இதுக்கு முன்னாடி பொண்ணுங்கள பாத்தது இல்லையா? 6 126

கலை: ப்பா!! அது.. நானும் கிஷோரும் லவ் பண்றது அவனுக்கு பிடிக்கல.. எங்க கிட்ட வம்பு பண்ணான், கிஷோரை அசிங்க அசிங்கமா பேசுனான்.. நான் அவனை அடிச்சேன்.. அதுக்கு தான் அவன் பழி வாங்க ட்ரை பண்ணி எதோ பன்றான் ப்பா.. அவன் அம்மா கிட்ட (தயங்கி நின்றாள்)..

மஞ்சு: என்னது அடிச்சியா?? ஏங்க இவ அந்த கிஷோரை கட்டிக்கிட்டு நாசமா போக கூடாது ன்னு அந்த பையன் கிட்ட சொன்னேன்.. அதுக்கு அந்த தம்பி அக்கறையா கேட்டுட்டு, உதவி பண்றேன் ன்னு சொல்லுச்சு.. அதுக்கு தான் இந்த ஓடுகாலி இப்போ அந்த தம்பிய இல்லாததையும் பொல்லாததையும் சொல்லுறா.. எந்த உலகத்துலயாச்சும் அடியும் வாங்கிட்டு வேலையும் கொடுத்து அந்த குடும்பத்துக்கு நல்லதும் பண்ணுவாங்களா? இவ சொல்றதுல ஒண்ணாச்சும் நம்புற மாதிரி இருக்கா? புதுசா லவ் பண்ணிக்கிட்டு அவன் சொல்றதுக்கெல்லாம் இப்படி ஆடுறா.. அவன் தான் இவளை என்னென்னமோ சொல்லி மயக்கி வச்சிருக்கான்..

ராஜாராம்: நீ வாய வச்சிக்கிட்டு சும்மா இரு.. புரியாம எதையும் பேசாத.. மாப்ள அந்த மாதிரி லாம் கிடையாது.. நான் விசாரிச்சும் பாத்துட்டேன்.. மாப்ள வீட்டுல இருந்து முறைப்படி பொண்ணு பாக்க வர சொல்லிருக்கேன்.. அவங்க வந்தப்புறம் உன் ஓட்ட வாய வச்சு ஏதாச்சும் உளறி தொலச்சுறாத..

ராஜாராமிற்கு கிஷோரின் மேல் அசையாத நம்பிக்கை இருந்தாலும் தற்போது ராகுலின் மேல் கலை வைத்த குற்றச்சாட்டை நம்ப முடியவில்லை.. கலை குழம்பி போய் இருக்கிறாள் என்று நினைத்தார்..

ராஜாராம்: சரி டா குட்டி.. நீ அந்த பையனை அடிச்ச.. அதுக்கு அந்த பையன் என்ன பண்ணான்..

கலை: ஒன்னும் பண்ணல ப்பா.. நாங்க வந்துட்டோம்.. அதான் அவன் இப்போ வேற மாதிரி பழி வாங்க ட்ரை பண்றான் ப்பா..

ராஜாராம்: (சிறிதும் நம்பாமல் கலையின் நடவடிக்கை நினைத்து பெருமூச்சு விட்டு) ஏன் டா குட்டி.. என்னாச்சு.. உண்மையா என்ன நடந்துச்சு ன்னு சொல்லு.. அப்பா எப்போவும் உனக்கு தான் சப்போர்ட் பண்ணுவேன்..

கலை: ப்பா என்னப்பா நீங்க எதுவும் நீங்க நம்ப மாட்டிங்குறீங்க.. நான் உண்மைய மட்டும் தான் சொல்றேன்.. கிஷோர் கிட்ட வேணா கேளுங்க.. சரி கிஷோர் எனக்கு தான் சப்போர்ட் பண்ணுவான் ன்னு நினச்சு நீங்க அவனையும் நம்ப மாட்டீங்க.. அப்போ அந்த சுபர்..

“வேற யாரு ம்மா??“ என்று ராஜாராம் கேக்க “இப்பொழுது வீட்டில் பிரளயம் வெடித்ததுக்கு காரணமே அந்த சுபர்ணா தான்” என்று நினைத்து “வேற யாரும் இல்ல ப்பா.. விடுங்க நான் என்ன சொன்னாலும் நம்ப மாட்டீங்க”

ராஜாராமிற்கு தன் மகளை நினைத்து கவலைப்பட்டு “சரிடா குட்டி.. அவன் அம்மா கிட்ட ன்னு என்னமோ சொல்ல வந்த.. அவன் அம்மாகிட்ட என்ன??

கலை: அம்மா கிட்ட தப்பா நடக்க பாக்குறான் ப்பா..

தன் தோழியின் மகனை பத்தி கலை அவதூறாக பேசப்பேச மஞ்சுவுக்கு உடல் முழுக்க சூடான எண்ணெய் ஊத்துவது போல இருக்க.. வேகமாக வந்து கலையின் தலை முடியை பிடித்து “என் பிரண்ட் ஓட புள்ளையை பத்தி இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசுன உன்ன கொன்னே போட்ருவேன் டி”

மஞ்சுவை பிடித்து தள்ளிவிட்டு நிதானத்தை மறந்த கலை வார்த்தைகளை கவனமின்றி விட்டாள்.. “ஆமா உனக்கும் அவன்மேல ஆசை இருக்கு போல.. அதான் அவனுக்கு இவ்ளோ சப்போர்ட் பண்ற”

“பளார்ர்ர்ர்” என்ற சத்தம் வீட்டை நிறைத்தது..

ராஜாராம்: பெத்த அம்மா வ இப்படி பேச உனக்கு நாக்கு கூசல..

கலை தனது கையை கன்னத்தில் பொத்தியபடி அதிர்ந்து போய் சிலையாக இருந்தாள்.. அவளது அப்பா அவளது கன்னத்தில் அறைந்தார் என்ற நிகழ்வை அவளால் நம்ப முடியவில்லை.. அதிர்ச்சியில் அவள் வாய் திறந்து இருக்க, அவள் கண்கள் ராஜாராமை “நீங்களா அடிச்சீங்க” என்பது போல பார்த்துக் கொண்டிருந்தது..

“ப்பா” என்று அவள் உதடுகள் உச்சரிக்க, அவள் கண்களில் இருந்து கட்டுப்பாடின்றி நீர் வடிந்து கொண்டே இருந்தது..

1 Comment

  1. தலைப்பு பிழை

Comments are closed.