“ஸ்வதா சீக்கிரம் இன்னைக்கு வீட்டுக்கு வந்திடு உன்னை இன்னைக்கு பெண்ணு பார்க்க வராங்க,” என்ற என் அம்மா எனக்கு போன் செய்தார்கள்.
“அம்மா நினைவிருக்கலா, நீயும் அப்பாவும் வற்புறுத்தியதால் தான் நான் ஒப்பு கொண்டேன்…,” என்று நான் பேசிக்கொண்டிருக்கும் போதே அம்மா குறுக்கிட்டார்.
“தெரியும் டி, அனால் பையன் நல்ல வேளையில் இருக்கான், கை நிறைய சம்பாதிக்கிறான், குடும்பமும் நல்ல குடும்பம் நிச்சயமா உனக்கு பையனை பிடிக்கும்.”
“அம்மா, நான் சொல்ல வந்ததா சொல்ல விடு, எனக்கு பையன பிடிக்கில அப்போவே அவர்கள் கிட்ட சொல்லிவிடுவேன்.”
“அடியே அப்படி எதுவொம் சொல்லிவிடாதே, ரொம்ப சங்கடமா போய்விடும், உனக்கு விருப்பம் இல்லை என்றல் வேற ஜாதகமோ என்னவோ பிறகு சொல்லி சமாளிக்கலாம்.”
“என்ன உளருற, ஜாதகம் பார்த்து தானே வர சொன்னிங்க.”
“சரி சரி வேற சாக்கு சொல்லலாம், அனால் நான் பையன் போட்டோ பார்த்தேன். நிச்சயமா உனக்கு பையனை பிடிக்கும்.”
“நீ மட்டும் அதையெல்லாம் பாரு என்னமோ உனக்கு மாப்பிளை பார்க்கிற மாதிரி, என் கிட்ட காமிக்காத.”
“அடி வாங்க போற, பேசுற பேச பாரு. புரோக்கர் இடம் ஒரே போட்டோ தான் இருந்தது அத எடுத்திட்டு போய்ட்டாரு. நீ தான் நேரில் பார்க்க போறியே.”
“போட்டோ கொடுப்பதில் கூட கஞ்சனை தான் எனக்கு மாப்பிள்ளை பார்த்திருக்கிய?”
“நீ ஓவெற பேசாதே ஒழுங்கா சீக்கிரம் இன்னைக்கு வா.”
இதை கேட்டு கொண்டிருந்த என் தோழி கவிதா கேட்டல்,” இன்னைக்கு உன்னை பெண் பார்க்க வராங்கல?”
Where are Qatar