நான் கர்ப்பமாக இருக்கிறேன் என்று சொன்னபோது, என் அம்மா அங்கு வர விரும்பினாங்க அப்படி இல்லையென்றால் என்னை இங்கு வரச் சொன்னார்கள். விசா பெறுவது சாத்தியமில்லை என்றும், பிரபு பணிபுரிந்த நிறுவனத்தில் நல்ல மருத்துவ சலுகைகள் இருப்பதாங்க சொல்லி சமாளித்தோம். அவுங்களை நம்பவைக்கவும் செய்தோம். என்னை இங்கே கவனித்துக் கொள்ள ஆளும் இறுக்கர்கள் என்று சொன்னேன். இருந்தாலும் என் அம்மாவுக்கு மகிழ்ச்சியாக இல்லை, என்னிடம் குறை சொல்லி ரொம்ப தொந்தரவு செய்தாள். ஆனால் நான் சிரமத்துடன் அவளை சமாளித்தேன். நாங்கள் உண்மையில் கையில் குழந்தையுடன் தான் திரும்பி வந்தோம். அனைத்து முறையான தத்தெடுக்கும் வேலைகளும் அங்கே செய்துவிட்டோம். அந்தக் குழந்தை அங்கு திருமணமாகாத இந்தியப் பெண்ணுக்குப் பிறந்தது. ”
இப்போது சரவணன் மற்றும் மீரா இருவரும் கவனத்துடன் அவள் பேசுவதை கேட்டுக்கொண்டிருந்தார்கள். பிரபு இன்னும் தலையை கீழே தொங்கியபடி இருந்தான், அநேகமாக அவமானத்தில். கோமதி தொடர்ந்தாள்.
“நான் கர்ப்பமாக முடியாதபோது, நாங்கள் இருவரும் சோதனை செய்தோம்.” “என் கணவருக்கு என்னை ஒரு தாயாக மாற்றும் திறன் இல்லை என்று தெரிந்தது. இது தெரிந்தால், எங்கள் இருவரின் பெற்றோர் மிகவும் கவலை படுவார்கள் என்று தெரியும், குறிப்பாக என் கணவர் அவுங்க குடும்பத்துக்கு ஒரே ஆண் வாரிசு என்பதால். எனவே, நாங்கள் இதை மறைக்க முடிவெடுத்தோம். எங்கள் பெற்றோரை தேவை இல்லாமல் வருத்தப்படுத்த நாங்கள் விரும்பவில்லை. ”
Interesting story pls continue
என்னது?! கதை வேறு கோணத்தில் பயணிக்க போவது போல் …. சரியில்லையே…..
Mannichidunga ram story next part eppo
இந்த கதையின் நாயகன் ஆயிரத்தில் ஒருவன் லட்சத்தில் ஒருவன் கதாசிரியர்
ற்க்கு நன்றி நான் ஒரு அவசர குடுக்கை தவறாக கதைய நினைத்தற்க்கு