கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 16 23

“ அவள் அவர் மார்பில் குத்தி முனகினாள்.

“உன் கிட்ட எப்பவும் இது ஒரு பிரச்சனைடி … எத்தனை வருஷம் ஆனாலும், என்னைக்கும் நீ சில விஷயத்துல மாறவேமாட்டேடி …” அவர் அவளை இறுக்கியணைத்து, ஒசையெழுப்பி அவள் உதட்டில் முத்தமிட்டவர், தன் லுங்கியைத் தேடி இடுப்பில் சுற்றிக்கொண்டு பாத்ரூமை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.
“அப்பா … தூங்கிட்டீங்களா …?” சுகன்யாவின் குரல் கேட்டு, நேற்றைய இரவு தன் மனைவியுடன் அனுபவித்த தேக சுகத்தை, தன் விழிகளை மூடி அசைப் போட்டுக்கொண்டிருந்த குமாரசுவாமி, மெதுவாக எழுந்து உட்க்கார்ந்தார்.

“இல்லம்மா … சும்மா கண்ணை மூடி உடம்பை தளர்த்திக்கிட்டிருந்தேன். உங்க ஜலக்கீரிடையெல்லாம் முடிஞ்சுதா?”

“ஆமாம் … உங்களை நம்பி ரெண்டு பேரும் எங்க பையெல்லாம் விட்டுட்டு போனா, நீங்க நித்திராசனத்துல இருக்கீங்க … எவனாவது எல்லாத்தையும் தூக்கிட்டு போயிருந்தா தெரியும்? பர்ஸ், போன், வீட்டு சாவி, கார் சாவி எல்லாம் அதுலதான் இருக்கு …” சுந்தரி அலுத்துக்கொண்டாள்.

“அப்படியெல்லாம் விட்டுட மாட்டேண்டி … நீ ஆரம்பிச்சுடாதே உன் டீச்சர் வேலையை!.” அவர் எழுந்து உடலில் ஒட்டியிருந்த மணலைத் தட்டிக்கொண்டு எழுந்தார்.

“சுந்து வீட்டுக்கு கிளம்பலாமா செல்லம்?”

“ம்ம்ம் … ஆனா போற வழியிலேயே நல்ல ஹோட்டலா பாருங்க … ஒரு வழியா சாப்பிட்டு போகலாம் … வீட்டுக்குப் போய் என்னால இன்னைக்கு சமைக்க முடியாது …” சுந்தரி காற்றில் பறந்து தன் முகத்தில் அடித்துக்கொண்டிருந்த முடிக்கற்றைகளை சேர்த்து முடிந்து கொண்டிருந்தாள்.

“ஆமாப்பா … எனக்கும் ஒரே டயர்டா இருக்கு … போனவுடனே படுத்துத் தூங்கினாத்தான், நாளைக்கு ஆபீசுக்கு போக முடியும் …” சுகன்யாவும் தன் தாயுடன் சேர்ந்து கொண்டாள்.

சுகன்யா, தன் தந்தையின் பக்கத்தில் முன் சீட்டில் உட்க்கார்ந்து கொள்ள, குமாரசுவாமி, மவுனமாக காரை ஓட்டிக்கொண்டிருக்க, சுகன்யா தன் விழிகளை மூடி தீவிரமாக எதையோ யோசித்துக்கொண்டிருந்தாள்.