இதை கேட்டு என் அம்மாவும் அப்பாவும் சிரித்து விட பொறுங்கள் என்று பாய்ந்தேன். நானா அமைதியான பெண்.
“நீ என்ன சொல்லுற,” என்று அவரை பார்த்து கேட்டார்கள்.
அவர் தன் அம்மாவிடம் எதோ கிசுகிசுத்தார். அவர்கள் பதிலுக்கு என்னமோ சொன்னாங்க. இவர் மறுபடியும் எதோ சொன்னார்.
அவர் அம்மா முகத்தில் சங்கடம் தெரிந்தது. “இவன் இன்னும் இரண்டு மூன்று நாள் டைம் கேட்கிறான்,” அவர்களின் குரலில் அவர்கள் சங்கடம் தெரிந்தது.
எனக்கு கோபம் சட்டென்று வந்தது. அம்மா என் கையை இறுக்கி என்னை அமைதியாக இருக்கும் படி செய்கையில் சொன்னார்கள்.
“இவன் என்ன பெரிய இவானா, எனக்கு மேல நல்ல பொண்ணு கிடைத்திடுமோ?”
நான் தரையை பார்த்தாலும் மனதில் கோபம் கொந்தளித்து எரிந்தது. அதற்கு பிறகு யாராலும் சகஜமாக பேச முடியவில்லை.
“சரிங்க, கூடிய சீக்கிரம் தகவல் சொல்லி அனுப்புறோம் ,” என்று அவர் அப்பா கூறி எல்லோரும் புறப்பட்டார்கள்.
சந்தோசமாக வந்தவர்கள் கொஞ்சம் வருத்தத்தோடு புறப்பட்டார்கள்.
அவர்கள் போன பிறகு நான் என் பெற்றோரிடம் கத்தினேன்,”இதற்கு தான் நான் இதற்கு சம்மதிக்கல.”
“கோப படாத டி பொண்ணுணா பொறுத்து இருந்து தான் ஆகணும். பார்ப்போம் என்ன சொல்லுறாங்க,” இது என் அம்மா.
“நிச்சையமா அவங்களுக்கு உன்னை பிடிக்கும் மா,” இது என் அப்பா.
“இனி அவங்க வேணும் என்றாலும் நான் ஒத்துக்க மாட்டேன்,” இது நான்.
அடுத்த நாள் ஒரு மூன்று மணி போல எனக்கு ஒரு போன் காள் வந்தது. அது நான் அறியாத நம்பர் என்பதால் நான் எடுக்கவில்லை. மறுபடியும் அந்த நம்பரில் இருந்து காள் வந்தது. சரி யார் என்று பாப்போம் நினைத்து எடுத்தேன்.
“ஹலோ ஸ்வதாவா?”
“யெஸ் ஸ்பிகிங்,” என்றேன்.
Where are Qatar