த்ரீ ரோசஸ் 6 57

சத்யம் சிவம் சுந்தரம்

நான் சத்தியம்.. என் கூட்டாளிகள் சிவம் மற்றும் சுந்தரம்..

நாங்கள் மூவரும் ஜெயிலில் இருந்து தப்பி வந்த கைதிகள்..

எங்களை போலீஸ் தீவிரமாக தேடுகிறது..

நாங்கள் செய்யாத கொலைகள்.. கொள்ளைகளுக்கு.. கணக்கே இல்லை..

இந்தியாவில் இருந்தால் நாங்கள் எப்படியும் திரும்ப போலீஸில் மாட்டிக்கொள்வோம்..

நாங்கள் சிறையில் இருந்து தப்பி வந்த நோக்கமே.. எப்படியாவது மலேசியாவுக்கு தப்பி செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் தான்.. ஆனால் எங்களுடைய விசா இன்னும் ரெடியாகவில்லை.. இன்னும் இரண்டு நாட்களில் ரெடியாகிவிடும் என்று எங்கள் மலேசியா கூட்டாளிகள் தகவல் கொடுக்க..

ஏதாவது ஒரு அமைதியான ஏரியாவில் ஆள் நடமாட்டமே இல்லாத தனி வீட்டில் தங்கி யாருக்கும் தெரியாமல் இரண்டு நாட்களுக்கு பதுங்கி இருக்கலாம் என்ற எண்ணத்தில் தான் இந்த ஒதுக்கு புறமான வீட்டை தேர்ந்தெடுத்தோம்..

நான் தான் முதலில் சென்று கதவை தட்டினேன்..

ஒரு சின்ன பையன் வந்து கதவை திறந்தான்…

என் கையில் இருந்த துப்பாக்கியை பார்த்ததும் பயந்தே விட்டான்..

நான் முரட்டு தனமாக அவனை உள்ளே தள்ளிவிட்டு நான் உள்ளே நுழைந்தேன்..

2 Comments

Comments are closed.