோகிக்கிறேன் என்று நினைத்து விட்டீர்களா?”

கலகலவென்று சிரித்த நான் சற்று நேரத்தில் நிறுத்தி கொண்டு,” ஹேய் என்ன? நீங்க என் மேல் சந்தேக படுறீங்களா?” என்று அவரை பார்த்து முறைத்தேன்.

எட்டெக் இஸ் தி பெஸ்ட் போர்ம் ஒப் டிபென்ஸ்.

“இல்லை, இல்லை அப்படிலாம் இல்லை,” என்று தடுமாறினார்.

சாமர்த்தியமாக பழியை அவர் மேல் திருப்பி போட்டுவிட்டேன் என்று என்னால் பெருமையில் கொள்ள முடியவில்லை. அதை பெரும் குற்றமாகவே உணர்ந்தேன். குற்றம் செய்தது நான் அனால் இப்போது தடுமாறுவது அவர். இதில் என்ன நியாயம் இருக்கிறது. இருந்தாலும் இந்த மெரேஜ்சை காப்பாற்ற எனக்கு வேறு வழி தெரியவில்லை. மேலும் அவருக்கு வர கூடிய பெரும் மனா வேதனையை தவிர்க்கலாம். இது எனக்கு ஒரு பெரிய லெஸ்ஸ்ன். எவ்வளவு தான் கவனமாக இருந்தாலும் தப்பு செய்பவர்கள் ஒரு நாள் மாட்டி கொள்பதற்கு அதிக வாய்ப்பு உண்டு. அதுவும் ஓரிரு முறை மட்டும் தப்பு செய்பவர்களை விட தொடர்ந்து தப்பில் ஈடுபடுபவர்களுக்கு மாட்டி கொள்ளும் வாய்ப்புகள் அதிகம்.

“எனக்கு சிரிப்பதா, கோப படுவதா என்று தெரியவில்லை. எப்படி நீங்கள் என்னை அப்படி நினைக்கலாம்?”

“அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல மா, நான் மறந்தாப்பல டரவர் உள்ளே என் டிக்கெட் தேடினேன், அப்போது இது தென்பட்டது. உனக்கு எதோ உடம் சரி இல்லையா என்று அக்கரையில் தான் என்ன மருந்து என்று பார்த்தேன். மற்றபடி வேறு ஒன்னும் இல்லை.”

“உண்மையாகவே சொல்லுறீங்க?”

“உண்மை தான் மா என்னை நம்பு.”

அவர் இப்போது சமாளிக்கிறார் என்று தெரிந்தும் இத்தோடு விஷயத்தை முடிக்க நினைத்தேன். தொடர்ந்து இதை பற்றி விவாதிப்பது நல்லதுக்கு இல்லை. என் நல்ல நேரம் ஒரு விஷயத்தில் நான் தப்பித்தேன். நேற்று தான் பழைய அட்டையில் உள்ள மாத்திரைகள் முடிந்து தூக்கி எறிந்தேன். இப்போது இருப்பது புது, இன்னும் நான் உபயோக தொடங்காத மாத்திரை அட்டை. பாதி உபயோக படுத்தின அட்டை அவர் கையில் கிடைத்து இருந்தால் இந்த விளக்கம் கொடுத்து நான் தப்பித்து இருக்க முடியாது. முதலில் இந்த மாத்திரைகளை தூக்கி எறிந்துவிட வேண்டும். இனிமேல் தப்பு செய்ய கூடாது என்று நான் முடிவ்வு எடுத்து இருக்கிறேன். இதை நான் தொடர்ந்து எடுத்தால் பிறகு ஒரு வேலை எனக்கு டெம்ப்டேஷன் வந்தால் தப்பு செய்ய வழி வகுக்கிரா மாதிரி ஆகிவிடும். நான் மனா உறுதியுடன் இருக்க வேண்டும் என்றால் இதை சாப்பிடுவதை முதலில் நிறுத்த வேண்டும்.

அவரை அன்று வழி அனுப்பும் போது முன்பு போல் கலகலப்பாக அவர் பேசவில்லை. எதோ ஒரு யோசனையில் இருந்தார். அவர் சந்தேகம் முற்றிலும் தீரவில்லை என்று புரிந்தது. இருந்தாலும் நான் சொன்ன விளக்கம் உண்மை போல் தோன்றுகிறது என்பதால் அவருக்கு நம்புவதை விட வேறு வழி தெரியவில்லை. மேலும் நான் சொன்னது உண்மையாக இருக்க வேண்டும் என்று தான் அவர் உள்ளம் விரும்பி இருக்கும். அதனாலேயே இதை அவர் மனது ஏற்று கொள்ள எளிதாக இருந்திருக்கும்.

அவர் இமிகிரேஷன் செல்லும் முன் என்னை இறுக்கமாக தழுவி கொண்டு சொன்னார், “நான் உன்னை ரொம்ப நேசிக்கிறேன், அதை மட்டும் நீ எப்போதும் மறந்துவிடாதே.”

அவர் உள்ளே போகும் முன் என்னை திரும்பி திரும்பி பார்த்தார். என் கன்னத்திலும் கணீர் வழிந்தது. நான் வேலைக்கு செல்லும் முன்பு என் அறைக்கு சென்று அப்படியே என் கட்டிலில் உட்கார்ந்து மெளனமாக அழுதேன். தப்பு செய்த்து ஒரு மோசமானவளின் எல்லா திறமை கொண்டு சமாளித்துவிட்டேன். என் இந்த மாற்றத்தை எண்ணி வெட்கமும் வேதனையும் கொண்டேன். அன்று மதியும் என்னால் சாப்பிட கூட முடியவில்லை. சோக மனதோடு வேலைக்கு சென்றேன்.