கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 40 14

“போறப் போக்கைப் பாத்தா.. .எனக்கு நீ தாலி கட்டுவியா, மாட்டியான்னு உன் மேல எனக்கு சந்தேகமா இருக்கு… நல்லாக் கேட்டுக்க… நீ எங்கிட்ட மாட்டிக்கிட்டே… நீ என்னை விட்டுட்டு ஓடலாம்ன்னு மட்டும் கனவு காணாதே…”

“சேச்சே… லலிதான்னு ஒரு பொண்ணு ஜாதகம் வந்து இருக்குன்னு அத்தை காலையில சொன்னாங்க..” இந்த பிட்டைப் போட்டா, மீனா அடங்குவாளா.. என அவன் நினைத்தான்.

“என்னடா சொல்றே… சீனு இதப்பாரு… லலிதா.. ராகினின்னு எவ பின்னாடியாவது போனேன்னு தெரிஞ்சுது… இழுத்து வெச்சு அறுத்துடுவேன்…” மீனாவின் குரல் சற்றே தணிந்து மெல்லிய பயத்துடன் வந்தது.

“இதைப்பத்திதான் பேசணும்… அதுக்காகத்தான் உன்னைப் பாக்கணுங்கறேன்..”
டேய் சீனு…மீனா கொஞ்சம் அடங்கறா… புடிச்சிக்கடா.. சீனுவின் மனதுக்குள் தெம்பு வந்தது…

“சீனு… உன்னைத்தான் நான் என் மனசுக்குள்ள வெச்சிருக்கேன்டா..! என்னை ஏமாத்திட மாட்டீயே நீ”

“என்னம்மா இப்படீ பேசறே? இப்படீல்ல்லாம் நீ பேசினா எனக்கு ரொம்ப ஃபீலிங்காவுது… மனசுக்கு கஷ்டமா இருக்கு மீனா..” சீனு சட்டென குழைந்தான்.

“இச்ச் ….இச்ச்..”

“என்னா… திடீர்ன்னு இச்சு.. புச்சுன்னு சத்தம்.. வருது உன் சைடுலேருந்து…?”

“உனக்கு முத்தம் குடுத்தேண்டீ கண்ணு…” அசடு வழிந்தான் சீனு.

“உன் முத்தத்தை நீயே வெச்சுக்க… உன்னை நான் கேட்டனா? பகல்ல நான் போன் எடுக்கலைன்னா.. ஈவினீங்ல எனக்கு கால் பண்ண வேண்டியதுதானே நீ?” வேதாளம் திரும்பவும் முருங்கை மரம் ஏறியது.

“ராத்திரி பதினொரு மணிக்குத்தான் வேலை முடிஞ்சு தங்கியிருந்த இடத்துக்கு திரும்பி வந்தோம்.. கூடவே ரெண்டு வெட்டிப் பசங்க… … என் ஆஃபிசருங்க… மசுரானுங்க… எதுக்கும் ஒத்துவராதவனுங்க… டக்குன்னு கெழட்டி விடமுடியலை.. கெழத்தாழிங்க…” சீனு கதை சொன்னான்.

“புளுவு… எல்லாம் புளுவு… உன்னைப் பத்தி எனக்குத் தெரியாது?”

“கம்மினாட்டிப் பசங்க… என் ஃபீலிங் அவனுங்களுக்குப் புரிஞ்சாதானே… நிம்மதியா தூங்ககூட முடியலை… மறு நாள் என்னப் பண்ணனும்ன்னு, ராத்திரி பன்னண்டு மணிக்கு எனக்கு லெக்சர் குடுப்பானுங்க.. அதாம்மா… புரிஞ்சுக்கடி செல்லம்..”

“ம்ம்ம்… ஆமாம்… கட்டிங்க்…கிட்டிங் வுட்டியா அவனுங்க கூட?”

“சேச்சே… உன் கையில அடிச்சு சத்தியம் பண்ணியிருக்கேம்மா… சோத்தை திண்ணுட்டு, ஜீரணம் பண்றதுக்கு கூட சாதா தண்ணியே குடிக்கலை தெரியுமா..”

“ஏன் ஒரே வழியா போய் தொலையறதுக்கா…”

“தண்ணின்னாத்தான் நீ கோச்சிக்கறியே…?”

“சரி… சரி… எப்படி இருக்கே…? நல்லா இருக்கியாப்பா..? சீனு… எனக்கு உன்னைப் பாக்கணும் போல இருக்குப்பா?”

“எனக்கும் அதே ஃபீலிங்கதான்டீ … இப்ப எங்கே இருக்கேம்மா”

“வீட்டுலதான் இருக்கேன்…?”

“அது தெரியலையா எனக்கு…”

“வெரண்டாவுல இருக்கேன்…”