இதற்க்கு பதில் கூறாமல் கோமதி கேட்டாள். “எனது நிலைமையைப் பற்றி நினைச்சி பாருங்க. நான் உங்கள் இருவரையும் கேட்கிறேன், “என்று சரவணன் மற்றும் மீரா, இருவரையும் பார்த்து கூறினாள்,” தாய்மையின் மகிழ்ச்சியை என்னால் அனுபவிக்க முடியாது நியாயமா? ”
சரவணன் மற்றும் மீரா இருவரும் சில நொடிகள் அமைதியாக இருந்தனர், பின்னர் சரவணன் பதிலளித்தான், ”சில நேரங்களில் விதி நம்மை பல துன்பங்களுக்கு ஆளாக்குகிறது, நாம் அதை ஏற்றுக்கொண்டு அதை சமாளிக்க கற்றுக்கொள்ள வேண்டும். சில நேரங்களில் சில விஷயங்களை மாற்ற முடியாது. ”
“நான் ஒப்புக்கொள்கிறேன், சில நேரங்களில் எதுவும் செய்ய முடியாது, ஆனால் ஒரு வழி இருந்தால் ஏன் அதை செய்யக்கூடாது” என்று கோமதி உறுதியாக கூறினாள்.
“நீ என்ன சொல்ல வர,” சரவணன் குழப்பத்துடன் கேட்டான்.
“என்னால் உண்மையாக ஒரு தாயாக இருக்க முடியும்….,” என்று அவள் இழுத்தாள்… நான் ஏன் உங்க மூலம் ஒரு தாயாக கூடாது. ”
“என்னது!!! … உனக்கு பைத்தியம் பிடிச்சிருக்கா..” சரவணன் கத்தியபடி திடீரென எழுந்து, அவன் கேட்ட வார்த்தைகளில் அதிர்ச்சியடைந்தான்.
“என்ன!!! என் கணவர்ரா!!, ”மீரா அதிர்ச்சியிலும் வலியிலும் மனதுக்குள் நினைத்தாள்.
Interesting story pls continue
என்னது?! கதை வேறு கோணத்தில் பயணிக்க போவது போல் …. சரியில்லையே…..
Mannichidunga ram story next part eppo
இந்த கதையின் நாயகன் ஆயிரத்தில் ஒருவன் லட்சத்தில் ஒருவன் கதாசிரியர்
ற்க்கு நன்றி நான் ஒரு அவசர குடுக்கை தவறாக கதைய நினைத்தற்க்கு