எனக்கு ஒருத்தர பிடிச்சுட்டா போதும் நான் அவங்கள விடவே மாட்டேன் 4 63

ஹேமா : இப்ப தான் எழுந்தேன் இனிமேல் தான் சாப்பிடணும்

ஹேமா அம்மா :……….

ஹேமா : கோவிலுக்கு கூட்டிட்டு போறேன்னு சொல்லிருக்காரு மா .அப்புறம் ஏதோ சர்ப்ரைஸ்னு சொல்றாரு என்னன்னு தெரியல

ஹேமா அம்மா :……….

ஹேமா : குடுமா

ஹேமா அப்பா :………..

ஹேமா : தேங்க்யூ பா

ஹேமா அப்பா :………..

ஹேமா : தேங்க்யூ சோ மச் பா. எங்கப்பா இருக்கீங்க

ஹேமா அப்பா :………

ஹேமா : ஓகே பா. அருண் எப்படி இருக்கான்

ஹேமா அப்பா :………..

ஹேமா : அக்கா இன்னும் கால் பண்ணல பா. பண்ணுவா.

ஹேமா அப்பா :……….

ஹேமா : அவர் இப்பதான் பா வெளியில போறாரு

ஹேமா அப்பா :………..

ஹேமா : சரிப்பா வச்சிடறேன்.

என்று போனை வைத்துவிட்டு தலையை வாரினாள் பின் போனை எடுத்து மொபைல் டேட்டா ஆன் செய்தால் .வாட்ஸ் அப்பில் சென்று பார்க்க பர்த்டே விஷஸ் இருந்தது .அதில் உமா அக்கா, அருண், ரமேஷ் மாமா என்று அனைவரிடமும் இருந்து பர்த்டே விஷஸ் வந்துள்ளது. பின் ஒரு புது நம்பரில் இருந்து மெசேஜ் வந்து இருக்க அவள் உள்ளே சென்று பார்த்தால் அதில் “hi,I am Sekar” என்றும் ஒரு போட்டோவும் இருந்தது. ஹேமா அந்த போட்டோவை லோட் செய்து பார்க்க அதில் அவள் சேகருடன் எடுத்த செல்பி இருந்தது .