கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 15 12

“போதுண்டி உன் கிண்டல்லாம் … நான் உன் அம்மான்னு ஞாபகம் இருக்கட்டும். உன் கூட இருக்கப் போறது ஒரு வாரம்தானே! அதனால லிமிட்டா அஞ்சு புடவை எடுத்துக்கிட்டு வந்தேன். அதுகளையே துவைச்சு துவைசு கட்டிக்கிட்டேன். இன்னைக்கு என்னமோ தோணுச்சு, புதுசு எடுத்து கட்டிக்கிட்டேன். இப்ப உன் கிட்ட படறேன்.” சுந்தரி புன்முறுவலுடன் தன் புடவை மடிப்பை சரி செய்து கொண்டிருந்தாள்.

“அம்மா; ஒரு நாளைக்கு, என்னை நீ உன் சினேகிதின்னு நெனைச்சுக்கோயேன். இப்ப நான் உன் பொண்ணு இல்லே. போதுமா? கீழ் தட்டுல நீ மாமாகிட்ட குடுத்தனுப்பிச்ச உன் பட்டு சேலைங்க நாலு அஞ்சு இருக்கும்மா. நான் பட்டுப் புடவை கட்டறதே இல்லம்மா. உனக்கு எது வேணுமோ அதுல ஒண்ணை எடுத்து நாளைக்கு கோவிலுக்கு போகும் போது கட்டிக்கம்மா.”

“சரிடிக் கண்ணு. நாளைக்கு நீயும் பட்டுப் புடவைதான் கட்டிக்கணும். பார்டர்ல சிவப்புல குட்டி குட்டி மயில் ஆடற மாதிரி இருக்குமே? அந்த மாம்பழ கலர் சேலை, அது உனக்கு நல்லா எடுப்பா இருக்கும்டி. கூடவே மறக்காம அந்த புது செயினையும் எடுத்து போட்டுக்கோ. அப்பாவுக்கு காமிச்ச மாதிரி இருக்கும்.”

“ம் … ம்ம்ம்ம். அம்மா … மணி எட்டாச்சு … எனக்கு பசிக்குதும்ம்மா. அப்பாவுக்கு போன் பண்ணவா? அவர் எங்கே இருக்காரோ இப்ப?”

“வேணம்மா. நீ சாப்பிடும்மா. அவர் வரும் போது வரட்டும். அப்பா வந்ததும் அவர் கூட நான் சாப்பிட்டுக்கிறேன்.” சுந்தரி தன் பெண்ணுக்கு சாதத்தை தட்டில் போட்டு, கத்திரிக்காய் வத்தல் குழம்பை ஊற்றி, சுட்ட அப்பளத்தையும் எடுத்துக் கொடுத்தாள்.

“அம்மா, கத்திரிக்காய் எண்ணைய் குழம்பு சூப்பர். அதுங்கூட வேணி பண்ண அவியல் தொட்டுக்கறதுக்கு க்ளாஸ்ஸா இருக்கு. நீங்க ரெண்டு பேரும் சாப்பிடும் போது ஞாபகமா அவியல் போட்டுக்கோங்க. கிண்ணத்துல நிறைய இருக்கு.”

சுகன்யா தன் நாக்கை சப்புக்கொட்டிக்கொண்டு சாப்பிட்டாள். சாப்பிட்ட பின் உடையை மாற்றிக்கொண்டவள், ஹாலிலேயே பாயை விரித்து படுத்துக்கொண்டாள். கையில் அன்றைய நீயூஸ் பேப்பரை எடுத்தவள், ரெண்டு நிமிடங்களில் செய்தித்தாள் தன் மார்பின் மேல் விழுந்து காற்றில் பறக்க சன்னமான குறட்டை ஒலியை எழுப்பிக்கொண்டு தூங்க ஆரம்பித்தாள்.

என்னப் பொண்ணோ இவ! இவ கிட்ட என்னால மல்லடிக்க முடியலை; எல்லாத்தையும் அவுத்துப் போட்டுட்டு இந்த மாதிரி மெல்லிசா நைட்டியை போட்டுக்காதேடின்னு சொன்னா கேக்க மாட்டேங்கிறா; காத்துல துணி தொடை வரைக்கும் ஏறிக்குது; மனதுக்குள் புலம்பிக்கொண்டே பெண்ணின் உடையை சரி செய்த சுந்தரி, ஹாலில் எரிந்து கொண்டிருந்த ட்யூப் லைட்டை அணைத்தாள். ஓசையெழுப்பாமல் மெதுவாக நடந்து மொட்டை மாடிக்கு வந்து ஆகாயத்தைப் பார்க்க ஆரம்பித்தாள்.

சுந்தரி மொட்டை மாடியில் நின்று வானத்தைப் பார்வையால் அளவெடுத்துக் கொண்டிருந்தாள். உதட்டில் தவழும் வசீகரமான புன்னகையுடன், புதிதாக மலர்ந்த ரோஜாவைப் போல் மனதில் வீசும் வாசம் முகத்தில் தெரிய, அவள் வானத்தில் மின்னிக் கொண்டிருந்த நட்சத்திரங்களை எண்ணிக் கொண்டிருந்தவளின் உதடுகள் மென்மையான குரலில் ஏதோ ஒரு சினிமாப் பாடலை முணுமுணுத்துக் கொண்டிருந்தன.

கரிய மேகக் கும்பல்கள் ஒன்றன் பின் ஒன்றாக மெதுவாக நகர்ந்து கொண்டிருக்க, ஒரு இளம் பெண் தன் காதலனை திருட்டுத்தனமாக சன்னல் திரைக்கு பின்னால் ஒளிந்து நின்று பார்ப்பது போல் நிலவானது அவ்வப்போது மேகத்திரள்களிலிருந்து வெளிப்பட்டு, தன் சுகமான வெளிச்சத்தால் பூமியைப் குளிப்பாட்டிக் கொண்டிருந்தது. சுந்தரியின் உதடுகள் சினிமா பாடலை முணுமுணுத்தாலும், அவள் மனம் தன் கணவனின் வரவை எதிர் நோக்கி அலை பாய்ந்து கொண்டிருந்தது.

ம்ம்ம் … எவ்வளவு காலமாச்சு? இப்படி என் புருஷனுக்கு புடிச்ச மாதிரி ட்ரஸ் பண்ணிக்கிட்டு, மனசுல ஆசையோட அவனுக்காக காத்திருந்து? எனக்கு அப்படி ஒண்ணும் வயசான மாதிரி தெரியலையே? என் உடம்பு இன்னும் எடுப்பாத்தான் இருக்கு? மார் கொஞ்சம் பெருத்து இருக்கா? பிரா சைசை மாத்தணும் போல இருக்கு; இப்ப வெச்சிருக்கற பிராவெல்லாம் கொஞ்சம் இறுக்கமா இருக்கற மாதிரி இருக்கு; சில சமயத்துல குனிஞ்சு நிமிரும் போது மூச்சு முட்டுது; இடுப்புல இலேசா சதைப் போட்டிருக்கேனா … தெரியலை? ம்ம்ம் … இடுப்புல ஒரு சின்ன மடிப்பு விழுந்துடுத்து; இலேசா அடிவயிறு முன்னாடி வர ஆரம்பிச்சிருக்கு; இதையெல்லாம் நான் யாருக்கிட்டே போய் கேக்கறது? எனக்குன்னு க்ளோஸா எந்த பிரண்டும் இல்லே.