கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 11 9

“நம்மப் பையன் சுகன்யாவை நேசிக்க ஆரம்பிச்சு ஆறு மாசம் ஆகலேன்னு சொன்னான். அவன் பொய் சொல்லலைடி; அந்த பொண்ணு அழகாயிருக்கா; நான் இல்லேன்னு சொல்லலை; நம்ம பையனுக்கு மட்டும் என்ன கொறைச்சல்; அவனும் ஸ்மார்ட்டாத்தான் இருக்கான்; ஆனா இதுக்கு மேலே அவங்க ரெண்டு பேரும் உண்மையா ஒருத்தரை ஒருத்தர் நேசிக்கிறாங்க; அதை அவங்க மூஞ்சி சொல்லுதுடி; செல்வா மனசு பூரா அந்த பொண்ணு இருக்கவேதான், கண்ணு முழிச்சவுடனே, வெக்கப்படாமா அவ பேரை சொல்லி முனகினான்.”
“ம்ம்ம் …
“ மல்லிகா அவர் முகத்தை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தாள். இவர் என்ன சொல்ல வரார் எனக்குப் புரியலையே?
“நீங்க என்ன சொல்றீங்க இப்ப? நீங்க வெக்கப்படறதுக்கும் அவங்க காதலிக்கறதுக்கும் என்ன சம்பந்தம்?” அவள் அவன் கன்னத்தில் தன் உதடுகளை தீற்றினாள்.
“கேளுடி நான் சொல்றதை” அவர் கை அவள் அடிவயிற்றை வருடிக்கொண்டிருந்தது. அந்த பொண்ணு முகத்தைப் பாத்தியா? என்ன வேதனையோட அவனை நெனைச்சு உட்க்காந்துகிட்டு இருந்தா? செல்வா அவ பேரை சொல்லி கூப்பிட்டான்னு தெரிஞ்சு அவனைப் பாக்கறதுக்கு உள்ளே ஓட்டமா ஓடினாளே, அப்பவும் அவ முகத்தை நான் பாத்தேன்; என் ஆள் பொழைச்சுட்டான்ங்கற நிம்மதி அவ முகத்துல இருந்தது; நாம உள்ளப் போனப்ப யாரைப் பத்தியும் கவலைப் படாம அவன் உதட்டுல முத்தம் குடுத்துக்கிட்டு நின்னாளே … அப்பவும் அவ மூஞ்சை நான் பாத்தேண்டி; அவ முகத்துல என்னை இவன் அடையாளம் தெரிஞ்சுக்கிட்டான்ற மகிழ்ச்சி; அந்த திருப்தியில, சந்தோஷத்துல அப்ப அவ முகத்துல இருந்த சின்ன வெக்கத்தையும், ஆசையும், தவிப்பையும் நான் பாத்தேன். இவ செல்வாவை உண்மையா காதலிக்கிறா; என் புள்ளையை இவ கடைசி வரைக்கும் நல்லபடியா பாத்துக்குவான்னு அப்பவே தோணிடிச்சி.”
“ம்ம்ம் … என் மனசை எப்படியாவது மாத்தி சுகன்யாவை என் புள்ளைக்கு கட்டி வெக்கணும்ன்னு நீங்க தீர்மானிச்சிட்டீங்க … அது எனக்கு நல்லாவே புரிஞ்சு போச்சு … சும்மா எங்கிட்ட நீளமா கதை சொல்லாதீங்க … நீங்க வேலையை விட்டுட்டு … மெகா சீரியலுக்கு கதை எழுதப்போகலாம்.” அவள் உதட்டில் கேலிப்புன்னகை மின்னியது.
“மல்லி … பீ சிரியஸ் … நான் இப்ப மனசு விட்டுப் பேசறேன் … நீ என்னை அப்புறமா கிண்டல் பண்ணலாம்”
“ம்ம்ம்ம் … சொல்லுங்க … நானும் சீரியஸாத்தான் பேசறேன்”
“யாருக்காகடி அந்த அளவுக்கு தவிப்பும் வேதனையும் அந்த பொண்ணுக்கு? அதெல்லாம் நம்ம புள்ளைக்காகத்தானே? உண்மையான ஆறு மாச காதல் அவங்க நடுவுல இருக்க வேண்டிய வெட்க்கத்தையும், தயக்கத்தையும், பெத்தவங்கன்னு நம்ம கிட்ட இருக்க வேண்டிய மரியாதையையும் தூக்கி எறிஞ்சிட்டப்ப, உன்னை நான் இருபத்தஞ்சு வருஷமா, என் மனசுக்குள்ள வெச்சி உண்மையா; உனக்காக மட்டும்; உன்ன நான் நேசிச்சுக்கிட்டு இருக்கேனே; நான் எதுக்குடி வெக்கப்படணும் உன்னைத் தொடறதுக்கு, தடவறதுக்கு; அதுவும் நம்ம பெட் ரூம்ல? யாருக்காக வெக்கப்படணும்?” நடராஜன் பேசிவிட்டு அவள் முகத்தை ஆசையுடன் பார்க்க, மல்லிகா ஒரு வினாடி எதுவும் பேசாமல் அவன் முகத்தை பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் உடல் புல்லரித்தது. என் மேல இவனுக்கு இவ்வளவு ஆசையா? நான் சரியான மக்கு மாதிரி அவனை கிண்டல் பண்ணிட்டேனே? எழுந்து உட்க்கார்ந்தவள், தன் உடலில் இருந்த நைட்டியை உறுவி கட்டிலின் அடுத்த முனையில் வீசினாள்.

Updated: March 28, 2021 — 9:30 am