கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 16 23

“என்ன சுகா, யோசனை ரொம்ப பலமா இருக்கு?”

“ஓண்ணுமில்லேப்பா …”

பின் சீட்டில் தன் உடலை குறுக்கி படுத்துக் கொண்டிருந்த சுந்தரியின் மனம் இங்குமங்கும் தாய் அலைந்து, கடைசியில் முந்தைய இரவில் தன் கணவனுடன் தனித்திருந்ததை நினைக்கத் தொடங்கியது. சுந்தரி ஒரு வினாடி மனசுக்குள் சிரித்துக்கொண்டாள். எனக்கென்ன பித்து கித்து புடிச்சிப் போச்சா? நேத்து குமார் வீட்டுக்கு வந்ததுலேருந்தே, புதுசா கல்யாணம் ஆனவ மாதிரி, மனசு இடைவிடாமா புருஷன் புருஷன், உடம்பு உடம்புன்னு இந்த ரெண்டைத் தவிர வேற எதையும் நினைக்க மாட்டேங்குது.

கோவில் பிரகாரத்துல நடக்கிறேன்! மனசு பக்கத்துல நடக்கற என் புருஷன் மேலத்தான் இருந்தது. அம்மன் சன்னிதியிலேயும் அவன் தான் மனசுல நின்னான். கடல் தண்ணியில நின்னு என் பொண்ணு கூட விளையாடறேன்னு பேரு … ஆனாலும், நிமிஷத்துக்கு ஒரு தரம் திரும்பி திரும்பி மணல்ல படுத்துக்கிடக்கற என் புருஷனைத்தான் பாத்துக்கிட்டு நிக்கறேன். அம்மா! உன் வீட்டுக்காரர் எங்கேயும் போயிட மாட்டாருன்னு … சுகன்யா என்னைப் பாத்து கிண்டலா சிரிக்கற மாதிரி நடந்துக்கிட்டேன். நான் பைத்தியமாத்தான் ஆகிக்கிட்டு இருக்கேன்.

சரிடி … சுந்தரி … ஏன் நீ உன்னையே சலிச்சுக்கறே? இதுல என்னத் தப்புடி? இத்தனை நாள் தனியா இருந்து கஷ்டப்பட்டே! பொண்ணு கல்யாணம் நல்லபடியா முடியணுமேன்னு உன் மனசு அந்த விஷயத்தை மட்டும் நினைச்சுக்கிட்டு இருந்தது. இப்ப உன் புருஷன் வந்து எல்லாத்தையும் நான் பாத்துக்கறேன்னுட்டான்! உன் மனசுல இருந்த பாரம் சட்டுன்னு எறங்கிப் போயிடவே மனசு இப்ப அவனையே சுத்தி சுத்தி வருது.

சுந்தரி! மனசோட வேலையே எதையாவது பத்திக்கிட்டு நிக்கறது தானேடி! அது எப்படி சும்மா இருக்கும்? அதான் குரங்காச்சே? கிளைக்கு கிளை தாவறதுதானே அதும் வேலை! இன்னைக்கு இப்ப அது உன் புருஷங்கற கிளையில நிக்குது!! நிக்கட்டும் விடுடி! அதும் போக்குல போகவிடுடி!!! இந்த வினாடியில நில்லு. ரெண்டு நாள் போனா … நீ ஸ்கூலுக்கு போய் பழையபடி, பசங்களை கட்டி மாரடிக்கணும் … இப்ப உன் மனசுக்குத் திருப்தியா எது படுதோ அதை செய்டீ.

இந்த வினாடியில நிக்கறதுன்னா என்ன? பழசை நினைக்கக் கூடாதுதானே? நான் ஏன் பழசை நினைக்கிறேன்? நேத்துங்கறது பழசுதானே? சுந்தரி தவித்தாள். நேத்து, இன்னைக்கு, நாளைக்கு; பழசு புதுசுன்னு எனக்கெதுக்கு இந்த விசாரமெல்லாம். இதுல எல்லாம் எனக்கு அவ்வளவு ஞானம் இல்லை. இதெல்லாம் ரகுவுக்கும், மாணிக்கம் அண்ணாச்சிக்கும்தான் சரிப்படும்.

இப்ப என் கூட என் புருஷன் இருக்கான். நானும் அவனும் குஷியா இருக்கோம். இப்போதைக்கு இது போதும். மத்ததைப் பத்தியெல்லாம் நான் ஏன் வேலையில்லாம சிந்திக்கணும்? சுந்தரிக்கு அவள் மனசு எழுப்பிய கேள்விக்கு திருப்தியான விடை, அந்த மனசிலிருந்தே கிடைக்காததால், மீண்டும் தன் மனதை அதன் போக்கில் போக விட்டாள். சுந்தரியின் மனது மீண்டும் நேற்றைய இரவையே சுற்றி சுற்றி வந்தது. அவள் நீண்டப் பெருமூச்செறிந்தாள்.

சுந்தரி தன்னைச் சுத்தப்படுத்திக்கொண்டு வந்தவள், திறந்திருந்த பால்கனி கதவை ஓசையெழுப்பாமல் மூடினாள். வெளிக்கதைவை ஒரு முறை சரிபார்த்தவள், ஒரு போர்வையை எடுத்து உதறி ஹாலில் படுத்திருந்த சுகன்யாவை போர்த்தினாள். காய்ச்சி வெச்சிருக்கற பாலைக் எடுத்து குடிக்க கூட முடியலை இவளுக்கு … இன்னைக்கு ஒன்பது மணிக்கெல்லாம் அடிச்சி போட்ட மாதிரி தூங்க ஆரம்பிச்சிட்டா; அப்படி ஒரு தூக்கம்; இப்ப எழுப்பினா அவ்வளவுதான்; என்னை கடிச்சி குதறிடுவா… ம்ம்ம் … என்னப் பொண்ணோ இது? ஊருக்கு போறதுக்கு முன்னே இவளை சுத்திப்போடணும், பெண்ணைப் பார்க்க பார்க்க அவள் மனதுக்குள் தாய்மை பொங்கியது.

பால் கிண்ணத்தை மீண்டும் ஸ்டவில் ஏற்றி லேசாக சூடாக்கினாள். இரண்டு டம்ளர்களில் ஊற்றி எடுத்துக்கொண்டு, ஹாலில் விடிவிளக்கை போட்டுவிட்டு, படுக்கையறையை நோக்கி நடந்தாள். குமார் கட்டிலில் படுத்து விட்டத்தைப் பார்த்துக்கொண்டிருந்தார்.

“என்னங்க … எழுந்து இந்த பாலை வாங்கிக்குங்க”

“ஹா .. வாடி …. என் கப்பக்கிழங்கே! … எல்லாத்தையும் சரியாத்தான் பிளான் பண்ணி வெச்சிருக்கே! பால் குடிச்சதுக்கு அப்புறம், அடுத்த அயிட்டம் என்னம்ம்ம்மா? குமார் குறும்பாக சிரித்தவாறே அவளை தன் பக்கம் இழுத்தார்.

“இதப் பாருங்க … சும்மா இந்த ஐயிட்டம் கியிட்டம்ன்னு பேசீனீங்க எனக்கு கெட்ட கோவம் வரும்..”

“சுந்து உன்னை அயிட்டம்ன்னா சொன்னேன்? பால் குடிச்சதுக்கு அப்புறம் தானே எல்லாரும் வேலையை ஆ… ஆரம்பிப்பாங்கன்னு சொல்ல வந்தேன் … அவர் மெலிதாக நகைத்தார்.

“போதும் … போதும் … பாலை குடிச்சாமா … போத்திக்கிட்டு படுத்தமான்னு தூங்கற வேலையைப் பாருங்க; அய்யோ பாவம் ! வயசாய் போச்சே! போட்ட ஆட்டத்துல களைச்சுப் போயிருப்பீங்களேன்னு … பாலைக் கொண்டாந்து குடுத்தா … திருப்பியும் என் அடிமடியில கையை வெக்கறீங்க …” சுந்தரி அவர் கையை தன் இடுப்பிலிருந்து எடுத்து வீசினாள். அவள் முகம் குங்குமமாக சிவந்திருந்தது.

“செல்லம் கோச்சிக்காதடி; பட்ட்ட்டூ … நீ என் பட்டுல்லே? கொஞ்சம் கிட்ட வாயேன்.”

“ரொம்பத்தான் கொஞ்சறீங்க … என்னமோ காத்தாலத்தான் தாலிகட்டின மாதிரி” சுந்தரி நொடித்துக்கொண்டாள்.

“சட்டுன்னு கிட்ட வாடி, உன் கழுத்துக்கு பக்கத்துல என்னடி ஓடுது … கட்டெறும்பா?”