கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 17 11

“சரி … என்னப் பண்ணணுமோ அதை சீக்கிரமா பண்ணுங்க. அவ்வளவுதான் நான் சொல்லுவேன்.”மல்லிகா ஹாலில் சோஃபாவுக்கு பக்கத்தில் தரையில் படுத்திருந்தாள்.

“ஆரம்பத்துலயிருந்தே செல்வா மேரேஜ் விஷயம் ஒரே டிராமாவாத்தான் இருக்கு. எப்ப எந்த சீன் நடக்கும், அந்த சீன்ல எந்த ஆக்டர் உள்ள வராங்க, அவங்க எப்படி நடப்பாங்கன்னு தெரியலை. இப்ப இந்த நாடகத்துல, இன்னொரு புது சீன், ஒரு புது ஆக்டரோட ஆரம்பிச்சிருக்கு.” நடராஜன் மையமாக சொல்லிவிட்டு சிரித்தார்.

“என்னப்பா அது …” மீனா ஆர்வத்துடன் துள்ளி குதித்தாள்.

“என் மேனஜருக்கு ஒரு பொண்ணு இருக்காளாம். அவளும் கவர்மெண்ட் உத்தியோகத்துல சென்னையிலத்தான் இருக்காளாம். நம்ம பையன் செல்வாவுக்கு பார்க்கலாமான்னார். இப்ப அவருக்கு என்ன பதில் சொல்றதுன்னு எனக்குப் புரியலை.”

“இது என்னங்க புதுக்கதை – நீங்க என் கிட்ட சொல்லவேயில்லை?” மல்லிகா தன் கணவரை வியப்புடன் பார்த்தாள்.

“ஏண்டா செல்வா உனக்கு சுக்கிர தசை நடக்குதாடா?” மீனா மீண்டும் ஓவென சிரித்தாள்.

“சும்மா இருடி … எனக்கு சுகன்யா ஒருத்தியே போதும் …நான் அவளைத்தான் கட்டிக்கப் போறேன்.” அசட்டு சிரிப்பு சிரித்த செல்வா, தன் தாய், கடைசியில், சுகன்யாவை தன் மருமகளாக்கிக் கொள்ள சம்மதித்ததால் அவன் முகம் மகிழ்ச்சியில் ஓளிர்ந்து கொண்டிருந்தது.

“யாருங்க அது உங்க மேனேஜர்ங்கறீங்க …புதுசா வந்திருக்காரே அவரா … இல்லே?” மல்லிகாவையும் சற்றே மீனாவின் குதூகலம் தொற்றிக்கொண்டது.

3 Comments

  1. Kallyanam eapoo seekram sollunga romba boor adikuthu

  2. மொக்கை

  3. Cont.. mannichudunga ram story

Comments are closed.