வேற ஒருவர் அவள் கணவன் செய்த மகத்தான தியாகத்தையும், அவள் மீது வைத்திருந்த அன்பையும் மீண்டும் நினைவூட்டும் போது மீராவின் கண்களில் இருந்து கண்ணீர் தானாக ஓடத் தொடங்கியது.
“என் கணவர் மீண்டும் இங்கு வராவிட்டால், உங்கள் மனைவியிடம், அவர்கள் செய்த துரோகம் பற்றி உங்களுக்குத் தெரிந்ததை நீங்கள் எப்போதும்மே வெளிப்படுத்தியிருக்க மாட்டீர்கள் என்பது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. நீங்க அவமானத்தையும் வேதனையையும் சகித்துக்கொண்டீர்கள், உங்க மனைவிக்கு எந்த வேதனையும் வர கூடாது என்று நீங்க காப்பாற்ற விரும்பினீர்கள். இப்படியும் ஒரு மனிதன்னா.”
இதைக் கேட்ட மீராவின் வாயிலிருந்து ஒரு வேதனை புலம்பல் தப்பியது. டாக்டர் அருள் மீராவுக்கு சிகிச்சையளிப்பதில் சிரமம் எடுத்துக்கொண்டாலும் முன்னேற்றம் மிகவும் மெதுவாக இருந்தபோது, இவை அனைத்தும் மீண்டும் அவன் மனைவியை மோசமாக பாதிக்கும் என்று சரவணன் அச்சப்பட்டான்.
“இது எல்லாம் முடிந்துபோன கதை, இப்போது ஏன் இந்த கேவலமான யோசனையுடன் இங்கே வந்திருக்க” என்று சரவணன் கோபமாக கூறினான்.
“கடந்த மூன்று, நான்கு மாதங்களாக நான் இதைப் பற்றி தீவிரமாக சிந்தித்து வருகிறேன். இது தொடர்பாக என் கணவருடன் நான் பல முறை சண்டை போட்டிருக்கேன். அவர் செய்த காரியத்துக்கு இதை எதிர்க்க அவருக்கு எந்த தார்மீக உரிமை இல்லை. தாய்மை அடையும் உரிமையை நான் இழந்துவிட்டதாக உணர்கிறேன். என் விருப்பத்துக்கு அவர் ஒப்பு கொள்வதை தவிர அவருக்கு வேறு வழியில்லை. அவர் என்ன செய்தார் என்பதை எனது குடும்பத்தினர் அறிந்து கொண்டால், இன்னும் மோசமான விளைவு ஏற்படும். ”
கோமதி சொல்வதை சரவணன் பொறுமையின்றி கேட்டான்.
Interesting story pls continue
என்னது?! கதை வேறு கோணத்தில் பயணிக்க போவது போல் …. சரியில்லையே…..
Mannichidunga ram story next part eppo
இந்த கதையின் நாயகன் ஆயிரத்தில் ஒருவன் லட்சத்தில் ஒருவன் கதாசிரியர்
ற்க்கு நன்றி நான் ஒரு அவசர குடுக்கை தவறாக கதைய நினைத்தற்க்கு